Home » Archives by category » தமிழகம் (Page 231)

இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கை காலியிடங்கள் இருக்காது!

Comments Off on இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கை காலியிடங்கள் இருக்காது!

அமைச்சர் பொன்முடி இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையில் காலியிடங்கள் இருக்காது என தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் அதிகமிருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இவ்வாண்டு காலியிடங்கள் இருக்காது என்று தெரிவித்துள்ளார். இந்தாண்டு 1.10 லட்சம் பேருக்கு அக்டோபர் 13ம் தேதி மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இவ்வாண்டு ஐடி, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பல பிரிவுகளில் மாணவர்கள் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே […]

Continue reading …

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம்!

Comments Off on ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம்!

திருவாரூர் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் ரிலைன்ஸ் டிரெண்ட்ஸ் நிறுவனத்திற்கு 2.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் டிரெண்ட்ஸ் நிறுவனத்தின் மீது சிவப்பிரகாசம் என்பவர் எம்ஆர்பி விலையை விட கூடுதல் விலைக்கு உள்ளாடையை விற்பனை செய்ததாக திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். ரூ.265க்கு விற்க வேண்டிய உள்ளாடையை 278 ரூபாய்க்கு விற்றதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் விசாரணை செய்து இவ்வழக்கில் இன்று தீர்ப்பு […]

Continue reading …

12ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!

Comments Off on 12ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!

பாலிடெக்னிக் படிக்கும் மாணவர் ஒருவர் பேருந்துக்கு காத்திருந்த 12ம் வகுப்பு மாணவிக்கு தாலிகட்டிய சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி சிலையருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளி சீருடையில் பேருந்துக்காக காத்திருந்த போது அங்கு வந்த பாலிடெக்னிக் மாணவர் திடீரென தாலியை எடுத்து அந்த மாணவிக்கு கட்டியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை […]

Continue reading …

சிறப்பு பேருந்துகள் பற்றிய அறிவிப்பு!

Comments Off on சிறப்பு பேருந்துகள் பற்றிய அறிவிப்பு!

போக்குவரத்துத்துறை தீபாவளிக்கு 16,888 சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப் போவதாக அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடவிருக்கும் நிலையில் பொதுமக்களின் நலனிற்காக சென்னை தியாகராயர் நகரில் அக்டோபர் 8 முதல் அக்டோபர் 24ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க மக்கள் அதிகளவில் தியாகராயர் நகர் பகுதிக்கு வர உள்ளதால் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ஆட்டோக்கள் தியாகராயர் சாலை, தணிகாசலம் சாலை சந்திப்பில் இருந்து பனகல் பூங்கா நோக்கி […]

Continue reading …

கவர்னர் ஆர்.என்.ரவி திராவிடம் என்பதற்கு தந்த விளக்கம்!

Comments Off on கவர்னர் ஆர்.என்.ரவி திராவிடம் என்பதற்கு தந்த விளக்கம்!

கவர்னர் ஆர்.என்.ரவி திராவிடம் என்றால் தமிழ் என சுருக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னை கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டார். அதில் பேசியபோது, ‘தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு தெலுங்கு ஆந்திரா கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களை உள்ளடக்கியது. ஆனால் தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறப்படும் அளவிற்கு சுருக்கப்பட்டுள்ளது. பாரதம் என்ற சொல் ஆங்கிலேயர்கள் இந்தியா என்று பெயர் வைப்பதற்கு முன்னதாகவே வந்துள்ளது. […]

Continue reading …

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Comments Off on 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வானிலை ஆய்வு மையம் நாளை நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுதும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி நாளை 14 மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்க்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர்‌, திருச்‌சிராப்பள்ளி, தேனி, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, மதுரை, கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி மற்றும்‌ திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி, […]

Continue reading …

திருடனின் சாமர்த்தியம்!

Comments Off on திருடனின் சாமர்த்தியம்!

திருட போன இடத்தில் சார்ஜ் போட்ட போனை மறந்த வைத்த திருடன் நடத்திய வினோத சம்பவம் நாமக்கல்லில் நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வருபவர் சித்திரவேல். வழக்கம்போல ஓட்டல் வியாபாரம் முடிந்ததும் கடையை மூடி வீட்டிற்கு சென்றுள்ளார். பின் உணவகத்திற்குள் புகுந்த திருடன் அங்கு கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்றுள்ளான். சித்திரவேலின் ஓட்டலிலிருந்து ஆசாமி ஒருவன் எகிறி குதித்து செல்வதை கண்ட சிலர் சித்திரவேலுக்கு போன் செய்து சொல்லியுள்ளனர். […]

Continue reading …

தமிழக டிஜிபியின் அதிரடி நடவடிக்கை!

Comments Off on தமிழக டிஜிபியின் அதிரடி நடவடிக்கை!

டிஜிபியின் அதிரடி நடவடிக்கையால் “ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை” முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்திற்குள் தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் பல முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு காவல்துறை, குற்றங்களை ஒழிப்பதற்காக திடீர் நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக ஆபரேஷன் கஞ்சா வேட்டையை நடத்திய காவல்துறை கஞ்சா, பான் […]

Continue reading …

சீமானின் வலியுறுத்தல்!

Comments Off on சீமானின் வலியுறுத்தல்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசு கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆளுங்கட்சியினரின் தலையீடுவதாக கூறியுள்ளார். மேலும் இவ்வாறு நடைபெறும் முறைகேடுகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி, அவர் சமூக வலைதளத்தில், “தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு கலைக்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் பெருமளவு முறைகேடுகள் நடைபெறுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டுவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. திமுகவினரின் தலையீட்டின் பேரில் நடைபெறும் இத்தகைய முறைகேடுகளுக்கு தமிழ்நாடு அரசு துணைபோவது வன்மையான கண்டனத்திற்குரியது. திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் […]

Continue reading …

பொறியியல் கல்லூரிகள் புதிதாக தொடங்க தடை!

Comments Off on பொறியியல் கல்லூரிகள் புதிதாக தொடங்க தடை!

2024ம் ஆண்டு வரை நாடு முழுதும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க தடை நீடிக்கப்பட்டுள்ளதாக ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் தொழில்நுட்பம் சார்ந்த புதிய பாடப் பிரிவுகளை மட்டும் தொடங்க அனுமதியளித்து இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும் தற்போது 443 கல்லூரிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. கடந்த 2018ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு, நாடு முழுவதிலும் உள்ள பொறியியல் கல்லூரி குறித்து ஆய்வு செய்தது. இந்த ஆய்வுக்கு […]

Continue reading …