Home » Archives by category » தமிழகம் (Page 272)

ரூ5000ஐ தொட்டது தங்கம் விலை!

Comments Off on ரூ5000ஐ தொட்டது தங்கம் விலை!

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5318.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 42544.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூபாய் 71.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 71500.00 எனவும் விற்பனையாகி வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் […]

Continue reading …

ஆசிரியர் தகுதித் தேர்வு முத்தரசன் கோரிக்கை!

Comments Off on ஆசிரியர் தகுதித் தேர்வு முத்தரசன் கோரிக்கை!

சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டுக்கு முன் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பணியில் தொடர அரசாணை வெளியிட வேண்டும் என்றும் சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீட்டிக்க உரிமை இல்லை என்றும், சம்பள உயர்வு பெற உரிமை இல்லை என்றும் சமீபத்தில் நீதிமன்றம் கருத்து […]

Continue reading …

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்!

Comments Off on சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்!

பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் வகையில் மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்துள்ளார்.   சென்னை மாநகராட்சியின் முதல் கூட்டம் இன்று தொடங்கியதும் மேயர் பிரியா பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் வகையில் மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவற்றில் முக்கியமான அம்சங்கள் இதோ… * பள்ளி மாணவ &- மாணவிகளுக்கு காலை உணவு. * பள்ளிகளில் ரூ.5.47 கோடி செலவில் கண்காணிப்பி கேமராக்கள் பொருத்தல். * பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கிலம் பேசும் திறனை வளர்க்க […]

Continue reading …

இனி தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது

Comments Off on இனி தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது

உலக நாடுகளிலிருந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கும் பரவியது கொடிய நோயான கொரோனா. 2020ம் ஆண்டிலிருந்து இன்று வரை இதன் பாதிப்பால் பெருமளவில் பொருளாதாரத்திலும், உயிரிழப்பையும் சந்தித்திருக்கிறோம்.   இந்த ஆண்டில் தொடக்கத்தில் இருந்து குறைந்து வந்த கொரொனா இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் இனி தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என தமிழக […]

Continue reading …

சிறப்பு பேருந்துகள்

Comments Off on சிறப்பு பேருந்துகள்

பண்டிகை காலங்களை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் 1000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி தொடர் விடுமுறை வருவதால் சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் பயணிகளின் வசதிக்காக 1000 சிறப்புகள் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. அடுத்த வாரம் தமிழ்புத்தாண்டு, 14ம் தேதி புனிதவெள்ளி, அம்பேத்கார் பிறந்த நாள் விழாவிற்காக அரசு விடுமுறை என்பதால் 16 மறும் 17ம் தெதி வார இறுதி நாட்கள் சனி ஞாயிறு […]

Continue reading …

ரேசன் கடைகளில் இனி பாக்கெட்டில் அரிசி

Comments Off on ரேசன் கடைகளில் இனி பாக்கெட்டில் அரிசி

அமைச்சர் சக்கரபாணி, இனிமேல் ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசி பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.   தற்போது ரேஷன் கடைகளில் அரிசி வாங்க வரும் மக்களுக்கு அவரவர் கொண்டுவரும் பைகளில் தான் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இனிமேல் ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகளின் மூலம் அரிசி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அவரவர் இருப்பிடத்திற்கு அனுப்பப்படும் என்றும், புதிய அட்டைகளுக்கு பொதுமக்கள் அலுவலகத்திற்கு வந்து அலைய வேண்டிய […]

Continue reading …

அமைச்சர் ஐ.பெரியசாமி நகைக்கடன் தள்ளுபடி- பற்றி முக்கிய தகவல்

Comments Off on அமைச்சர் ஐ.பெரியசாமி நகைக்கடன் தள்ளுபடி- பற்றி முக்கிய தகவல்

அமைச்சர் ஐ.பெரியசாமி தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு சங்கங்களில் 4,816 கோடி ரூபாய்க்கான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.   இதுபற்றி அவர் தமிழக சட்டப்பேரவையில் கூறியுள்ளதாவது: கூட்டுறவு சங்கங்களில் 4,816 கோடி ரூபாய்க்கான நகைக் கட்ன தள்ளுபடி செய்யப்படுள்ளது. மீதமுள்ள 37 ஆயிரம் பேருக்கான நகைக்கடங்கள் விரையில் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் 780 சங்கங்களில் சுமார் ரூ.482 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து […]

Continue reading …

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏப்ரல் 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி!

Comments Off on 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏப்ரல் 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி!

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏப்.10 முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.   கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்தியாவில் உள்ள அனைவரும் கண்டிப்பாக கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தன. இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பேருந்து ரயில் மற்றும் திரையரங்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் கொரோனா வைரஸ் தடுப்பூசி […]

Continue reading …

மீனவர் நலனுக்காக ஒன்றிய அரசுடன் தொலைபேசியில் முதலமைச்சர் வலியுறுத்தல்

Comments Off on மீனவர் நலனுக்காக ஒன்றிய அரசுடன் தொலைபேசியில் முதலமைச்சர் வலியுறுத்தல்

இலங்கை கடபடையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், அவரது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.   இலங்கை தமிழர்களுக்கு அரிசி, பருப்பு, உயிர் காக்கும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கப்பல் மூலம் அனுப்ப தமிழ்நாடு தயாராக உள்ளது என்றும் தெரிவித்தள்ளார். மேலும் இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவ முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் அத்தியாவசிய பொருட்களை இலங்கை தமிழர்களுக்கு அனுப்ப அனுமதி தர வேண்டும் எனவும் ஒன்றிய அமைச்சர் […]

Continue reading …

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை

Comments Off on தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும். வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழையும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Continue reading …