
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்க ஆணை பிறப்பித்துள்ளதற்காக சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார். இந்திய வானிலை ஆய்வுத்துறையில் 990 அறிவியல் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் டிசம்பர் 14 முதல் 16 வரை நடைபெறவுள்ளன. மத்திய அரசு அதே காலகட்டத்தில் டிசம்பர் 10 – 20 வரை தமிழக பல்கலைக்கழகங்களில் எம்.எஸ்சி இயற்பியல் படிப்புக்கான பருவத் தேர்வுகள் நடைபெறவுள்ளதாக சமீபத்தில் அறிவித்தது. இதற்கு அன்புமணி ராமதாஸ், எம்பி, சு.வெங்கடேசன் எம்.பி. பலரும் […]
Continue reading …
தமிழக டிஜிபி புதியதாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தமிழ்நாட்டில் போக்சோ வழக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் சிறுவர், சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழுவினர் பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் குறித்து மேற்கொண்ட ஆலோசனையின் அடிப்படையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு புதிய அறிவுறைகளை வழங்கியுள்ளார். அதன்படி, திருமண உறவு மற்றும் காதல் உறவுகளில் […]
Continue reading …
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் மாவிலை கேட்பது போல சென்று திருடி வந்த பிரபல திருடனை போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த ராணி என்ற 55 வயதான பெண் தனது வீட்டில் தனியே இருந்துள்ளார். அவரது கணவரும், மகனும் வெளியே வேலைக்காக சென்றிருந்த நிலையில் அவர்களது தூரத்து உறவினர் என சொல்லிக் கொண்டு 50 வயது நபர் ஒருவர் வந்துள்ளார். வீட்டு கிரஹபிரவேசத்திற்கு பத்திரிக்கை வைத்த அவர், வீட்டு வாயிலில் கட்ட மாவிலைகள் […]
Continue reading …
காற்றழுத்த தாழ்வு வங்க கடலில் தோன்றியுள்ளதன் காரணமாக மணிக்கு 65 கிலோமீட்டர் வரை சூறை காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, நாளை முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளதை அடுத்து நாளை முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு வடமேற்கு பகுதிக்கு பகுதியில் புயலாக […]
Continue reading …
சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்ட மசோதா குறித்த வழக்கு தீர்ப்பளிக்கப்பட்டது இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் தற்போது மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று மூன்று நீதிபதிகளும் செல்லாது என்று இரண்டு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்புக்கு திமுக உள்பட அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் […]
Continue reading …
சென்னை, திருவான்மியூர், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.4) திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். திருமணத்தை நடத்திவைத்து முதல்வர் பேசியது : இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 31 இணையர்களுக்கு திருமணத்தை செய்து வைக்கக்கூடிய இந்த சிறப்பான நிகழ்ச்சியில் நான் பங்கேற்பது உள்ளபடியே பெருமையாக இருக்கிறது, மகிழ்ச்சியாக இருக்கிறது, எனக்கு மனநிறைவையும் தந்து கொண்டிருக்கிறது. […]
Continue reading …
குழந்தை பலியான சம்பவத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள சிலுக்குவார்பட்டையில் வசிப்பவர் துர்காதேவி(26) இவரது கணவர் ராஜதுரை(31). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த நவம்பர் 25ம் தேதி தன் தாய் மாமாவின் தோட்டத்திற்கு சென்ற துர்காதேவி, அன்றிரவில் தன் குழந்தை மாயமானதாகவும், கிணற்றில் இறந்து கிடந்ததாகவும் கூறினார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில், அப்பகுதியைச் சேர்ந்த அஜய்க்கும், துர்காவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்த நிலையில் […]
Continue reading …
மதுரை ஐகோர்ட் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை என உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என அர்ச்சகர் சீதாராமன் வழக்கு தொடர்ந்த நிலையில் திருச்செந்தூர் கோவில் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
Continue reading …
தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் தீவிரமாக வாதம் செய்துள்ளது. பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. 2017ல் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்திய நிலையில் மீண்டும் வெற்றிகரமாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதுதொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்த தமிழ்நாடு அரசு “ஜல்லிக்கட்டு வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. இதில் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த தேர்தலில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது என்றும் இந்த முறை அந்த ஒரு தொகுதியை கூட விடாமல் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை ஏற்ற முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, “கடந்த முறை 40 தொகுதிகளில் ஒரு தொகுதியை இழந்து விட்டோம். ஆனால் இம்முறை 40 தொகுதிகளிலும் […]
Continue reading …