
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கார் டயர் வெடித்து கோர விபத்து – 3 பேர் உயிரிழந்த சோகம். தஞ்சையில் இருந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியே புதுச்சேரிக்கு காரில் சுற்றுலா திட்டக்குடி அருகே எழுத்தூர் கிராமத்தில் காரின் டயர் வெடித்து பயங்கர விபத்து காரில் பயணித்த பெண், சிறுமி உள்ளிட்ட 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த பரிதாபம் காயம் அடைந்த மேலும் 5 பேருக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
Continue reading …
அடுத்து ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து, விருதுநகர் விபரீதம். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து. பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. காலை நேரத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில், தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு. விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் 5வது முறையாகப் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.
Continue reading …
திண்டுக்கல் விளாம்பட்டி காவல் ஆய்வாளர் வீட்டில் 250 பவுன்,ரூ.5 லட்சம் திருட்டு. திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஷர்மிளா இவருடைய மதுரை பாசிங்காபுரம், மீனாட்சிநகரில் உள்ள வீட்டில் 250 பவுன் தங்க நகை, ரூ.5 லட்சம் திருடிய மர்ம நபர்களை அலங்காநல்லூர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்
Continue reading …
சமீபத்தில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் வெளியானது. தேனி மாவட்டம் கம்பம் கிளப் ரோடு மணி நகரத்தில் குடியிருக்கும் கண்ணன் மகன் ஜெயாவர்மன் (வயது 17) கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். அவர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 க்கு 494 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். நேற்று மாணவன் வீட்டில் தனியாக இருந்த பொழுது தனது வீட்டின் மூன்றாவது மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். வெகு நேரமாக வீட்டில் […]
Continue reading …
சமீபத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு எழுதிய மாணவர்களில் 94 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான மறு தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது, அதற்கான விண்ணப்பம் பூர்த்தி செய்யும் தேதியும் அறிவிக்கப்பட்டது. 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இன்று காலை தேர்வு முடிவுகள் 9 மணிக்கு தேர்வு துறை இயக்குனர் […]
Continue reading …
சுப்ரீம் கோர்ட்டில் சிறைகளில் இட நெருக்கடி அதிகரித்து வருவதை அடுத்து திறந்தவெளி சிறைச்சாலை அமைக்கலாம் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சிறைகளில் இடநெருக்கடிகளை குறைக்க திறந்தவெளி சிறைகள் மற்றும் திறந்தவெளி முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த முறை அமல்படுத்தப்பட்டால் இட நெருக்கத்தின் தீர்வு காண்பது மட்டுமின்றி கைதிகள் மறுவாழ்வுக்கும் தீர்வாக இருக்கும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. திறந்தவெளி சிறை மூலம் சமுதாயத்துடன் கைதிகளை ஒருங்கிணைக்க செய்ய முடியும் என்றும் சிறைக்கு […]
Continue reading …
சேலம் மாவட்டம் ஓமலூரில் நிர்மாணிக்கப்பட்ட 56 அடி உயர முருகன் சிலை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மலேசியாவில் இருக்கும் முருகன் கோவில் போல் தமிழகத்தில் பல பகுதிகளில் சிலை அமைத்து வழிபாடு நடந்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் முருகருக்கு 56 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. முருகன் என்றால் அழகு என்பார்கள். அதற்கேற்றார்போல வீட்டு காலண்டர் தொடங்கி கோவில் வரை சிரித்த இதழோடு அழகிய முருகனை கண்டிருப்போம். ஆனால் அந்த […]
Continue reading …
பாலிவுட் நடிகையை வளர்ப்புத் தந்தையே சொத்துக்காக கொலை செய்து புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு பாலிவுட் நடிகை லைலா கான் திடீரென காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். லைலா கானின் தாயார் பர்வேஸை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் என்றும் அவர்தான் லைலா காணாமல் போனதற்கு காரணம் என்றும் கண்டுபிடித்தனர். இதை அடுத்து பர்வேஸிடம் போலீசார் விசாரித்த […]
Continue reading …
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்ப 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அத்தியாவசியமான பொருள்களை தரமான எடையாகவும் பொட்டலமாகவும், வழங்கிட வேண்டும் என்றும் , சரியான எடையில் அத்தியாவசியமான பொருட்களை இறக்காமல் அபராதம் […]
Continue reading …
கம்பத்தில் பன்னிரண்டாம் வகுப்பில் 494 மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை. தேனி மாவட்டம் கம்பம் கிளப் ரோடு மணி நகரத்தில் குடியிருக்கும் கண்ணன் மகன் ஜெயாவர்மன் (வயது 17) இவர் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். தற்பொழுது நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 க்கு 494 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாணவன் வீட்டில் தனியாக இருந்த பொழுது தனது வீட்டின் மூன்றாவது மாடியில் தூக்கிட்டு […]
Continue reading …