
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பில் முழு கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார். குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. 2023ம் ஆண்டு பொங்கலுக்கு இலவச பச்சரிசி, சர்க்கரையுடன் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படாதது குறித்து எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலரும் விமர்சித்து வந்தனர். இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
Continue reading …
அதிமுக சார்பில் புதுச்சேரி யூனியனுக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. தற்போது வாகனங்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்வது வழங்க வேண்டுமென வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. இப்போராட்டத்தினால், புத்தாண்டு விற்பனை பாதிப்பு ஏற்படுத்தும் என திமுக, காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. […]
Continue reading …
அமமுக டிடிவி தினகரன், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போதிருந்தே அரசியல் கட்சிகளிடையே தேர்தல் கூட்டணி குறித்த ஆலோசனைகள் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் அமமுக கட்சியிலிருந்து சிலர் அதிமுகவில் இணைந்தது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தியாளர் சந்திப்பில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் “அமமுகவிலிருந்து விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே அதிமுகவிற்கு சிலர் சென்றுள்ளனர். பலர் என்னை […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரிக்கப்பட்ட வரலாறுகள் குறித்து சமீபத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளவதை குறித்து பேசியுள்ளார். பிரதமர் மோடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில், “திரிக்கப்பட்ட வரலாறுகளை நம்மிடம் கொடுத்து நமக்கெல்லாம் தாழ்வு மனப்பான்மை உண்டாக செய்துவிட்டார்கள். பண்டைய இந்தியாவின் அற்புதமான வரலாறு நமக்கு பெருமையையும், தன்னம்பிக்கையையும் கொடுத்திருக்க வேண்டும்’ என பேசியிருந்தார். இன்று இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, “கற்பனை கதைகளை வரலாறுகளாக சிலர் கூறுவதை ஏற்கக்கூடாது. இவ்வாறான வரலாற்று திரிபுகள்தான் […]
Continue reading …
அமலாக்கத்துறை முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ.ராசாவுக்கு சொந்தமான 55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்க அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு ஆ.ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 16 பேருக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. திமுக எம்.பி. ராசாவின் பினாமி நிறுவனத்திற்கு சொந்தமான 55 கோடி ரூபாய் மதிப்புள்ள 45 ஏக்கர் நிலம் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது. முறைகேடான பண பரிமாற்றம் மூலம் […]
Continue reading …
பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் தொடங்கி அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றது. இன்றுடன் தேர்வுகள் முடிவடையும் நிலையில், நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில பள்ளிகள் விடுமுறை காலத்திலும் சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் புதிய உத்தரவை வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும், மாணவர்கள் […]
Continue reading …
அமைச்சர் கீதா ஜீவன், வீடு மற்றும் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர். பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பாவின் வாகனம் மற்றும் இல்லத்தின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டரில், “திமுகவின் அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்சோம். தொடர்ச்சியாக பாஜகவின் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் திமுகவினரின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கின்றேன். அமைச்சர் கீதா ஜீவனின் தூண்டுதலின் […]
Continue reading …
பாஜக கட்சியினர் அண்ணாமலையின் கையில் கட்டியுள்ள கைக்கடிகாரத்தின் பில்லை காட்டினால் முரசொலியின் மூலப்பத்திரத்தை காட்டுவீர்களா என கேள்வி எழுப்பியுள்ளனர். அமைச்சர் செந்தில் குமார் உள்பட பல திமுகவினர் கடந்த சில நாட்களாக அண்ணாமலை கையில் கட்டியுள்ள கைக்கடிகாரத்தின் பில் எங்கே என கேள்வி எழுப்பினர். இது குறித்த ஹேஷ்டேக் டுவிட்டர் உட்பட இணையதளங்களில் வைரலாகின. திமுகவினரின் கேள்விகளுக்கு அண்ணாமலை உள்பட பாஜகவினர் அதிரடியாக பதில் அளித்து வந்தனர். தற்போது பாஜகவின் சிடி நிர்மல் குமார் தனது டுவிட்டரில் […]
Continue reading …
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதற்கு மத்திய அமைச்சர் கவலை தெரிவித்து பயனில்லை, இலங்கையை எச்சரிக்கை வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “வங்கக்கடலில் கோடியக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 12 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது கடந்த 25 நாட்களாக இல்லாமல் […]
Continue reading …
ஒரே நாளில் பிறந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆன குழந்தைக்கு மூன்று தடுப்பூசிகள் போட்டதால் அக்குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் சுகன்யா தம்பதியருக்கு கடந்த ஐம்பது நாட்களுக்கு முன்பாக ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. குழந்தை பிறந்தவுடன் 45 நாட்களில் போடவேண்டிய தடுப்பூசியை பெற்றோர் போடாமல் இருந்ததால் 52வது நாளில் ஒரே நாளில் மூன்று தடுப்பூசி போட்டுள்ளதாக தெரிகிறது. குழந்தையின் மூக்கிலும், வாயிலும் திடீரென ரத்தம் வந்ததை […]
Continue reading …