Home » Archives by category » தமிழகம் (Page 253)

ரேஷன் அரிசி கடத்தல்!

Comments Off on ரேஷன் அரிசி கடத்தல்!

50 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்தி உள்ளனர். அரிசியை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டி தலைமையில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கேதாண்டிப்பட்டி அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக ஆந்திரா பதிவு எண் கொண்ட லாரி ஒன்று அதிவேகமாக சென்ற லாரியை மடக்கி பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில், 50 கிலோ அளவிலான, 1000 மூட்டைகளில் 50,000 கிலோ நியாய விலை […]

Continue reading …

ஆர்.பி.உதயக்குமார் கைது!

Comments Off on ஆர்.பி.உதயக்குமார் கைது!

ஆர்.பி.உதயக்குமாரை மதுரையில் போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதிலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. இந்தியா முழுதும் தமிழகத்தில்தான் அதிகமான சுங்கச்சாவடிகள் செயல்படுகிறது. மதுரையிலிருந்து திருநெல்வேலி நெடுஞ்சாலையில் கப்பலூர் அருகே சுங்கச்சாவடி செயல்படுகிறது. சமீபத்தில் தமிழக அரசால் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த 5 சுங்கச்சாவடிகள் மூடுவதாக அறிவிக்கப்பட்டது. அதுபோல கப்பலூர் சுங்கச்சாவடியையும் மூட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது. இன்று கப்பலூர் சுங்கச்சாவடியை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மற்றும் அவரது […]

Continue reading …

மஹாராஷ்டிரா போல் தமிழகத்திலும் ஆட்சி கவிழுமா?

Comments Off on மஹாராஷ்டிரா போல் தமிழகத்திலும் ஆட்சி கவிழுமா?

மஹராஷ்டிராவை போல் தமிழகத்திலும் ஆட்சி கவிழ வாய்ப்பிருப்பதாக இந்து முன்னணி மாநில தலைவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திமுக அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் 40 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். மஹாராஷ்டிரா மாநிலத்தை போல் தமிழகத்திலும் ஆட்சி கவிழுக்கூடும் என்றும் இந்து முன்னணி மாநில தலைவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவிலிருந்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதன் பின்னர் திமுக என கட்சி மாறிய செந்தில் பாலாஜிக்கு திமுகவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கட்சியில் சேர்ந்த […]

Continue reading …

நடத்துனர்களுக்கு புதிய கட்டுப்பாடு!

Comments Off on நடத்துனர்களுக்கு புதிய கட்டுப்பாடு!

பேருந்து நடத்துனர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் எதிரொலி: பேருந்து நடத்துனர்களுக்கு புதிய கட்டுப்பாடு! கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேருந்துகளில் பணிபுரியும் நடத்துனர்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது போக்குவரத்துதுறை. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு மாஸ்க் அணிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அரசு பேருந்துகளில் நடத்துனர்கள் எச்சில் தொட்டு டிக்கெட் தரக்கூடாது, இந்த நடைமுறையை […]

Continue reading …

போடியில் மான் வேட்டை !

Comments Off on போடியில் மான் வேட்டை !

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அரிய வகை விலங்குகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் இப்பகுதியில் அடிக்கடி சட்ட விரோதமாக விலங்குகளை வேட்டையாடுதல் நடைபெற்று வருகிறது.  இதுகுறித்து தேனி வனச்சரக வனத்துறை அலுவலர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த ஒரு வார காலமாக இப்பகுதியில் சட்ட விரோதமாக வேட்டையாடுவர்களை பற்றி விவரங்கள் சேகரித்து வந்தனர். இந்த சூழலில் இன்று அதிகாலை போடி அருகில் உள்ள உலக்குருட்டி சாலை பகுதியில் வெடி […]

Continue reading …

எடப்பாடி பழனிசாமியின் டுவிட்டர் மாற்றம்!

Comments Off on எடப்பாடி பழனிசாமியின் டுவிட்டர் மாற்றம்!

அதிமுக கட்சியின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது டுவிட்டர் பக்கத்தில் சில மாற்றங்களை செய்துள்ளார். இது அவரது கட்சியினரிடத்தில் மட்டுமல்லாமல் மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க இருவருக்குமிடையே போட்டிகள் இருந்தது. இதில் எடப்பாடி பழனிச்சாமி மிக தீவிரமாக இருந்தார். சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் […]

Continue reading …

பணியில்லாத அதிகாரி சஸ்பெண்ட்!

Comments Off on பணியில்லாத அதிகாரி சஸ்பெண்ட்!

பணி நேரத்தில் இல்லாத அரசாங்க அதிகாரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சஸ்பெண்ட் செய்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வில் ஈடுபட்டு பணியில் இல்லாத அரசாங்க ஊழியரை சஸ்பெண்ட் செய்துள்ளார். இத்தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் முதலமைச்சர் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார். அவ்வகையில் ராணிப்பேட்டை கூட்ரோட்டில் உள்ள குழந்தைகள் நல மையத்தில் முதலமைச்சர் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அக்குழந்தைகள் நல மையத்தில் உள்ள அதிகாரி பணியில் இல்லாததால் உடனடியாக அவரை சஸ்பெண்ட் […]

Continue reading …

செஸ் துவக்க விழாவை இயக்கும் முன்னணி இயக்குனர்!

Comments Off on செஸ் துவக்க விழாவை இயக்கும் முன்னணி இயக்குனர்!

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெற்ற உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகின் பல நாடுகளிலிருந்தும் இந்த போட்டியில் செஸ் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன் இந்த ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி […]

Continue reading …

எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு!

Comments Off on எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு!
எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு!

தமிழகத்தின் எதிர்கட்சியான அதிமுகவில் ஒற்றைத்தலைமைக்கான பிரச்னை உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கூறியிருப்பதாக ஈபிஎஸ் தனது மனுவில் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பாக அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து மனு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஈபிஎஸ் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை கோரியிருப்பதாக ஈபிஎஸ் தமது மனுவில் […]

Continue reading …

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்புவிழா!

Comments Off on மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்புவிழா!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த அலுவலகத்தில் அனைத்து அரசு சார்ந்த அலுவலகங்களும் உள்ளன. இக்கட்டிடம் ரூ.110 கோடியில் 7 அடுக்கு மாடித் தளமாக அமைக்கப்பட்டுள்ளது.

Continue reading …