Home » Archives by category » தமிழகம் (Page 217)

திமுக எம்பி டி.ஆர்.பாலுவின் கருத்து!

Comments Off on திமுக எம்பி டி.ஆர்.பாலுவின் கருத்து!

ஆளுநர் வீட்டு அலமாரியில் திமுக ஆட்சியில் இயற்றப்பட்ட மசோதாக்கள் தூங்கிக் கொண்டிருப்பதாக டிஆர் பாலு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளதை அடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் இன்று வெளிநடப்பு செய்துள்ளனர். இதையடுத்து பாராளுமன்ற வளாகத்தில் திமுக எம்பி டிஆர் பாலு அளித்த பேட்டியில், “திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து 23 மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மசோதாக்களை அலமாரிகள் வைத்துக்கொண்டு ஆளுநர் கையெழுத்து போடாமல் இருக்கிறார். வளர்ந்த நாடுகளில்கூட ஆன்லைன் […]

Continue reading …

அடுத்து வரும் 3 நாட்களுக்கு கனமழை!

Comments Off on அடுத்து வரும் 3 நாட்களுக்கு கனமழை!

வானிலை மையம் தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் அளித்துள்ளது. மாண்டஸ் புயல் சென்னையிலிருந்து 620 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்ககூடும் என்றும், இதனால் தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் மாண்டஸ் புயலின் வேகம் மணிக்கு 6 கிமீ வேகத்திலிருந்து 11 கிமீ ஆக அதிகரித்துள்ளது. எனவே நாளை […]

Continue reading …

அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு!

Comments Off on அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு!

நாளை அ.தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம்டிசம்பர் 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் 18 மாத ஆட்சி காலத்தில் சொத்துவரி, மின்கட்டணம், பால்விலை உயர்வு உள்பட பல்வேறு சீர்கேடுகள் உள்ளதை அனைத்து கட்டணங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி டிசம்பர் 9ம் தேதி அதாவது நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை புயல் உருவாகி இருப்பதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதால் நாளைய ஆர்ப்பாட்டம் டிசம்பர் […]

Continue reading …

புயல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

Comments Off on புயல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு மாண்டஸ் புயல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் சென்னையிலிருந்து 620 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்ககூடும் என்றும், இதனால் தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் மாண்டஸ் புயலின் வேகம் மணிக்கு 6 கிமீ வேகத்திலிருந்து 11 கிமீ ஆக அதிகரித்துள்ளது. எனவே […]

Continue reading …

திமுகவில் இணைந் அதிமுக பிரபலம்!

Comments Off on திமுகவில் இணைந் அதிமுக பிரபலம்!

அதிமுக பிரபலமாக இருந்த கோவை செல்வராஜ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அதிமுகவில், அதிருப்தியாளராக கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியில் இருந்துள்ளார். அவர் ஓபிஎஸ் மீதும் ஈபிஎஸ் மீதும் அதிருப்தியடைந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் முக்கிய முடிவு எடுக்க போவதாகவும் கூறியிருந்த கோவை செல்வராஜ் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஜெயலலிதாவை ஓபிஎஸ், […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயிலில் பயணம்!

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயிலில் பயணம்!

கடந்த ஆண்டு மே மாதம் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்ட பின் முதல் முறையாக இன்று அவர் ரயிலில் பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தென்காசி செல்ல உள்ளதாகவும், தென்காசியில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்காசி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் அதன்பின் மதுரை செல்ல உள்ளார் என்றும், மதுரை நிகழ்ச்சிகள் முடித்த பின் […]

Continue reading …

புயல் பற்றிய தகவலளித்த சென்னை வானிலை மையம்!

Comments Off on புயல் பற்றிய தகவலளித்த சென்னை வானிலை மையம்!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை புயல் கரையை கடக்கும் என கூறியுள்ளார். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 770 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும் மணிக்கு 15 கிலோமீட்டர் தொலைவில் நகர்ந்து வரும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். எனவே இந்த புயல் இன்று மாலை […]

Continue reading …

4 மாதங்களுக்கு பிறகு பள்ளி திறப்பு!

Comments Off on 4 மாதங்களுக்கு பிறகு பள்ளி திறப்பு!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்ததால் தனியார் பள்ளியில் வன்முறை ஏற்பட்டது. நான்கு மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் உள்ள கணியமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் சக்தி ஈசிஆர் சர்வதேசப் பள்ளி ஆகியவை கிட்டத்தட்ட 145 நாட்கள் மூடப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 5ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன. முன்னதாக ஜூலை மாதம் பள்ளியின் 12ம் வகுப்பு மாணவர் இறந்ததை அடுத்து பள்ளி மற்றும் அதன் வளாகம் பெரிய அளவிலான போராட்டங்களையும் வன்முறைகளையும் […]

Continue reading …

டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட்!

Comments Off on டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட்!

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 852 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவலை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது பானங்களை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அதிரடியாக ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாய்வில் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என மொத்தம் 852 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் ஆய்வு செய்யப்பட்டவர்களிடமிருந்து 4 கோடியே 60 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும், கூடுதல் விலைக்கு […]

Continue reading …

கோவிட்-19 குறித்து அமெரிக்க ஆய்வாளர் பகீர் தகவல்!

Comments Off on கோவிட்-19 குறித்து அமெரிக்க ஆய்வாளர் பகீர் தகவல்!

வூஹான் மாகாண ஆய்வுகூடத்தில் பணியாற்றிய நபர் தன் புத்தகத்தில் கோவிட் -19 எனும் கொரொனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என்ற தகவலை தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு சீன தேசத்திலிருந்து இந்தியா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளுக்கும் கொரோனா தொற்றுப் பரவியது. இதனால், உலகம் முழுவதிலும் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டு, லட்சக்கணகான மக்கள் உயிரிழந்தனர். கொரொனாவின் உருமாறிய வைரஸ் மேலும் பல நாடுகளிலும் பரவி வரும் நிலையில், இதன் 5ம் அலை விரைவில் பரவலாம் என […]

Continue reading …