Home » Archives by category » தமிழகம் (Page 244)

சிறந்த முதல்வர்களில் 3ம் இடத்தை பிடித்தார் ஸ்டாலின்!

Comments Off on சிறந்த முதல்வர்களில் 3ம் இடத்தை பிடித்தார் ஸ்டாலின்!

சிறந்த முதலமைச்சர்களுக்கான கருத்துக் கணிப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் 3ம் இடத்தை பிடித்துள்ளார். இந்தியா டுடே சமீபத்தில் இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் என்ற கருத்துக் கணிப்பு நடத்தியது. ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட் நாயக் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு 78% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இரண்டாம் இடத்தில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா இடம் பிடித்துள்ளார். இவருக்கு 63% பேர் ஆதரவளித்துள்ளனர். 3ம் இடத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம்பிடித்துள்ளார். இவருக்கு 61 % பேர் ஆதரவளித்துள்ளனர். […]

Continue reading …

கண்ணாடி பாட்டிலில் பால்?

Comments Off on கண்ணாடி பாட்டிலில் பால்?

விரைவில் கண்ணாடி பாட்டிலில் ஆவின் பால் நிறுவனம் பால் வினியோகம் செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆவின் பால் தற்போது பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் விற்பனை செய்து வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்பதற்காக சமீபத்தில் மத்திய அரசு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்துள்ளது. இதையடுத்து பெரும்பாலான தனியார் பால் நிறுவனங்கள் கண்ணாடி பாட்டிலுக்கு மாறியுள்ள நிலையில் ஆவின் பால் நிறுவனம் மட்டும் இன்னும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் வினியோகம் செய்து வருகிறது. இது […]

Continue reading …

கரூரில் போதையில் மாணவிகள்!

Comments Off on கரூரில் போதையில் மாணவிகள்!

மது அருந்திய நிலையில் பள்ளி மாணவிகள் ரோட்டில் மயங்கி நிலையில் கிடந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 11ம் வகுப்பு படிக்கின்ற கரூரைச் சேர்ந்த அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் முன்னதாக நடந்த பொதுத்தேர்வில் தோல்வியடைந்த நிலையில் மறுதேர்வு எழுத வேறு ஒரு பள்ளிக்கு சீருடையில் சென்றதாக கூறப்படுகிறது. தேர்வு எழுதி முடித்ததும் மதுபானக்கடைக்கு சென்ற மாணவிகள் அங்கு ஒயின் வாங்கி குடித்ததாக தெரிகிறது. பின்னர் வீடு திரும்பிய மாணவிகள் போதை தலைக்கேறியதால் கரூர் சர்ச் […]

Continue reading …

கவுன்சிலரின் கணவரின் அரிவாளுடன் நடத்திய அட்ராசிட்டி!

Comments Off on கவுன்சிலரின் கணவரின் அரிவாளுடன் நடத்திய அட்ராசிட்டி!
கவுன்சிலரின் கணவரின் அரிவாளுடன் நடத்திய அட்ராசிட்டி!

திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை அரிவாளை எடுத்துக் கொண்டு துரத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் மண்னச்ச நல்லூர் அருகே தளுதாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலரான நித்யாவின் கணவர் வெற்றிச் செல்வன். அப்பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இக்கடனை திருப்பிக் கொடுக்காமல் பல ஆண்டுகள் குணசேகரனை அலைக்கழித்து வந்துள்ளார். நேற்றும் வெற்றிச்செல்வனிடம் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட சென்றுள்ளார் குணசேகரன். அப்போது, மதுபோதையில் இருந்த […]

Continue reading …

பால் பாக்கெட் விலை உயர்வு..!?

Comments Off on பால் பாக்கெட் விலை உயர்வு..!?

தனியார் பால் நிறுவனங்கள் பால் பாக்கெட் விலையை உயர்த்தியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் மற்றும் பல தனியார் பால் நிறுவனங்கள் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்து வருகிறது. தமிழகத்தில் தினசரி பால் பயன்பாட்டில் 16 சதவீதத்தை ஆவின் பூர்த்தி செய்கிறது. மீத 84 சதவீத பால் தேவையை தனியார் பால் நிறுவனங்கள் பூர்த்தி செய்கின்றன. தனியார் பால் நிறுவனங்கள் பால் பாக்கெட் விலையை இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக உயர்த்த […]

Continue reading …

4 நாட்களுக்கு மழை!

Comments Off on 4 நாட்களுக்கு மழை!

வானிலை மையம் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் அளித்துள்ளது. கடந்த சில வாரங்களாக அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இன்று மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழக மாவட்டங்களில் மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான […]

Continue reading …

மீண்டும் ஒரு மாணவி தற்கொலை!

Comments Off on மீண்டும் ஒரு மாணவி தற்கொலை!

தொடர்ந்து பள்ளி மாணவிகள் தற்கொலை நிகழ்வுகள் நடந்து கொண்டே உள்ளது. தற்போது பிளஸ் 2 பள்ளி மாணவி பூச்சி மருத்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மல்லிகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி மாம்பலப்பட்டு என்ற பகுதியில் பள்ளியில் அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மாணவி, காலையில் வகுப்பில் மயங்கி விழுந்தார். உடனே பள்ளி ஆசிரியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் […]

Continue reading …

ஸ்ரீமதியின் தாயார் கட்சித்தலைவர்களை சந்தித்து மனு!

Comments Off on ஸ்ரீமதியின் தாயார் கட்சித்தலைவர்களை சந்தித்து மனு!

கள்ளக்குறிச்சியில் 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி இறந்து 30 நாட்கள் கடந்த நிலையில் அவரது தாயார் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருப்பதாக கூறியுள்ளார். இதுபற்றி அவர் ஸ்ரீமதியின் தாயார் கூறும்போது, “ஸ்ரீமதி இறந்து இன்றோடு 30 நாட்கள் ஆகிவிட்டது. இது திட்டமிட்ட கொலைதான். ஆனால் கொலை செய்தவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கிறது. எனவே ஒரு தாயின் உணர்வை புரிந்து கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்திக்க உள்ளேன். […]

Continue reading …

டீக்கடையில் வெடி விபத்து

Comments Off on டீக்கடையில் வெடி விபத்து

டீக்கடையில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் வானபாடி கிராமத்திலுள்ள செல்வராஜ் (58) என்ற நபருக்குச் சொந்தமான டீக்கடையில் சிலிண்டர் வெடித்தது. இவ்விபத்தில், ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவ்விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். தற்போது 5 பேர் வாலாஜா பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திடீர் விபத்து தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் […]

Continue reading …

நாங்களும் குளிப்போம்…!

Comments Off on நாங்களும் குளிப்போம்…!

குற்றாலத்தில் தண்ணீர் நீரின் அளவு அதிகமாக உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பாம்புகளின் படையெடுப்பு அதிகமாக இருப்பதால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மிக முக்கியாக தமிழகத்தின் சுற்றுலாத் தளமாக இருப்பது குற்றாலம். இங்கு எல்லா சீசன்களிலும் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதில் இருந்தும் பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்குடன் சேர்த்து பாம்புகளும் அடித்து வரப்படுவதால், அங்கு குளிக்கும் சுற்றுலாப் பயணிகல் […]

Continue reading …