
தக்காளியின் விலை பாதியாக குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை ரூபாய் 60க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. பெங்களூரில் பெய்த கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் தக்காளி விலை திடீரென 60 ரூபாய் வரை உயர்ந்தது. இந்நிலையில் இன்று தக்காளி விலை 30 முதல் 35 ரூபாய் என விற்று வருவதாகவும் வரும் நாட்களில் இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இன்று கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகமாக இருந்ததால் […]
Continue reading …
ஊட்டச்சத்து மாத்திரை சாப்பிட்ட 50 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் ஆத்தூர் அருகே நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆத்தூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று அரசு அதிகாரிகள் ஊட்டச்சத்து மாத்திரைகளை வழங்கினர். இம்மாத்திரைகளை சாப்பிட்ட மாணவிகள் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் 50 மாணவிகளுக்கும் மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஊட்டச்சத்து மாத்திரை சாப்பிட்ட 50 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட […]
Continue reading …
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக்காக கேரள மக்களுக்கு மலையாளத்தில் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் கேரளாவில் இன்று மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக்காக கேரள மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். அவ்வகையில் ஓணம் கொண்டாடும் கேரள மக்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் மலையாளத்தில் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “கேரள மக்களுக்கு ஓணம் வாழ்த்துக்கள்! ஓணம் பண்டிகை புதிய […]
Continue reading …
தென்காசியில் திருமணமான ஒரே வாரத்தில் இளம்பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒன்றாம் தேதி திருநெல்வேலி மாவட்டம் கடையம் என்ற பகுதியைச் சேர்ந்த இசக்கிலட்சுமி என்ற இளம் பெண்ணுக்கு திருமணம் நடக்கவிருந்தது. ஆனால் திருமணத்திற்கு முந்தைய நாள் அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவருடன் இசக்கிலட்சுமி ஓடிவிட்டதால் திருமணம் நின்று போனது. ராம்குமார் மற்றும் இசக்கிலட்சுமி திருமணம் செய்து சென்னையில் வாழ்ந்துள்ளனர். இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதையடுத்து இசக்கி லட்சுமி தனது சொந்த ஊருக்கு […]
Continue reading …
திண்டுக்கல் மாவட்டத்தில் கோழியை கடித்த நாயின் உரிமையாளரை கொன்ற சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜர் நகரில் வசிக்கும் விஜயனின் மகன் விஷ்ணு(26). இவர் செல்லப்பிராணியாக தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த முத்தன் என்பவரை விஷ்ணுவின் நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்தன் சென்று விஷ்ணுவிடம் போய் கேட்டுள்ளார். அப்போது, கோபமடைந்த முத்து என் கோழியை உன் நாய்தான் கடித்தது என்று […]
Continue reading …
கனியாமூர் பகுதியில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சசியை ஏற்படுத்தியது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்குள் புகுந்து தீவைத்தனர். அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தினர். இச்சம்பவத்தை அடுத்து, அப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி பாதிக்கப்பட்டது, நேரடி வகுப்புகள் வேண்டுமென்று அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். அதன்படி, 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். கடந்த மாதம் பள்ளியைத் திறக்க வேண்டும் என்று […]
Continue reading …
தமிழக அரசு விளையாட்டுத் துறையின் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு முதலமைச்சரின் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையில், கடந்த 2018 – 2019 மற்றும் 2019 – 2020ம் ஆண்டுகளுக்காக சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், சிறந்த நடுவர்கள், விளளையாடு ஒருங்கிணைப்பு குழுக்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறந்த பயிற்சியாளர்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இவ்விருதுகளுக்கான […]
Continue reading …
தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சங்கம் முன்னாள் அமைச்சர் வேலுமணிகாக மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜராக இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெண்டர் முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்பி ராஜூ என்பவர் ஆஜராக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உயர்நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த எதிர்ப்பை அடுத்து வேலுமணி சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் […]
Continue reading …
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மாணவர்களுக்கு சொந்தமாக அலைபேசி வாங்கிக் கொடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியம் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வருகிறார் ஆசிரியர் ராமச்சந்திரன். இவ்வாண்டு இந்தியாவில் 46 பேர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்கள். இதில் தமிழ்நாட்டில் இருந்து ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்று ஆசிரியர் தினத்தை ஒட்டி டில்லியில் குடியரசு […]
Continue reading …
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உடல் உறுப்புகளை டிரோன் மூலம் கொண்டு செல்லும் புதிய சேவையை தொடங்கி வைத்தார். உடல் தானம் செய்வதற்கு பெரும்பாலும் உடல் உறுப்புகளை கொண்டு செல்வதற்கு வாகனங்களே பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனங்கள் செல்லும் போது பெருமளவில் போக்குவரத்தை நெரிசலை சரி செய்வதும், மக்களுக்கு சிக்கல் ஏற்படுவதும் பெரும்பாலான இடங்களில் நாம் காண்கிறோம். உடல் உறுப்புகளை டிரோன் மூலம் கொண்டு செல்லும் சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இச்சேவையை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, தமிழக […]
Continue reading …