Home » Archives by category » தமிழகம் (Page 249)

மத்திய அரசு கடிதம்!

Comments Off on மத்திய அரசு கடிதம்!

மத்திய அரசு 9 மாநிலங்களுக்கும் கொரோனா பற்றிய தகவலை குறித்து கடிதம் அனுப்பியுள்ளது. கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக இந்தியாவில் குறைந்திருந்தது. ஆனால் தற்போது தினசரி அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் குறைந்தது. சமீபத்தில் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயர தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,557 பேர் பாதித்துள்ளனர். […]

Continue reading …

சினிமா பாடல்கள் பஸ்சில் போடக்கூடாது!

Comments Off on சினிமா பாடல்கள் பஸ்சில் போடக்கூடாது!

பஸ்சில் அதிக சத்தத்துடன் கூடிய சினிமா பாடல்கள் ஒலிபரப்பட்டு வருகின்றன. இந்த ஒலியால் பயணிகள் மற்றும் கண்டக்டருக்குமிடையேயான தகவல் தொடர்பு பாதிக்கப்படுகிறது. இரட்டை அர்த்தமுள்ள பாடல்களும் இசைக்கப்படுவது, பயணிகளுக்கு இடையூறாக உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் பாண்டியன் சென்னை மாநகரப் போக்குவரத்துத்துறையில் புகார் கூறியுள்ளார். இதையடுத்து, சென்னை மாநகரப் பேருந்துகளில் சினிமாப் பாடல்கள் இசைப்பதற்கு மாநகரப்போக்குவரத்து அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனரின் மன அழுத்தத்தைப் போக்கவே பாடல்கள் இசைக்கப்படுவதாக ஓட்டுநர்கள் தரப்பில் […]

Continue reading …

ரூ.500 கோடி கொள்ளை!

Comments Off on ரூ.500 கோடி கொள்ளை!

500 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் நகைகள் ரொக்கம் ராஜபாளையத்தில் மர்மமான முறையில் தம்பதிகள் கொலை செய்து கொள்ளை போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராஜகோபால் குருபாக்கியம் தம்பதியினர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரத்தில் வசித்து வந்தனர். இவர்களின் இரு மகன்களும் வெளியூரில் பணிபுரிவதால் தம்பதிகள் தனியாக வசித்து வருகின்றனர். ராஜகோபால் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராஜபாளையம் பகுதியில் உள்ள பல நிறுவனங்களுக்கும் கடைகளுக்கும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து […]

Continue reading …

மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம்!

Comments Off on மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம்!

12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாணவியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர், அந்த பகுதி மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளியின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இந்நிலையில் இவ்விவகாரத்தில் சரியாக நடவடிக்கை எடுக்காததால் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜெடாவத் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதோடு மட்டுமல்லாமல் மாவட்ட […]

Continue reading …

மின் கட்டண உயர்வு மனு!

Comments Off on மின் கட்டண உயர்வு மனு!

தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்சார வாரியத்தின் கட்டண உயர்வு தொடர்பாக கொடுத்த மனுவை ஏற்றுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.27.50ம், இரண்டு மாதங்களில் 301 – 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50ம், இரண்டு மாதங்களில் 501  -600 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.155ம், இரண்டு மாதங்களில் 601 – 700 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.275 கட்டணத்தை உயர்த்துவதற்கு […]

Continue reading …

அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை!

Comments Off on அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை!

சென்னை வானிலை மையம் அடுத்து வரும் 3 நாட்களுக்கு 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் அளித்துள்ளது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் ஒரிரு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சில நாட்களுக்கு முன் நீலகிரி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, […]

Continue reading …

நியூஸ் பேப்பரில் பார்சலுக்கு தடை!

Comments Off on நியூஸ் பேப்பரில் பார்சலுக்கு தடை!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நியூஸ் பேப்பரில் உணவு பொருட்களை பார்சல் செய்து தருவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். உணவகங்களிலும், டீக்கடைகளிலும் அச்சிடப்பட்ட நியூஸ் பேப்பரில் வடை, பஜ்ஜி போன்ற உணவு பொருட்களை பார்சல் செய்வதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். அச்சிடப்பட்ட நியூஸ் பேப்பரில் உணவுப் பொருள்களை பார்சல் செய்யும் போது அந்த எழுத்துக்களில் உள்ள வேதிப் பொருட்கள் உணவுப் பொருட்களில் கலந்து உடலுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும் என்றும் அவர் […]

Continue reading …

கள்ளக்குறிச்சி கலவரம்!

Comments Off on கள்ளக்குறிச்சி கலவரம்!

கள்ளக்குறிச்சியில் கனியாமூரில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிக் தனியார் பள்ளியில் படித்த 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி பள்ளி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவியின் இறப்பு பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது மகள் குறித்து வழங்கு தொடர்ந்துள்ளனர். மாணவியின் இறப்புக்கு நியாயம் வேண்டி அப்பகுதியில் மிகப்பெரிய […]

Continue reading …

ரயிலில் செல்பி: மாணவன் பலி!

Comments Off on ரயிலில் செல்பி: மாணவன் பலி!
ரயிலில் செல்பி: மாணவன் பலி!

ரயிலின் மீது ஏறி செல்பி மீது உள்ள மோகம் ஒரு மாணவனின் உயிரை வாங்கி உள்ளது. மதுரை கூடல்புதூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ்வர் 12ம் வகுப்பு படிக்கிறார். விக்னேஷ்வர் நேற்று தனது நண்பர்கள் சிலருடன் கூடல்புதூர் பகுதியில் உள்ள குட்ஷெட் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு பராமரிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்களில் ஏறிய விக்னேஷ்வர் மற்றும் நண்பர்கள் செல்பி எடுத்துள்ளனர். விக்னேஷ்வர் ஒரு ரயிலின் மேல் பகுதிக்கு ஏறிய போது ரயிலின் மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் […]

Continue reading …

மாணவி தற்கொலை!

Comments Off on மாணவி தற்கொலை!

மாணவி ஒருவர் நாளை நடக்கவிருக்கும் நீட் தேர்வு எழுதவுள்ள நிலையில் தற்கொலை செய்து கொண்டார். அரியலூரில் ரயில்வே நகரைச் சேர்ந்த ஒரு மாணவி, 12ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 430 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மருத்துவ படிப்பிற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த அவர், தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாணவியின் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continue reading …