Home » Archives by category » தமிழகம் (Page 207)

பொங்கல் பண்டிகைக்கு நெல்லைக்கு சிறப்பு ரயில்!

Comments Off on பொங்கல் பண்டிகைக்கு நெல்லைக்கு சிறப்பு ரயில்!

தெற்கு ரயில்வே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லைக்கு மற்றொரு சிறப்பு ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் சிறப்பு ரயில் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ஜனவரி 14-ஆம் தேதி இரவு 10.20 மணிக்கு கிளம்பும் என்றும் நெல்லைக்கு மறுநாள் காலை 9 மணிக்கு சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறு மார்க்கத்தில் நெல்லையிலிருந்து […]

Continue reading …

நடிகை குஷ்புவின் கருத்து!

Comments Off on நடிகை குஷ்புவின் கருத்து!

நடிகை குஷ்பு அரசு செய்யும் தவறை தட்டி கேட்கும் கவர்னர் நமக்கு கிடைத்திருக்கின்றார் என்று கூறியுள்ளார். நடிகை குஷ்பு கன்னியாகுமாரியில் விவேகானந்தரின் 160வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது “ஒரு அரசாங்கம் தவறு செய்யும் போது தட்டிக் கேட்கவும் அரசாங்கத்தின் செயல்களை மேற்பார்வை செய்யவும் தான் கவர்னர் இருக்கிறார். அவ்வகையில் அரசின் தவறுகளை தட்டிக் கேட்பவராக நம்முடைய கவர்னர் இருக்கிறார். சட்டசபையிலிருந்து கவர்னர் வெளியே போகும்போது அமைச்சர் பொன்முடி […]

Continue reading …

மேலும் ஒரு பிரபலம் பாஜகவில் நீக்கம்!

Comments Off on மேலும் ஒரு பிரபலம் பாஜகவில் நீக்கம்!

பாஜகவிலிருந்து சமீபத்தில் காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டார். இதையடுத்து மேலும் ஒரு பிரபலம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக துணை தலைவர் ஆரூர் ரவி நீக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அண்ணாமலை அறிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பாஜக ஆலோசனை கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் தலைவர் பாலசுந்தரம் ஆதரவாளர் ஆரூர் ரவி என்பவருக்கும் புதிய தலைவர் அருள் ஆதரவாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனை அடுத்து […]

Continue reading …

வைரலாகும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ!

Comments Off on வைரலாகும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ!

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திமுக அரசு தயாரித்த கவர்னர் உரையை கவர்னர் படிக்கவில்லை என்றும் கவர்னர் ஒரு சில வார்த்தைகளை விட்டுவிட்டார் என்றும் சில வார்த்தைகளை இணைத்தார் என்றும் குற்றம் சாட்டியுள்ளது. ஒரு அரசு தயாரித்த உரையை கவர்னர் படிப்பதுதான் மாண்பு என்றும் அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதே திமுகவினரின் வாதமாக உள்ளது. திமுக எதிர்கட்சியாக இருக்கும்போது கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் […]

Continue reading …

சு.வெங்கடேசன் எம்.பி. வங்கியில் போராட்டம்!

Comments Off on சு.வெங்கடேசன் எம்.பி. வங்கியில் போராட்டம்!

மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு வெங்கடேசன் சென்னையில் உள்ள வங்கியில் திடீர் என உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். வங்கித்தேர்வு பொங்கல் அன்று நடைபெற உள்ளதால் அத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு வெங்கடேசன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு உயர் அதிகாரிகள் அழைத்தனார். இந்த பேச்சு வார்த்தையில் உயர் அதிகாரிகள் பங்கேற்காததால் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து விரைவில் இந்த பேச்சுவார்த்தையில் […]

Continue reading …

சட்டப்பேரவை ஒத்திவைப்பு!

Comments Off on சட்டப்பேரவை ஒத்திவைப்பு!

கடந்த சில நாட்களாக நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டின் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் கடந்த திங்கட்கிழமை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதன் பிறகு அடுத்தடுத்த நாள்களில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது. இன்றுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்ததாகவும் சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் […]

Continue reading …

தொல். திருமாவளவன் கைது!

Comments Off on தொல். திருமாவளவன் கைது!

அதிரடியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளன் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பு ஏற்படுத்துள்ளது. மத்திய அரசு தமிழ்நாடு கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை கட்சிகள் சார்பில் ஜனவரி 13ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை இடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று சென்னை கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் […]

Continue reading …

அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு?

Comments Off on அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு?

பாஜக தமிழ்நாட்டின் தலைவராக கடந்த 2021ம் ஆண்டு அண்ணாமலை தேசியத்தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் நியமிப்பட்டார். தற்போது, பாஜக ஆளுங்கட்சிக்கு எதிராக பல புகார்கள், விமர்சனங்களும் தெரிவித்து வருகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலலைக்கு மதத்தலைவர்கள் மற்றும், மாயோயிஸ்டுகளிடம் இருந்து மிரட்டல்கள் வருவதாக உளவுத்துறை கூறியதாகவும், இதையடுத்து, ஒய் பிரிவிலுள்ள அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த இசட் பாதுகாப்பு பிரிவில் 33 கமாண்டோக்கள் 24 மணி நேரமும் […]

Continue reading …

அமைச்சர் சக்கரபாணி தகவல்!

Comments Off on அமைச்சர் சக்கரபாணி தகவல்!

ரேசனில் விரைவில் கருவிழி மூலம் பொருட்கள் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பொங்கலை முன்னிட்டு ரேசன் கடைகளில் சிறப்பு தொகுப்புகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் கண் கருவிழி மூலம் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Continue reading …

கவர்னர் நாளை டில்லி பயணம்!

Comments Off on கவர்னர் நாளை டில்லி பயணம்!

நாளை தமிழக கவர்னர் ரவி டில்லி பயணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தமிழக சட்டசபை கூடிய போது ஆளுநர் உரையின்போது எம்எல்ஏக்கள் கூச்சல் குழப்பம் விளைவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதனை சபாநாயகர் அப்பாவு கண்டிக்காமல் அமைதியாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆளுநர் அவையில் இருக்கும்போதே அவருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்ததை அடுத்து ஆளுநர் அவையிலிருந்து வெளியேறினார். இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் நாளை டில்லிக்கு கவர்னர் ரவி […]

Continue reading …