
சென்னை, ஏப்ரல் 26 சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட 5மாவட்டங்களில் இன்று முதல் முழுமையான ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்ததும் பொதுமக்கள் தேன் கூட்டில் கல்லெறிந்தது போல் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க நேற்றைய தினம் (25.04.2020) கடைகளிலும், சந்தைகளிலும் சமூக விலகலை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக கூடி விலையில்லா கொரானாவை பரப்பி விடுவார்களோ..? என்கிற அச்சத்தை ஏற்படுத்தினர். இந்நிலையில் பொதுமக்களுக்கு பால் விநியோகம் செய்வது தொடர்பாக நேற்று மதியம் எங்களது […]
Continue reading …
சென்னை, ஏப்ரல் 26 உயிர் கொல்லி நோயான கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்தி இல்லாதொழித்திட நாடு முழுவதும் 24.03.2020 முதல் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும், தனித்திருக்க வேண்டும், விழிப்பாய் இருக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரால் அறிவுரை வழங்கப்பட்டு, அதைத் தொடர்ந்து அரசுத் துறைகள் முழுவீச்சில் களப்பணியாற்றி வருகின்றன. வீட்டில் முடங்கி கிடக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் தன்னலம் பேணி, குடும்பத்தையும் காத்து, நாட்டை நலமாய் […]
Continue reading …
சென்னை, ஏப்ரல் 26 தமிழகத்தில் கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சனைகளை களைந்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விளைபொருட்களைபாதுகாத்துசேமித்திட கிடங்குவசதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பயன்பாட்டிற்காக நவீன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டு, அவை பயன்பாட்டில் இருந்து வருகின்றன. விவசாயிகள் விளைபொருட்களை இக்கிடங்குகளில் 180 நாட்கள் வரை வைத்து பாதுகாத்திடலாம். அதிக விலை கிடைக்கப்பெறும் காலங்களில் விளைபொருட்களை கிடங்கிலிருந்து எடுத்து விற்பனை செய்திட, கிடங்கு […]
Continue reading …
சென்னை, ஏப்ரல் 26 தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 1821 பேரில் 104 பேர் 12 வயதுக்கும் குறைந்த குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது. ஒரு தவறும் செய்யாத குழந்தைகள் குடும்பத்தினரின் அலட்சியத்தால் கொரோனா வைரஸ் நோய் கொடுமைக்கு ஆளாகியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில், நேற்று ஒரு நாளில் மட்டும் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 2 முதல் […]
Continue reading …
கோவை, ஏப்ரல் 25 வே. மாரீஸ்வரன் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் பொருட்டு மத்திய அரசு மற்றும் தமிழக அரசு கடந்த மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. இந்நிலையில், கோவையில் இயங்கும் சில தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்குரிய முழு ஊதியத்தையும் வழங்க மத்திய மாநில அரசுகள் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர். ஆனால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில நிறுவனங்கள் […]
Continue reading …
நாகை, ஏப்ரல் 25 மூர்த்தி (எ) சிற்பி ஐந்து மாற்றுத் திறனாளி குடும்ப நபர்களுடன் வசித்து வரும் திருமணஞ்சேரி கோவிலின் ஊழியருக்கு, மயிலாடுதுறை ஆன்மீக பேரவை, நிவாரண உதவிகளை செய்துள்ளது. நாகை மாவட்டம் குத்தாலம் அருகே, திருமணஞ்சேரி என்ற கிராமத்தில், புகழ்பெற்ற கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. திருமணம் தடை உள்ளவர்கள், இக்கோவிலுக்கு சென்று வந்தால் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். இக்கோவிலில் பணிபுரியும் முரளி என்பவரின் குடும்பத்தினர் ஐந்து பேரும் மாற்றுத் திறனாளிகள். கொரோனா வைரஸ் காரணமாக […]
Continue reading …
நாகை, ஏப்ரல் 25 மூர்த்தி (எ) சிற்பி நாகப்பட்டினத்தில் டி.எஸ்.பி.அலுவலகத்தின் பக்கத்தில் காவல்கள் அங்காடி உள்ளது. அதன் அருகில் காவலர்கள் குடியிருப்புகள் இருப்பதால் காவலர்கள் பணியில் இருக்கும் போது குடும்பத்தினர் அங்காடியில் மளிகை பொருள் மற்றும் தேவையான பொருள்கள் வாங்குவதற்கு ஏதுவாக இருந்தது. இதில் சிறை காவலர்கள், வன விலங்குதுறை, தீயணைப்பு துறை, காவல் துறை போன்றவர்கள் பயன் பெற்று வந்தனர். ஆயுதப்படையின் டி.எஸ்.பி யின் மேற்பார்வையில் இயங்கி வந்த அங்காடி, கடந்த ஒரு மாத காலமாக […]
Continue reading …
Continue reading …

கோவை, ஏப்ரல் 24 வே. மாரீஸ்வரன் கோவை மாநகரத்தில் ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாடக் கூலி வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஏழை எளிய மக்களின் பசி, பட்டினியை போக்க கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண அன்னதானத்தில் இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தா. குணா, கோவை கோட்ட செயலாளர் சதீஷ், […]
Continue reading …
சென்னை, ஏப்ரல் 24 கொரோனா நோய் தொற்றின் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு மத்திய மற்றும் மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. எனினும் இந்த ஊரடங்கு நேரத்தில் பொது மக்களுக்கு தேவையான பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்வதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆவின் பாலகங்கள் இந்த நெருக்கடியான சூழ்நிலையில், தொடர்ந்து பால் வழங்கும் பொருட்டு, தனிமைப்பட்ட பகுதிகளில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்திட, பொது மக்களுக்கு தேவைப்படும் இடங்களில் […]
Continue reading …