
வேலூர்,ஏப்ரல் 28 கென்னடி வேலூர் மாவட்டம், காட்பாடியில் கள்ள சாராயம் விற்ற 3 பேர் கைது, 90 லிட்டர் சாராயம் அழிப்பு. காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் உள்ள அம்பேத்கர் தெருவில் கள்ளசாராயம் விற்பதாக விருதம்பட்டு காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலையடுத்து அம்பேத்கர் தெருவில் உள்ள பொதுக் கழிவறையின் பின்புறம் மறைத்து வைத்திருந்த சுமார் 60 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்தனர்.கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த பல்லு (எ) ஜெய மணிகண்டன் (32), காளியப்பன் (28) ஆகிய […]
Continue reading …
சென்னை, ஏப்ரல் 27 தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அடுத்தடுத்து முன்னேற்றங்கள் எட்டப்பட்டு வருவது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. புதிய தொற்றுகள் குறைந்து வரும் நிலையில், இதே நிலையை தக்கவைத்துக் கொள்வது தான் தமிழகத்தின் முதன்மைக் கடமையாகும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 52 புதிய நோய்த் தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1937 ஆக உயர்ந்துள்ளது. […]
Continue reading …
சென்னை, ஏப்ரல் 27 மேதகு பிரபாகரன் அவர்களை இழிவு படுத்திய மலையாள இயக்குனர் அனூப், நடிகர் துல்கர் சல்மான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். “வரனே அவஸ்யமுன்ட்” என்கிற மலையாள திரைப்படத்தில் எங்களின் தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பெயரை இழிவு படுத்தும் விதமாக நாயினை வைத்து காட்சிப்படுத்தி ஏளனம் செய்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. கலை என்பது சமூகத்தை சீர்திருத்துவதாகவும் சமூக மாற்றத்துக்கு வித்திடுவதாகவும் இருக்க வேண்டும். அதை விடுத்து ஒரு வரலாற்றுக்குரிய தலைவரை அசிங்கப்படுத்துவது எப்படி அறமாகும். […]
Continue reading …
கோவிட் 19 நோய்க்கு எதிரான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இவை மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நாடுமுழுவதும் கண்டிப்பாக பின்பற்றப்பட்டு வருகின்றன. கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டவரைக் கண்டறிந்து, அவர்களிடமிருந்து வைரஸ் தொற்றி விடாமல் பாதுகாப்பான தொலைவில் இருக்க உதவும் வகையிலான ஆரோக்கிய சேது என்ற செயலியையும் மத்திய அரசு ஒரு முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மாநில தகவல் தொழில்நுட்பத் துறை, அனைத்துத் துறை ஊழியர்களும் ஆரோக்கிய சேது அலைபேசி செயலியைப் பயன்படுத்துமாறு அனைத்து துறைகளையும் அறிவுறுத்தியுள்ளது. தாங்கள் எந்த அளவிற்கு கோவிட் 19 (கொரோனா வைரஸ்) நோயால் பாதிக்கப்படலாம் என்பதை […]
Continue reading …
கோவை, ஏப்ரல் 26வே. மாரீஸ்வரன் தமிழகமெங்கும் 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து திருப்பூர் மாநகர பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி போய் இருந்த நேரத்தில் குடிமகன்களுக்கு தங்குதடையின்றி சரக்கு விற்றுக் கொண்டிருந்த ஆசாமிகளை ரகசிய தகவலின் பேரில் கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்த திருப்பூர் வடக்கு காவல் நிலைய எஸ். ஐ. ராஜேந்திர பிரசாத்துக்கு பல அதிர்ச்சித் தகவலை ஒப்புதல் வாக்குமூலமாக தந்திருக்கிறார்கள் திருட்டு […]
Continue reading …
வேலூர்,ஏப்ரல் 27கென்னடி வேலூரில், போலீசார் நடத்திய சோதனையில், ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 100 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்திவந்த 13 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டன.வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் ஆணையின்படி, வேலூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்திரவின்பேரில், பாகாயம் காவல் வட்ட ஆய்வாளர் நந்தகுமார் தலைமையில் அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அசோக்குமார் பார்ட்டி ஆகியோர் சேர்ந்து, முக்கிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.வேலூரின், சகிதம் அரியூர் […]
Continue reading …
ஏப்ரல் 27 எதிர்பாராத அளவிற்கு உலகையே உலுக்கி வரும், உலகுக்கே சுகாதார சவாலாக உள்ள கோவிட் 19 நோயால் ஏற்பட்டுள்ள நிலைமைகளை எதிர்கொள்வதற்காக, பலமுனை அணுகுமுறையை அரசு எடுத்து வருகிறது. இந்நோய்க்கு எதிரான நடவடிக்கைகளில் பங்காற்றும் முன்னணிப் போராளிகளுக்கு காப்பீட்டுத் துறை, உடல்நலக் காப்பீடு வழங்கி அரசின் முயற்சிகளுக்கு, பயனுள்ள முறையில் உதவி புரிந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் 15 ஏப்ரல், 2020 அன்று வெளியிட்ட ஆணையின்படி திருத்தியமைக்கப்பட்ட SOP விதிமுறைகளின்படி, அனைத்து துறைகளிலும் உள்ள, அனைத்து பணியாளர்களுக்கும் முறையான மருத்துவக் காப்பீடு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து தொழில் துறை நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள், பணியிடங்கள், அலுவலகங்கள், தலங்கள் அனைத்திலும் உள்ள பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்துப் பணியாளர்களுக்கும், மருத்துவக் காப்பீடு […]
Continue reading …
சென்னை, ஏப்ரல் 27 துல்கர் சல்மான் நடிப்பில் “வரனே அவசியமுண்ட” மலையாள மொழி திரைப்படத்தில் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு .வே.பிரபாகரன் அவர்களின் பெயரில் இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மலையாள மொழியில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள “வரனே அவசியமுண்ட (Varane Avashyamund)” திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியில், […]
Continue reading …
சென்னை, ஏப்ரல் 27 கொரோனா வைரஸ் பரவல் அச்சம் மற்றும் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப் படும் ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் சில பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், ஊரடங்கால் பல நன்மைகளும் விளைந்துள்ளன. அவற்றில் முதன்மையானது மதுவை மக்கள் மறந்திருப்பது தான். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 39 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டதற்கு பிறகு இன்று வரையிலான 31 ஆண்டுகளில் மதுவிலக்கை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட […]
Continue reading …
கோவை, ஏப்ரல் 26 வே. மாரீஸ்வரன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இட்லி பாட்டியுடன் செல்போன் வீடியோ காலில் தொடர்புகொண்டு நலம் விசாரித்த விவகாரம் தற்போது தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சலசலப்பை உருவாகியுள்ளது. சரி, நடந்து முடிந்த சம்பவத்திற்கு செல்வோம், ஒரு ரூபாய் இட்லி என்றால் நம் கண்முன்னே வந்து செல்பவர் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி ஆலந்துறை அருகேயுள்ள உள்ள வடிவேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இட்லி […]
Continue reading …