
கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவது உறுதி என்று கூறினார். சமீபத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 2மாதங்களுக்கு ரூ.27.50 உயர்த்த பரீசீலிக்கப்பட்டுள்ளதாகவும், 2 மாதங்களில் 301-400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 உயர்த்த பரிசீலனைசெய்யப்பட்டுள்ளதாகவும்,2 மாதங்களில் 501-600 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.155உயர்த்த பரிசூலிக்கப்பட்டுள்ளதாகவும், 2 மாதங்களில் 601-700 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.275 உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்காட்சிகள் […]
Continue reading …
நீலகிரி மாவட்டத்தில் மானத்திற்கு பயந்து வீட்டில் பிரசவம் பார்க்க முயன்றதால் தாய், சேய் ஆகிய இருவரும் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள நிமினிவயல் பகுதியை சேர்ந்த தேவனுக்கு 21 வயதுள்ள மகள் பிரியா அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்துக் கொண்ட நிலையில் பிரியா கர்ப்பமாகியுள்ளார். இது பிரியாவின் வீட்டினருக்கு தெரியாமல் இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரியாவுக்கு திடீரென வயிற்று வலி […]
Continue reading …
ஈரோடு மாவட்டத்தின் அருகே உள்ள வாய்க்காலில் சிறுவனின் உடல் சடலமாக மிதந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகிலுள்ள உக்கரம் குப்பன்துறை என்ற பகுதியில் கீழ்பவானில் வாய்க்காலில் ஒரு சிறுவன் உடல் மிதந்து வருவதை அங்குள்ள மக்கள் பார்த்தனர்.இதுகுறித்து கடத்தூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ள நிலையில் அங்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு முதலுதவி செய்ய […]
Continue reading …
மதுரையில் உள்ள பிரபல ஓட்டலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை அருகே உள்ள 4 மாடி கொண்ட ஓட்டலில் மின் கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் அருகே புதூர் பேருந்து பேருந்தில் பகுதியில் உள்ள 4 மாடி கொண்ட ஒரு ஹோட்டலில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை ஓட்டலில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். […]
Continue reading …
பள்ளிக்கல்வித்துறை இனிமேல் பள்ளியை மாணவர்களை வைத்து தூய்மை படுத்தக்கூடாது -என அறிவித்துள்ளது. இன்று பள்ளிக் கல்வித்துறை அரசு முதன்மைச்செயலாளர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பள்ளியில் மரங்கள் இருந்தால் அதிலிருந்து உதிரும் இலைகளால் குப்பை உண்டாகிறது. மழைக்காலங்களில் இக்குப்பைகள் மழையில் நனைந்து கட்டிட உறுதிக்கு பாதிப்பு ஏற்பத்தும் வகையிலுள்ளது. அதனால், இலைகளையும் சருகுகளையும் அகற்ற வேண்டும். தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பள்ளி […]
Continue reading …
11ம் வகுப்பு மாணவன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளான். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள பள்ளியில் விளையாட்டு பாட வேலையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கஜினி என்ற மாணவர் பந்து வீசிக் கொண்டிருந்தபோது திடீரென மின்னல் தாக்கியதால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இச்சம்பவம் குறித்து பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் வந்து தங்கள் மகனின் உடலை பார்த்து […]
Continue reading …
கோவையில் திருடன் ஒருவன் தான் திருடிய பைக் ஓனரிடமே பைக்குடன் வந்து டைம் கேட்டுள்ளார். பல பகுதிகளிலும் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெறும் நிலையில் சில சந்தர்ப்பங்களில் திருடர்கள் அஜாக்கிரதையாக மாட்டிக் கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன. கோவை மாவட்டம் சூலூரில் முருகன் என்பவர் தனது வீட்டின் முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்துள்ளார். காலையில் பார்த்தபோது அந்த இடத்தில் இருசக்கர வாகனம் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் உடனடியாக புகார் அளிக்க காவல் நிலையம் […]
Continue reading …
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் இனி எலி பேஸ்ட், சாண பவுடர் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக தற்கொலை செய்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதில் பலர் எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடர் பயன்படுத்தி தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் தற்கொலை சம்பவங்களை தடுக்க எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடர் விற்பனையை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எலி […]
Continue reading …
10 புதிய பொருட்களை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு பால் பொருட்களை ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. தற்போது மேலும் 10 புதிய பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசு பொதுத்துறையின் நிறுவனமான ஆவின் பால் பாக்கெட்டுகள், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தமிழகம் முழுவதும் பால் சொசைட்டி, ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்கிறது. விரைவில் தண்ணீர் பாட்டில்கள் விற்கவும் ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்து […]
Continue reading …
ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக ரூ.11.04 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விழாக்காலம் என்பதால் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டு பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இதுதொடர்பாக நேரடி ஆய்வு மேற்கொள்ளுமாறு ஆர்டிஓ தலைமையிலான குழுவினருக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டார். இருப்பினும் ஆம்னி பஸ்களில் கட்டணங்கள் 3 மடங்காக உயர்த்தின. வழக்கமான நாட்களில் சென்னையிலிருந்து திருச்சிக்கு ஆம்னி பஸ்களில் ரூ.800 […]
Continue reading …