
இன்று முதல் பொங்கலுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச பொருட்களை பெறுவதற்கான டோக்கன் விநியோகிக்கப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. இவ்வாண்டு பொங்கலுக்கு இலவச பச்சரிசி, கரும்பு சர்க்கரையுடன் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9ம் தேதி நடைபெறும் இதற்கான நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பை வழங்கி தொடங்கி வைக்கிறார். 9ம் […]
Continue reading …
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் நடனத்தை மின்சார கம்பி மேல் ஏறி செய்த இளைஞர் மீது மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இளைஞர்களிடையே தற்போது பெருமளவில் ரீல்ஸ் மோகம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் அதிக லைக்குகளை பெறுவதற்காக உயரமான மலைகள், ரயில் தண்டவாளங்கள் என ஆபத்தான இடங்களில் இளைஞர்கள் ரீல்ஸ் செய்து வருகின்றனர். அதன் மூலம் மோசமான விபத்துக்குளுக்கு உள்ளாகும் சம்பவமும் நடந்து வருகிறது. தற்போது உன்னாக்குளம் பகுதியில் ஒரு இளைஞர் மின்சார கம்பம் மீது ஏறி ‘தெம்மா தெம்மா’ பாடலுக்கு […]
Continue reading …
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விஜய் டிவியின் 2022ம் ஆண்டு ஜூனியர் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் கிரிஸ்ஸாங் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். வருடா வருடம் விஜய் தொலைக்காட்சி ஜூனியர் மற்றும் சீனியருக்கான சூப்பர் சிங்கர் போட்டிகளை நடத்தி வருகிறது. இதில், கடந்த 2021ம் ஆண்டு ஜூனியர் சூப்பர் சிங்கர் 8 ஆரம்பித்தது. இதன் இறுதிப் போட்டி ஜூன் 27ம் தேதி நடந்தது. இதில், ரிஹானா இரண்டாம் இடமும், நேஹா 3ம் இடமும், கிரிஸ்ஸாங்க் முதல் இடமும் […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் அன்பழகன் சென்னை டிபிஐ வளாகத்தில் சிலையமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இவ்வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் கல்வி அமைச்சர் அன்பழகனுக்கு சென்னை டிபிஐ வளாகத்தில் சிலை வைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அன்பழகன் சிலை அமைக்க தடை கோரி கோவையைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர இருந்தது. திடீரென மனுதாரர் பழனிச்சாமி தனது […]
Continue reading …
செவிலியர்கள் கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு மாற்று பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். கொரொனா வைரஸ் நோயின் பாதிப்பு கடந்த 2020ம் ஆண்டில் நாடு முழுவதும் அதிகரித்த போது, தமிழகத்தில் சுகாதார சேவைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பலரும் நியமிக்கப்பட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக 2,300க்கும் அதிகமான ஒப்பந்த செவிலியர்கள் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் பணிபுரிந்து வந்தனர். இவர்களது ஒப்பந்த காலம் டிசம்பர் 31ல் முடிவடைந்தது. அவர்களது […]
Continue reading …
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது சிறப்பு பேருந்துகள் முழுவதும் புக்கிங் ஆகியுள்ளது. மேலும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொங்கல் பண்டிகைக்காக பலர் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பொங்கல் ஞாயிற்றுக்கிழமை வரும் நிலையில் முன்னதாக சனிக்கிழமையும் விடுமுறையாக உள்ளதால் மக்கள் ஜனவரி 13 வெள்ளிக்கிழமையில் அதிகமாக ஊருக்கு புறப்படுவர் என கணித்து போக்குவரத்து கழகம் […]
Continue reading …
தைப் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்காக பல பகுதிகளிலும் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் பல்வேறு மாவட்டங்களில் தை மாதத்தில் நடைபெற்று வருகின்றன. அதில் மதுரையில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இவ்வாண்டு ஜனவரி 15ம் தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்காக வாடிவாசலில் பூஜை […]
Continue reading …
சென்னையில் அரசு மருத்துவமனை மருத்துவர் சக மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததையடுத்து 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2001ம் ஆண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் வெற்றிச்செல்வன் என்பவர் தான் தங்கியிருந்த விடுதியில் தங்கியிருந்த சக மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இவ்வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது மருத்துவர் வெற்றி செல்வனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் அபராதம் விதித்து […]
Continue reading …
பாமக இளைஞரணி தலைவரான முன்னாள் பாமக தலைவர் ஜிகே மணியின் மகன் ஜிகேஎம் தமிழ்குமரன் சற்று முன்னர் ராஜினாமா செய்து விட்டதாக தகவல் பாமகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட ஜிகே மணியின் மகன் ஜிகேஎம் தமிழ்குமரன் லைகா நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ஜேகேஎம் தமிழ்குமரன் பாமக இளைஞரணி தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமாதாஸ் எழுதிய கடிதத்தில், “பெருமதிப்பிற்குமுரிய […]
Continue reading …
ஜனவரி 31-ம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என்றும் மின் அட்டையுடன் ஆதார் அட்டை இணைத்தால் மட்டுமே மின்கட்டணம் செலுத்த முடியும் என்றும் செய்திகள் வெளியானது. இதையடுத்து பலர் மின்சார அலுவலகம் சென்று மின் அட்டை எண்ணுடன் ஆதார் அட்டை எண்ணை இணைத்து வருகின்றனர். ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் ஆனால் கண்டிப்பாக மின் இணைப்புடன் […]
Continue reading …