Home » Archives by category » தமிழகம் (Page 326)

கால்நடைதுறை அலுவலக கைகலப்பில் ஈடுபட்ட மூவர் சஸ்பெண்ட் !

Comments Off on கால்நடைதுறை அலுவலக கைகலப்பில் ஈடுபட்ட மூவர் சஸ்பெண்ட் !
கால்நடைதுறை அலுவலக கைகலப்பில் ஈடுபட்ட மூவர் சஸ்பெண்ட் !

நாகப்பட்டினம், மே 27 நாகப்பட்டினம் கால்நடை துறையின் இணை இயக்குனர் அலுவலகத்தில் உதவி இயக்குனராக கணேசன் வேலை பார்த்து வருகிறார். வேதாரண்யம் அருகே உள்ள கத்தரி புலம் கால்நடை மருத்துவர் ராஜா என்பவர் உதவி இயக்குனரிடம் கடந்த 20/05/2020 அன்று தனக்கு வேலையின் ஊதிய சான்றிதழ் கேட்டுள்ளார், இரண்டு நாட்கள் கழித்து தருவதாக கூறினாராம். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடைபெறும் போது அங்கு வேலை பார்க்கும் கிளார்க் செல்வராஜ் இருவரையும் சமாதானம் செய்யும்போது ராஜா […]

Continue reading …

ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

Comments Off on ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

சென்னை, மே 27 இலங்கை அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் உடல்நலக் குறைவால் 26.5.2020 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் பல ஆண்டுகளாக இலங்கை அமைச்சராக திறம்பட பணியாற்றியவர். இவர் இந்திய வம்சாவளி சமூகத்தின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர் மட்டுமின்றி, இலங்கை தமிழ் மக்களின் நலனுக்காக பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர். ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மறைவு இலங்கை மக்களுக்கும், […]

Continue reading …

சேமிப்புக் கிடங்கு இல்லாத திருமழிசை மார்க்கெட்… வீணாகும் காய்கறிகள்! விற்பனையும் மந்தம்

Comments Off on சேமிப்புக் கிடங்கு இல்லாத திருமழிசை மார்க்கெட்… வீணாகும் காய்கறிகள்! விற்பனையும் மந்தம்

சேமிப்புக் கிடங்கு இல்லாத திருமழிசை மார்க்கெட்… வீணாகும் காய்கறிகள்! விற்பனையும் மந்தம் சென்னையை அடுத்த திருமழிசையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட்டில் தினமும் 2 லட்சம் கிலோ அளவுக்கு காய்கறிகள் வீணாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் செயல்பட்டு வந்த கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து கொரோனா பரவ ஆரம்பித்ததால் அந்த மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து பழ மார்க்கெட் மாதவரத்துக்கும் காய்கறி மார்க்கெட் திருமழிசைக்கும் மாற்றப்பட்டன. ஆனால திருமழிசையில் சொல்லிக்கொள்ளும் படியான விற்பனை முதல் நாளில் இருந்தே இல்லை. […]

Continue reading …

லாரன்ஸ்சின் ஆதரவற்றோர் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

Comments Off on லாரன்ஸ்சின் ஆதரவற்றோர் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

கொரோனாவின் ஊரடங்கு சமயத்தில் பலருக்கும் உதவி செய்தார் ராகவா லாரன்ஸ். தற்போது அவரின் ஆதரவற்ற இல்லத்தில் 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் நடிகர் லாரன்ஸ் நடத்திவரும் ஆதரவற்றோர் இல்லத்தில் ஓன்று சென்னை அசோக் நகரில் உள்ளது. அந்த இல்லத்தில் 30க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அந்த இல்லத்தில் உள்ள அதே பகுதியில் இரண்டு பேர் கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் இல்லத்தில் உள்ள 30 […]

Continue reading …

தமிழகத்தில் இன்று அனல்காற்றும் மழையும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Comments Off on தமிழகத்தில் இன்று அனல்காற்றும் மழையும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று அனல்காற்றும் மழையும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! சென்னை உள்ளிட்ட 6 மாவட்ட மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் உச்சத்தைத் தொட்டுள்ளது. அதனால் மக்கள் பகல்வேளைகளில் வெளியே செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் வியர்வையால் குளிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் இன்று சென்ன, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று […]

Continue reading …

தமிழக அரசின் செயல்பாடு எப்படி? கூட்டணிக் கட்சி தலைவர் விமர்சனம்!

