அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஈரோடு இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என்பதால் விக்கிரவாண்டியில் போட்டியிடவில்லை. அதிமுகவுக்கு சசிகலா ரீ என்ட்ரி ஆக முடியாது என தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம், “2015ம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலையை பார்த்துவிட்டோம். இந்த விக்கிரவாண்டி தேர்தலில் திமுக குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சிக்கும். விக்கிரவாண்டி தொகுதியில் எல்லா அமைச்சர்களும் முகாமிட்டுள்ளனர். இதுவரை அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த […]
Continue reading …கடந்த ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரையிலான 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இதனால் இன்று அதிகாலையே கடலுக்கு மீன்பிடிக்க விசைப்படகில் மீனவர்கள் சென்றனர். இன்று ஒரே நாளில் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாட்கள் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க ஒவ்வொரு ஆண்டும் தடை செய்யப்படுகிறது. இந்த நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்களுக்கு […]
Continue reading …சிறுத்தை ஒன்று திருப்பத்தூரில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டுள்ளது. நேற்று பிற்பகல் திருப்பத்தூரில் சாம் நகர் பகுதியில் வேளையில் சிறுத்தை ஒன்று நடமாடியதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் சிலர் உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவலை தெரிவித்துள்ளனர். அங்கு வந்த வனத்துறையினர் அது காட்டுப்பூனையாக இருக்கலாம் என அவர்கள் பதற்றம் அடையாமல் இருக்குமாறு கூறினர். ஆனால் அங்கு உண்மையாகவே சிறுத்தை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக சிறுத்தையை […]
Continue reading …லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விழுப்புரத்தில் தாசில்தார் வீட்டில் 2 மணிநேரத்திற்கும் மேலாக சோதனை செய்தனர். விழுப்புரம் தாசில்தார் மீது 2015ம் ஆண்டு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தற்போது சோதனை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடலூர் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவினர் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்தது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுந்தர்ராஜன், […]
Continue reading …நெல்லை கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நேற்று சாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட ஜாதி பிரிவினர் மற்றும் பெண் வீட்டார் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். இச்சம்பவத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனம். தேசிய கட்சி அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியின் அலுவலகம் […]
Continue reading …தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். திமுக சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் […]
Continue reading …டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த வாரம் நடைபெற்றது. இத்தேர்வை சரியாக எழுதவில்லை என்ற மன வருத்தத்தில் இருந்த இளைஞர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் என்ற 25 வயது இளைஞர் மெக்கானிக் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு எழுதியுள்ளார். அவர் அந்த தேர்வை சரியாக எழுதவில்லை என மன […]
Continue reading …வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் ஜூன் 20ம் தேதி வரை வெயிலும் கொளுத்தும் அவ்வப்போது மழையும் பெய்யும் என அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கோடை காலம் முடிவுக்கு வந்து தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் ஜூன் 20ம் தேதி வரை லேசான மழை பெய்யும், அதே நேரத்தில் ஜூன் 18ம் தேதி வரை வெயில் அதிகமாக இருக்கும். தென்னிந்திய பகுதியில் மேல் […]
Continue reading …தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் தமிழக பாஜக தலைவர் மற்றும் முன்னாள் புதுவை மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை வீட்டிற்கு வருகை தந்துள்ளார். அமித்ஷா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசையை அழைத்து கண்டித்ததாக கூறப்பட்டது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது. ஆந்திராவிலிருந்து சென்னை திரும்பிய தமிழிசை செய்தியாளர்களிடம் இது குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால் அதே நேரத்தில் அவர் இது குறித்து விளக்கமளித்த போது, […]
Continue reading …வானிலை ஆய்வு மையம் குமரி கடலில் சூறாவளி காற்று வீசும் வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை ஆய்வு மையம் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. மன்னர் வளைகுடா, குமரி கடல் மற்றும் தமிழக, ஆந்திர கடலோர பகுதிகளிலும், வடக்கு அந்தமான் […]
Continue reading …