Home » Archives by category » தமிழகம் (Page 228)

மீண்டும் நளினிக்கு பரோல் நீட்டிப்பு!

Comments Off on மீண்டும் நளினிக்கு பரோல் நீட்டிப்பு!

தமிழக அரசு 10 வது முறையாக நளினிக்கு பரோல் நீட்டிப்பதாக உத்தரவிட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு ஏற்கனவே 9 முறை பரோல் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 10வது முறையும் பரோல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய 6 தமிழர்களில் ஒருவர் நளினி. இவர் வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு […]

Continue reading …

சிவகங்கையில் 144 தடை உத்தரவு!

Comments Off on சிவகங்கையில் 144 தடை உத்தரவு!

நாளை முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை ஆணையர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தேவர் நினைவு தினத்தை ஒட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. மருது பாண்டியர்கள் மற்றும் தேவர் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் நாளை முதல் அதாவது அக்டோபர் 23 முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக […]

Continue reading …

திருநங்கை நமீதாவுக்கு வாழ்த்து கூறிய அமைச்சர்!

Comments Off on திருநங்கை நமீதாவுக்கு வாழ்த்து கூறிய அமைச்சர்!

அமைச்சர் மா.சுப்பிரமணியம் “மிஸ் பாப்புலர் வேல்ர்ட் விருது” வென்ற நமீதாவுக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார். ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற மிஸ் டிரான்ஸ் ஸ்டோர் இன்டர் நேசனல் 2020ல் இந்தியாவைச் சேர்ந்த திருநங்கை நமீதா விருது பெற்றார். சென்னை, பாண்டிச்சேரி, மிஸ் இந்தியா போன்ற பல்வேறு அழகிப் போட்டிகளில் பட்டம் வென்றார். இந்நிலையில், தற்போது தாய்லாந்தில் நடைபெற்ற மிஸ் பாப்புலர் அப் தி வேர்ல்ட் -2022 என்ற விருதை பெற்றுள்ளார் திருநங்கை நமீதா. இதுகுறித்து அமைச்சர் சுப்பிரமணியமன் தன் டுவிட்டரில், […]

Continue reading …

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Comments Off on வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வானிலை ஆய்வு மையம் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாக உள்ள நிலையில் 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது. தற்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக வலுவடையும் வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு […]

Continue reading …

காயமடைந்தவருக்கு உதவிய முதல்வர்!

Comments Off on காயமடைந்தவருக்கு உதவிய முதல்வர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் விழுந்து காயமடைந்தவருக்கு உதவியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் விழுந்து ஒரு நபருக்கு தலையில் காயம் ஏற்பட்டதை கண்டு கான்வாய் வாகனத்தை நிறுத்தி இறங்கிச் சென்று காயமடைந்தவரை உடனடியாக ஆட்டோ ஒன்றில், சிகிச்சை மேற்கொள்வதற்காக காவலருடன் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. இன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது சென்னை, அண்ணா […]

Continue reading …

புதிய மோட்டார் சட்டம் அமல்!

Comments Off on புதிய மோட்டார் சட்டம் அமல்!

புதிய மோட்டார் வாகன சட்டம் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. தற்போது அது குறித்து அபராதம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. போக்குவரத்து விதிகள் மற்றும் அபராதம் உள்ளிட்டவற்றை கடுமையாக்கி புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இனி இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதமாக வசூலிக்கப்படும். போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சாலையை கடப்பவர்களுக்கு முதல் முறை ரூ.500 அபராதமாகவும், இரண்டாவது முறை ரூ.1500 அபராதமாகவும் வசூலிக்கப்படும். இருசக்கர வாகனங்களை பதிவு செய்யாமல் இருந்தால் […]

Continue reading …

கல்வி செயற்பாட்டளரின் சர்ச்சை கருத்து!

Comments Off on கல்வி செயற்பாட்டளரின் சர்ச்சை கருத்து!

கல்வி செயற்பாட்டளரும், கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனராகவும் இருந்து வரும் பத்ரி சேஷாத்ரி முன்னாள் முதலமைச்சர் அண்ணாவை அவமதித்து பேசியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அவரை இணையக்கல்வி ஆலோசனை குழுவிலிருந்து தமிழக அரசு நீக்கியுள்ளது. சமீபத்தில் பத்ரி சேஷாத்ரி அண்ணா குறித்து பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையானது. இவர் தமிழக அரசின் தமிழ் இணையக்கல்வி ஆலோசனை குழுவில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சர்ச்சை பேச்சை தொடர்ந்து அவரை ஆலோசனை குழுவிலிருந்து தமிழக அரசு நீக்கி […]

Continue reading …

சசிகலாவின் பரபரப்பு அறிக்கை!

Comments Off on சசிகலாவின் பரபரப்பு அறிக்கை!

சசிகலா அம்மாவுக்கு ஆஞ்சியோ செய்யாதது ஏன்? பிரிந்து சென்றது ஏன்? என்பது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இவ்வறிக்கை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை குறித்து சசிகலா விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து விரிவான விசாரணையை மேற்கொண்டு அறிக்கையளிக்க ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்ய […]

Continue reading …

யூட்யூப் சேனல்களுக்கு எச்சரிக்கை!

Comments Off on யூட்யூப் சேனல்களுக்கு எச்சரிக்கை!

உயர்நீதிமன்றம் யூட்யூப் சேனல்கள் ஆதாரமற்ற செய்திகளை வெளியிடும் பட்சத்தில் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. தற்போது புற்றீசல் போல் மக்களிடையே பல யூட்யூப் சேனல்கள் தினம்தோறும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இவ்வாறாக உருவாகும் பல யூட்யூப் சேனல்களில் ப்ராங்க் என்ற பெயரில் பிறரை தொல்லை செய்வது, அதிக பார்வையாளர்களை பெறுவதற்காக ஆதாரமற்ற தகவல்களை தருவது போன்ற செயல்களும் அதிகரித்துள்ளன. இதுகுறித்த வழக்கு ஒன்றில் இன்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், “மலிவான விளம்பரத்திற்காக யூட்யூப் சேனல்கள் […]

Continue reading …

தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி!

Comments Off on தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி!

கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேர் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய சில அலுவலர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக இன்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய […]

Continue reading …