
சென்னை உயர்நீதிமன்றம் ஈஷா மையத்திற்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டுள்ளது. கோவை அருகே உள்ள ஈஷா மையம் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் கட்டிடங்கள் கட்டியதாக ஈஷா அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈஷா யோகா மையத்தை கல்வி நிறுவனமாக்க முடியும் என்றும் எனவே கட்டடங்கள் கட்ட விலக்கு பெற உரிமை உள்ளது […]
Continue reading …
இன்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியத்தை உதவி வழங்குவதற்கான கோப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். இதுவரை விளையாட்டு வீரர்களுக்கு ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது இரண்டு மடங்காக உயர்ப்பட்டுள்ளது. இதுகுறித்த கோப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். “திமுக இளைஞர் அணியின் தலைவராகவும், எம்எல்ஏவாகவும் பதவியேற்றபோது வாரிசு அரசியல் என விமர்சனம் வந்தது. விமர்சனங்கள் வந்து கொண்டுதான் […]
Continue reading …
நடிகர் சந்தானம் “தமிழ்நாட்டின் கனவு கனவாக வாழ்த்துகள்” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சரான உதயநிதி, இதுவரை விளையாட்டு வீரர்களுக்கு ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது இரண்டுமடங்கு அதாவது 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதற்கான கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். நடிகர் சந்தானம் தனது டுவிட்டரில், […]
Continue reading …
சுப்ரீம் கோர்ட்டு தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு கன்னியாகுமரியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் 105 ரூபாய் ஊதியத்தில் பள்ளிக்கல்வித்துறை துறையில் பணியில் சேர்ந்துள்ளார். இவர் 2012ம் ஆண்டு ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியம் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும் என அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து லட்சுமணனுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை […]
Continue reading …
நடிகர் சரத்குமார் பூரண மதுவிலக்கு போராட்டத்தில் கலந்து கொண்டபோது ஆன்லைன் ரம்மி குறித்து பேசியுள்ளார். நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி தலைவராகவும், நடிகராகவும் இருந்து வருகிறார். தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வரும் நிலையில் சரத்குமார் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்து வருவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இன்று பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி சமத்துவ மக்கள் கட்சி சென்னையில் போராட்டத்தில், “நான் விளம்பரத்தில் சொல்வதால்தான் ஆன்லைன் […]
Continue reading …
தமிழக அரசு 2023ம் ஆண்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்துள்ளது தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பீட்டா சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை கடந்த சில நாள்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழக அரசின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாண்டு பொங்கல் பண்டிகையின் போது தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் […]
Continue reading …
எடப்பாடி பழனிசாமி உதயநிதி அமைச்சரானால் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடப்போகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி பதவியேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு முடிசூட்டு விழா நடைபெற இருக்கிறது. மிகப் பெரிய தியாகத்தைச் செய்தே நாட்டுக்கு உழைத்த மாமனிதன் உதயநிதி ஸ்டாலினுக்கு நாளை முடிசூட்டு விழா […]
Continue reading …
சமீபத்தில் உதகையிலுள்ள சீகூர் வனப்பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா பூஜையில் பங்கேற்ற 4 பெண்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். உதகை அருகேயுள்ள சீகூர் என்ற பகுதியில் ஆனிக்கல் மாரியம்மன் என்ற கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று கார்த்திகை சோமாவாரம் தீபம் திருவிழாவிற்காக கோயில் திறக்கப்பட்டு, அங்கு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், அப்பகுதியில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். கோவிலுக்குச் செல்லும் வனப்பகுதியில் ஒடும் ஆனிக்கல் ஆற்றில் காலையில் குறைவான இருந்த நீர், […]
Continue reading …
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் பாலாற்றில் தொடர் மழை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பாலாறு கரையோரங்களில் உள்ள ஏழு கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் பாலாறு அணைக்கட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு வினாடிக்கு 1724 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதாகவும் இதன் காரணமாக பாலாற்றங்கரையில் உள்ள 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலாற்று […]
Continue reading …
மேயர் காரில் தொங்கியபடி சென்றது வருத்தத்தை அளிப்பதாக ஜெயக்குமார் கூறியுள்ளார். நேற்று முன்தினம் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்படியாக முதலமைச்சர் பயணம் செய்த காரில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆபத்தான முறையில் வெளியே தொங்கியபடி பயணம் செய்தார். இந்த வீடியோ இணையதளங்களில் கிண்டலான முறையில் வைரலானது. அமைச்சர் சேகர்பாபு முதலமைச்சரின் காரில் சென்னை மேயர் பிரியா தொங்கிக் கொண்டு சென்றதாக கூறப்படும் சம்பவம் பற்றிய விளக்கத்தில், “மேயர் பிரியா […]
Continue reading …