
பள்ளிக்கல்வித் துறை இனிமேல் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான சான்றிதழ் ஆன்லைனில் மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளிலும் அரசு பணிகளுக்கும், மருத்துவ படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கும் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழ் வழியில் படித்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பித்து சான்றிதழை பெற்று வந்தனர். சமீபத்தில் தமிழ் வழியில் படித்ததற்கானச் சான்றிதழ் ஆன்லைனில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. […]
Continue reading …
ஆறுமுகசாமி தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் சசிகலா குற்றம் செய்தவர் என்று ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருப்பதாகவும் ஆறுமுகசாமி ஆணையம் அவர் மீது விசாரணை செய்ய பரிந்துரை செய்ததாகவும் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஆணைய அறிக்கையில் தகவல் தெரிவிப்பதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு அந்த ஆணையம் ஒரு சில ஆண்டுகளாக விசாரணை செய்து சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்நிலையில் இன்று […]
Continue reading …
தனியார் நிறுவனங்கள் கடந்த சில மாதங்கள் முன்னதாக பால் விலையை உயர்த்தியது. ஆனால் தற்போது சில நிறுவனங்கள் மீண்டும் பால் விலையை உயர்த்தியுள்ளன. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் மற்றும் பல தனியார் பால் நிறுவனங்கள் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்து வருகின்றன. தமிழகத்தில் தினசரி பால் பயன்பாட்டில் 16 சதவீதத்தை ஆவின் பூர்த்தி செய்கிறது. மீத 84 சதவீத பால் தேவையை தனியார் பால் நிறுவனங்கள் பூர்த்தி செய்கின்றன. இந்நிலையில் தனியார் பால் நிறுவனங்கள் […]
Continue reading …
வைகை அணையின் கொள்ளளவு முழுவதுமாக நிரம்பியுள்ள நிலையில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேனி மாவட்டத்திலுள்ள பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 கன அடி என்ற நிலையில் தற்போது 69 கன அடி தண்ணீர் நிரம்பி விட்டது. இந்நிலையில் அணைக்கு வினாடிக்கு சுமார் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து […]
Continue reading …
சென்னை வானிலை ஆய்வு மையம் தீபாவளி வரை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளதால் தீபாவளி வியாபாரம் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுதும் சில பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு இன்று முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. […]
Continue reading …
திருப்பூரில் சாலையோரம் பச்சிளம் குழந்தை இறந்துகிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் தெற்குபாளையம் பகுதியில் ஒரு பச்சிளம் குழந்தை இறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 7 மாதக் குறை பிரசவசத்தில் பிறந்த குழந்தை இறந்து கிடந்ததைப் பார்த்து அதை மீடு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்குழந்தையை வீசிச் சென்றது யார் […]
Continue reading …
போக்குவரத்து துறைபேன்சி நம்பர் கட்டணத்தை இரட்டிப்பாக உயர்த்த பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பேன்சி நம்பர் கட்டணத்தை இரட்டிப்பாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் 80 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.8 லட்சம் வரை உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆர்டிஓ அலுவலங்களில் பேன்சி நம்பர் வேண்டும் என்றால் அதற்கென கட்டணம் பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில் தற்போது பேன்சி நம்பர் கட்டணத்தை இரட்டிப்பாக்க போக்குவரத்துதுறை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்டிஓ மூலம் பெற முடியாதபேன்சி எண்களுக்கு சிறப்பு கட்டணமாக […]
Continue reading …
பாமக முன்னாள் தலைவர் ராமதாஸ் உலக பசி குறியீட்டில் இந்தியா 107-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது கவலையளிப்பதாக டுவிட்டரில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். பாமக முன்னாள் தலைவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “2022ம் ஆண்டுக்கான உலக பசி குறியீட்டில், மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்தியா 107ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உலகின் ஐந்தாவது பொருளாதார வல்லரசாக உயர்ந்துள்ள இந்தியா, ஏழை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், சூடான் ஆகியவற்றை விட பின்தங்கியிருப்பது கவலையளிக்கிறது! உலக பசி குறியீடு என்பது பசி, […]
Continue reading …
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை அரசு விரைந்து சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். சீமான் தனது சமூக வலைதளத்தில், “தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு விரைந்து சரி செய்ய வேண்டும். புதிதாகச் செவிலியர்களை நியமிக்காமல் காலம் தாழ்த்திவரும் தமிழக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் […]
Continue reading …
அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக தகவல்கள் வெளியான புகாரின் பேரில் பல அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடைபெற்றுள்ளது. அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் பலவற்றில் அதிகாரிகள் அதிகமாக லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்கள், சோதனை சாவடிகள் என பல பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று மாலை முதலாக அதிரடி […]
Continue reading …