Home » Archives by category » தமிழகம் (Page 283)

வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை, இளைஞர்களை ஈடுபடுத்தவும் உறுதுணையாக இருக்கும் !

Comments Off on வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை, இளைஞர்களை ஈடுபடுத்தவும் உறுதுணையாக இருக்கும் !

“உழுது உண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம் தொழுது உண்டு பின்செல் பவர்” அதாவது, உழவுத் தொழிலைச் செய்து அதனால் விளையும் பொருளை உண்டு உயிர் வாழ்கிறவர்களே வாழ்பவர்கள். மற்றவர்கள் எல்லாம் பிறரை வணங்கி அவர் கொடுப்பதை உண்டு ஏவல் செய்து பிழைக்கும் அடிமைகள் ஆவார்கள் என்பது திருவள்ளுவரின் வாக்கு. அதன் அடிப்படையில் வேளாண்மையும், அதன் முக்கியத்துவத்தையும் நன்கு உணர்ந்து, தமிழ்நாடு அரசின் வரலாற்றில் முதன்முறையாக  வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை  சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

Continue reading …

13.50 கோடி மதிப்பீட்டில் மரக்கன்றுகளை நடும் திட்டத்தினை தொடங்கி வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

Comments Off on 13.50 கோடி மதிப்பீட்டில் மரக்கன்றுகளை நடும் திட்டத்தினை தொடங்கி வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் உள்ள 15 சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.13.50 கோடி மதிப்பீட்டில் 3,04,627 மரக்கன்றுகளை நடும் திட்டத்தினை தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அன்று (14.08.2021) மரக்கன்றுகளை நட்டுவைத்து தொடங்கி வைத்தார். தொழில்துறையில் இந்திய துணைக்கண்டத்திலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மேம்படுத்தும் தொலைநோக்கு பார்வையுடன், 1971 ஆம் ஆண்டிலேயே, அயராது உழைத்து தொழிற்பூங்காவின் உருவாக்கத்திற்கு தொடக்கப்புள்ளி வைத்தவர் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் ஆவார். அன்று கலைஞர் தொடங்கிய தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) […]

Continue reading …

வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150-ஆவது ஆண்டு விழாவை தமிழக அரசு சார்பில் ஓராண்டுக்கு கொண்டாட வேண்டும்!

Comments Off on வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150-ஆவது ஆண்டு விழாவை தமிழக அரசு சார்பில் ஓராண்டுக்கு கொண்டாட வேண்டும்!

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் அடையாளமாகத் திகழும் செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்தநாள் நூற்றி ஐம்பதாவது ஆண்டு வரும் செப்டம்பர்  5&ஆம் தேதி தொடங்குகிறது. தன்னை வருத்திக் கொண்டும், தமது செல்வங்களை இழந்தும் இந்திய விடுதலைக்காக போராடிய ஈடு இணையற்ற தலைவருக்கு மரியாதை செலுத்த இது சிறந்த வாய்ப்பாகும். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை மிகக்கடுமையாக எதிர்த்த தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆவார். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்த […]

Continue reading …

ஊதியத்தைப் பிடித்தம் செய்கிற முறையைக் கைவிட வேண்டும் – சீமான்!

Comments Off on ஊதியத்தைப் பிடித்தம் செய்கிற முறையைக் கைவிட வேண்டும் – சீமான்!

அண்மையில் கொண்டுவரப்பட்ட நடைமுறையின்படி, காவலர்கள் வாரத்தில் ஒருநாள் விடுப்பு எடுப்பதற்கு மிகைநேரப்பணி ஊதியம் பிடித்தம் செய்யப்படுகிறது எனும் செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். ஓய்வின்றித் தொடர் காவல் பணியில் ஈடுபடும் காவலர்களது உடற்சோர்வு, மனஅழுத்தத்தைப் போக்கவும், குடும்பத்தோடு செலவிட அவர்களுக்கு நேரத்தை வழங்கும் விதமாகவும் காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுப்பு வழங்க வேண்டுமெனத் தொடர்ச்சியாக நாங்கள் முன்வைத்த கோரிக்கை முழக்கத்திற்குச் செயல்வடிவம் கொடுத்திருக்கிறார்களென நம்பி, அரசுக்கு வாழ்த்தும், நன்றியும் தெரிவித்தவேளையில், அவ்விடுப்பு எடுப்பதற்கு ஊதியப்பிடித்தம் செய்யப்படும் செய்தி […]

Continue reading …

திண்டிவனம் இராமமூர்த்தி மறைவுக்கு மருத்துவர் இராமதாசு இரங்கல்!

