
போக்குவரத்து போலீசார் கடந்த 2020 மற்றும் 2021ம்- ஆண்டுகளை காட்டிலும் 2022ம் ஆண்டில் வாகன விபத்துகள் குறைந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், சாலையில் பயணிக்கும் போது வாகன ஓட்டிகள் விபத்தைக் குறைக்கும் நோக்கில், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகை அதிகரித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. சமீபத்தில் தமிழகத்திலும் இது அமல்படுத்தப்பட்டது. ஆனால், இதையும் மீறி சிலர் பயணித்து, விபத்தில் சிக்குகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இதுகுறித்து அறிக்கையை தமிழக போக்குவரத்து காவல்துறை […]
Continue reading …
ஆளுநர் ஆர்.என்.ரவியை “ஆளுநராக செயல்படுங்க.. பாஜக தலைவராக அல்ல!” என டி.ஆர்.பாலு அட்வைஸ் செய்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீப காலமாக பேசும் கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இதை தொடர்ந்து அவருக்கு பதிலளிக்கும் வகையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசியுள்ளார். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது இந்து மத ரீதியாகவும், தமிழக அரசியலை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாகவும் பேசி வருவது திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில் […]
Continue reading …
காதலி திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் உயிரோடு தீ வைத்து கொளுத்தியுள்ளார் காதலன். இக்கொடும் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தீயில் கருகிய அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் பூஜா என்பவரை காதலித்து வந்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி பூஜாவை லோகேஷ் வலியுறுத்தியுள்ளார். பூஜா திருமணத்திற்கு மறுத்ததால் திடீரென அவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார். 80 சதவீத […]
Continue reading …
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல லட்சக்கணக்கானோர் முன்பதிவு செய்துள்ளனர். ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் ஞாயிற்றுக்கிழமை வருவதால் முந்தைய தினங்கள் விடுமுறையாக இருப்பதால் பலரும் சொந்த ஊர்களுக்கு 12, 13ம் தேதிகளிலேயே புறப்பட தயாராகி வருகின்றனர். சென்னையிலிருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு செல்லவிருப்பதால் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை 3 நாட்களுக்கு சென்னையிலிருந்து பல்வேறு வழித்தடங்களிலும் 16,932 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்ட […]
Continue reading …
ஆளுநர் தமிழ்நாட்டை ‘தமிழகம்’ என்று அழைப்பதே சரி என பேசியதற்கு எதிராக டுவிட்டரில் நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இந்து மத ரீதியாகவும், தமிழக அரசியலை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாகவும் பேசி வருகிறார். இவரது பேச்சு திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. சமீபத்தில் ‘தமிழ்நாடு’ என்று மாநிலத்தின் பெயர் உள்ளது குறித்து கருத்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை ‘தமிழகம்’ என்று அழைப்பதே […]
Continue reading …
இன்று முன்னாள் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகனும், ஈரோடு மாவட்டம் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவேரா திருமகன் உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன். பாட்டனார் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் […]
Continue reading …
இன்று அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் இபிஎஸ் என்றால் என்ன? என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சமீபத்தில் அதிமுக பொதுக்குழு நடந்தது. இப்பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இன்றைய விசாரணையின்போது இருதரப்பு வாதங்களிலும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என்று வழக்கறிஞர்கள் கூறப்பட்டது. அப்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குறுக்கிட்டு ஓபிஎஸ் […]
Continue reading …
திடீரென மர்மான முறையில் திருவண்ணாமலை தீப மலையின் மீது பறந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது ரஷ்ய இளைஞர் ஒருவரை விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அனுமதியின்றி திருவண்ணாமலை மீது ட்ரோன் கேமராவை பறக்கவிட்டுள்ளார். இவரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அனுமதியின்றி தீபமலையின் மீது ட்ரோன் பறக்கவிட்ட அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் சில தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய இளைஞருக்கு திருவண்ணாமலையின் புனிதம் […]
Continue reading …
கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து விலகுகிறேன் என்று நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக பாஜகவிலிருந்து ஆறு மாதங்களுக்கு காயத்ரி ரகுராம் நீக்கம் செய்யப்பட்டிருந்தார். தற்போது அவர் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். “பாஜகவிலிருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன். இந்த முடிவை எடுக்க அண்ணாமலை தான் காரணம். அவரின் தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. அண்ணாமலை பற்றி இனி நான் […]
Continue reading …
கடந்த சில மாதங்களாக வட கிழக்கு பருவ காற்று மற்றும் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை சீசன் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் காற்றின் சுழற்சி காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அவ்வகையில் இன்று இன்னும் 3 மணி நேரத்தில் மூன்று மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று […]
Continue reading …