கென்னடி ராணிப்பேட்டை : கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை ரூபாய் 1,14,572/- தமிழக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் வழங்கினார்.
Continue reading …சென்னை : கொரோனா வைரஸ் நோய் தடுப்பிற்காக, 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவைப்படும் முக்கிய உணவுப்பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு அரசு, போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்கின்ற வேளாண் பெருமக்களின் நலனை கருத்தில் கொண்டு கீழ்கண்ட திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 1. விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை […]
Continue reading …வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் அக்ரஹாரம் கிராமம், பிள்ளையார் கோவில் தெரு என்ற முகவரியில் யோகானந்தம் என்பவர் போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் இரவு 7.30 மணி அளவில் மேற்படி முகவரிக்கு சென்று சோதனை செய்ததில் Dr.விஜயகோவிந்தராஜன், MBBS.,DLO என்பவரின் பெயரில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிளினிக் இயங்கி வருகிறது. மேற்படி கிளினிக்கில் யோகானந்தம் என்பவர் வயதான பாட்டி ஒருவருக்கு ஊசி போட்டு, மாத்திரை வழங்கி மருத்துவம் பார்த்து வந்தார். மேலும் மேற்படி கிளினிக்கில் […]
Continue reading …கென்னடி திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு மலை கிராம பகுதிகளில் கள்ள சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலின் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராணி, விஜயமுத்துக்குமார் அடங்கிய குழுவினர் திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட ஜவ்வாது மலை புதூர் நாடு கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் 8 ஊறல்களில் கள்ளசாராயம் பதப்படுத்தியது தெரியவந்தது பின்னர் போலீசார் அதனை கீழே ஊற்றி […]
Continue reading …சென்னை : தமிழக மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 47 முதுநிலை திருக்கோயில்களில் பணியாற்றும் 3500 திருக்கோயில் பணியாளர்கள். தங்களது ஒரு நாள் ஊதியம் ரூபாய். 52,50,000/- கொரோனா சிகிச்சைக்குத்தேவையான மருத்துவ உபகரணங்கள், நோய் தடுப்பு மருந்துகள் கொள்முதல் செய்வதற்கும் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நிதியினை வழங்கும் வகையில், முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர் என்று இந்து சமய அறநிலையத் துறை […]
Continue reading …வே. மாரீஸ்வரன் கோவை : தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று, இரண்டாம் இடத்தில் உள்ளது கோவை மாவட்டம். மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் முழுவீச்சில் இரவு பகல் பாராமல் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகளையும் நோய் தொற்று உள்ள இடங்களில் கிருமி நாசினி தெளித்து நோய்த் தொற்றைத் தடுத்து கொண்டு வருகின்றனர். வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் இந்நேரத்தில் தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா. […]
Continue reading …சென்னை : சென்னை ரிப்போர்ட்டர்ஸ் கில்ட் கொரோனா வைரஸ் நெருக்கடியை சமாளிக்க தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இடையே, சிரமமான சூழ்நிலைகளில், பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கியுள்ளீர்கள். இதற்காக, உங்கள் முயற்சிகளை, நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் கேமரா மேன்களின் தொழில்முறை அமைப்பான மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்ட், பாராட்டுகிறது. உங்கள் நோக்கம் பாராட்டத்தக்கது என்றாலும், அதற்கு பதிலாக மாநிலத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு சில […]
Continue reading …சென்னை : இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ஏப். 8-ம் தேதி அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாட உள்ளார்.இது தொடர்பாக இன்று பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். அப்போது அனைத்துக்கட்சி கூட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.
Continue reading …ஈரோடு : கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே சில தனியார் பள்ளிகள் அடுத்த கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை வசூலிப்பதாகப் புகார் எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையத்தில் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர் சில தனியார் பள்ளிகள், ஊரடங்கின்போது கல்விக் […]
Continue reading …சென்னை : பகவான் மகாவீரர் அவர்களின் பிறந்த தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அகிம்சையை அடிப்படையாக கொண்ட சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரராக விளங்கிய பகவான் மகாவீரர் அவர்கள், மூன்று ரத்தினங்கள் எனப்படும் நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை ஆகியவற்றை மக்களுக்கு போதித்ததோடு, பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையே அறம் என்றுரைத்து, வாய்மையைப் போற்றி, ஆசைகளைக் களைந்து, பற்றற்ற நிலையைக் கடைப்பிடித்து, அறநெறியினை […]
Continue reading …