Comments Off on திண்டிவனம் இராமமூர்த்தி மறைவுக்கு மருத்துவர் இராமதாசு இரங்கல்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் இராமமூர்த்தி உடல்நலக் குறைவால் இன்று காலை  காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்ட திரு. இராமமூர்த்தி அவர்கள், அக்கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் உழைத்தார். 1990-களின் பிற்பகுதியில், காங்கிரசிலிருந்து மூப்பனார் பிரிந்து சென்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியதால், காங்கிரஸ் வலுவிழந்து இருந்த நிலையில் அக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று சிறப்பாக வழிநடத்தினார். காங்கிரஸ்  சார்பில் சட்டப்பேரவை […]

Continue reading …

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் – தமிழக அரசுக்கு சத்குரு பாராட்டு !

Comments Off on வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் – தமிழக அரசுக்கு சத்குரு பாராட்டு !

“தமிழ்நாட்டில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்” என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பிற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில். “ வரலாற்று சிறப்புமிக்க வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கும் தமிழக அரசுக்கு பாராட்டுகள். மிக தொன்மையான வேளாண் பாரம்பரியம் கொண்ட, இயற்கை விவசாயத்தில் முன்னோடியான தமிழகம் இதன்மூலம் மகத்தான பொருளாதார, சுற்றுச்சூழல், ஆரோக்கிய பலன்களை நிச்சயம் பெறும். வாழ்த்துகள் @mkstalin ” என்று […]

Continue reading …

இல்லங்களுக்கு இனிக்கும் குடிநீர்: ஒதிஷாவில் சாத்தியமான கனவு தமிழ்நாட்டில் நனவாவது எப்போது?

Comments Off on இல்லங்களுக்கு இனிக்கும் குடிநீர்: ஒதிஷாவில் சாத்தியமான கனவு தமிழ்நாட்டில் நனவாவது எப்போது?

ஒதிஷா மாநிலத்தின் புனித நகரமான பூரியில் குழாய்கள் மூலம் ஐ.எஸ்.ஓ 10500 தரம் கொண்ட மிகவும் தூய்மையான குடிநீர் வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வீட்டு குடிநீர் குழாய்களிலும், பொது குடிநீர் குழாய்களிலும் புட்டிகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுவதை விட சுவையான, தரமான குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது நமக்கு ஏக்கத்தை ஏற்படுத்தும் செய்தி தான். இதற்குக் காரணமான நவீன் பட்நாயக் தலைமையிலான ஒதிஷா அரசு பாராட்டுகளுக்குரியது. உலகில் லண்டன், நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் தான் […]

Continue reading …

மலேசியாவில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை விரைந்து மீட்டு வர வேண்டும் -சீமான் வலியுறுத்தல்!

Comments Off on மலேசியாவில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை விரைந்து மீட்டு வர வேண்டும் -சீமான் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டிலிருந்து வேலைவாய்ப்புக்காக மலேசியா சென்ற தமிழர்கள் பலரை, அவர்கள் பணிபுரியச் சென்ற நிறுவனங்கள் தகுந்த பணியும், உரிய ஊதியமும் தராது ஏமாற்றியதோடு, கடவுச்சீட்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும் பறித்து வைத்துக்கொண்டதால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வரும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன். தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் தங்களது சொந்த செலவில்தான் நாடு திரும்ப வேண்டும் எனக்கூறி, சிறிதும் மனச்சான்றின்றி இந்தியத்தூதரகம் முற்றுமுழுதாகக் கைவிரித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. கொரோனா தொற்றுப்பரவலினால் தற்போது இடப்பட்டுள்ள உலகளாவியக் கட்டுப்பாடுகள் […]

Continue reading …

கண்ணீர் வேண்டாம்…பெருமிதம் கொள்வோம்-அன்புமணிஇராமதாஸ்!

Comments Off on கண்ணீர் வேண்டாம்…பெருமிதம் கொள்வோம்-அன்புமணிஇராமதாஸ்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் மகளிர் ஹாக்கி பிரிவில் இன்று நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியிடம் தோல்வி அடைந்ததை எண்ணி இந்திய வீராங்கனைகள் கண்ணீர் விட்டு கலங்கியது மிகவும் வேதனை அளிக்கிறது. அவர்கள் போட்டியில் தோற்றிருக்கலாம் ஆனால் இந்தியர்களின் இதயங்களை வென்றிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் கண்ணீர் விடவோ, கவலைப் படவோ தேவையில்லை. மாறாக இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததற்காக இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் பெருமிதம் கொள்ளவேண்டும். ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளின் […]

Continue reading …

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் – வேல்முருகன் எம் எல் ஏ!

Comments Off on பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் – வேல்முருகன் எம் எல் ஏ!

உச்சநீதி மன்றத்தின் புதிய தீர்ப்பின் அடிப்படையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. கடந்த 03.08.2021 அன்று, அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி  ஒருவரின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கில் முக்கியமான தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அதாவது,அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 கீழ் மாநில அரசு தண்டனைக் குறைப்பு வழங்க முழு அதிகாரம் கொண்டிருக்கிறது.  ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு இங்கு செயல்பட […]

Continue reading …