Comments Off on தமிழக அரசின் செயல்பாடு எப்படி? கூட்டணிக் கட்சி தலைவர் விமர்சனம்!

தமிழக அரசின் செயல்பாடு எப்படி? கூட்டணிக் கட்சி தலைவர் விமர்சனம்! கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிமுக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கொரோனா பேரிடரை வட இந்திய மாநிலங்களை விட தென்னிந்திய மாநிலங்கள் சிறப்பாக கையாண்டு வருகின்றனர். தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், இறப்பு எண்ணிக்கை குறைவாகவும் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது. இத்தனைக்கும் மத்திய அரசிடம் மாநில அரசு கேட்ட நிதி முழுவதுமாக வந்து சேரவில்லை. இந்நிலையில் […]

Continue reading …

நினைவில்லமாக மாற்றப்படும் வேதா இல்லம் – முட்டுக் கட்டை போடு ஜெ தீபா!

Comments Off on நினைவில்லமாக மாற்றப்படும் வேதா இல்லம் – முட்டுக் கட்டை போடு ஜெ தீபா!

நினைவில்லமாக மாற்றப்படும் வேதா இல்லம் – முட்டுக் கட்டை போடு ஜெ தீபா! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த அவரது வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்பட உள்ளதற்கு ஜெ தீபா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள தனது வேதா இல்லத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார். அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு இறந்த நிலையில் தற்போது அந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றவேண்டும் என அதிமுக […]

Continue reading …

மருத்துவர் இராமதாஸ் இரமலான் வாழ்த்து!

Comments Off on மருத்துவர் இராமதாஸ் இரமலான் வாழ்த்து!
மருத்துவர் இராமதாஸ் இரமலான் வாழ்த்து!

 சென்னை, மே 24  திருக்குரான் வழங்கப்பட்ட மாதத்தின் நிறைவாக இரமலான் திருநாளைக் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை ‘‘நோன்பு பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்; தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்; யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி!’ என்று இருமுறை கூறட்டும்; என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ […]

Continue reading …

அறநிலையத் துறையில் நான்கு இணை ஆணையர்கள் அதிரடியாக பணியிட மாற்றம்!

Comments Off on அறநிலையத் துறையில் நான்கு இணை ஆணையர்கள் அதிரடியாக பணியிட மாற்றம்!
அறநிலையத் துறையில் நான்கு இணை ஆணையர்கள் அதிரடியாக பணியிட மாற்றம்!

சென்னை, மே 24 தமிழக இந்து சமய அறநிலையத் துறையில் பணிபுரிந்து வந்த நான்கு இணை ஆணையர்கள் நேற்று 23/ 5 /2020vஅதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த திடீர் பணியிட மாற்றம் உத்தரவால் அறநிலையத்துறையில் பெரும் சலசலப்பை உருவாகியுள்ளது.  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இணை ஆணையராக கடந்த 6 வருடங்களாக கோலோச்சிக் கொண்டு வானளாவிய அதிகாரத்தோடு மீனாட்சி அம்மன் கோவிலில் வலம் வந்த நடராஜனை அதிரடியாக சேலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதைப்போல சென்னை, […]

Continue reading …

பாஜகவுக்கு சென்ற வி பி துரைசாமிக்கு பெரிய பதவி காத்திருக்கிறது! அமித்ஷாவின் திட்டம்!

Comments Off on பாஜகவுக்கு சென்ற வி பி துரைசாமிக்கு பெரிய பதவி காத்திருக்கிறது! அமித்ஷாவின் திட்டம்!

பாஜகவுக்கு சென்ற வி பி துரைசாமிக்கு பெரிய பதவி காத்திருக்கிறது! அமித்ஷாவின் திட்டம்! திமுகவின் துணைப்பொதுச்செயலாளராக இருந்த வி பி துரைசாமி சில தினங்களுக்கு முன் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் வி பி துரைசாமிக்கும் தலைமைக்கும் கடந்த சில மாதங்களாக நல்லுறவு இல்லை என்று சொல்லப்பட்டு வந்தது. அதை உறுதி செய்யும் விதமாக அவர் திமுக தலைவர் ஸ்டாலின் மேல் ஒரு குற்றச்சாட்டை வைத்தார். தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்ட எல்.முருகனை சந்தித்த […]

Continue reading …