
விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.எல்.ஏ. புகழேந்தி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கல்லீரல் பிரச்சனை இருந்ததாக சொல்லப்படுகிறது.
Continue reading …
*கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை: போலீசார் விசாரணை* கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளியில் உள்ள SBI வங்கி ATM-ஐ உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். ஏடிஎம்-ல் இருந்து சுமார் ரூ.10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Continue reading …
நேற்று நடைபெற்ற 10ம் வகுப்பு அறிவியல் பொதுத்தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவடைந்துள்ளது-. தற்போது 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 26ம் தேதி தொடங்கிய இத்தேர்வை லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் எழுதி வருகின்றனர். நேற்று நடைபெற்ற அறிவியல் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்பாராத பல வினாக்கள் வினாத்தாளில் இருந்ததாகவும் வழக்கமாக இடம்பெறும் கேள்விகள் 25 சதவீதம் கூட […]
Continue reading …
காங்கிரஸ் பிரமுகர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பார்வை இல்லாத ஒருவன் கண்ணாயிரம் என்று பெயர் வைத்துக் கொள்வது போல் ஊரை சுற்றிக் கொண்டிருக்கும் பரதேசி சீமான் என்ற பெயர் வைத்துக் கொள்வான் என்று தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி போட்டியில் இருக்கிறது. சீமான் கட்சி மட்டும் தனித்து போட்டியிடுகிறது. இதை ஒரு நான்காவது கூட்டணியாக அரசியல் விமர்சகர்கள் கண்டுகொள்ளவே இல்லை. ஏனெனில் […]
Continue reading …
தென்னக ரயில்வே சிறப்பு வந்தே பாரத் ரயில் சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இடையே இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பள்ளி கல்லூரிகள் தேர்வு முடிவடையும் நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையிலிருந்து நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தென்னக ரயில்வேயின் செய்தி குறிப்பில், சென்னை, எழும்பூரில் இருந்து வரும் ஏப்.5, 6, 7, 12, 13, 14, 19, 20, 21, 26, 27, 28 தேதிகளில் காலை […]
Continue reading …
பள்ளி கல்வித்துறை ரம்ஜான் பண்டிகைக்காக ஒரு சில தேர்வுகள் தேதி மாற்றம் செய்தது. கோடை விடுமுறை எப்போது என்பது குறித்த தகவலையும் அறிவித்துள்ளது. பள்ளிகல்வித்துறை ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 2ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடத்தப்படும் என்றும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் 13 முதல் நடத்தப்படும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்படி […]
Continue reading …
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியக் கால கடனுக்கான எந்த மாற்றமும் இல்லை என்றும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள 6.5% வட்டி விகிதம் என்படு தொடரும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒரு முறை ரெப்போ வங்கி வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில் “ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. ரெப்போ வங்கி வட்டி விகிதம் […]
Continue reading …
தமிழகத்தில் ஏற்கனவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை மேலும் கடுமையாகும் என தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு காற்றின் திசை மாறுபாடு காரணமாக வரும் 8ம் தேதி வரை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். அதிகபட்சமாக வெப்பநிலை வட தமிழக மாவட்டங்களில் 105.8 டிகிரி பாரன்ஹீட் வரையிலும், உள் மாவட்டங்களில் 102.2 டிகிரி பாரன்ஹீட் வரையிலும், கடலோரப்பகுதிகளில் 98.6 டிகிரி […]
Continue reading …
திருவெண்ணெய் நல்லூர் பகுதியில் கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைத்ததாக 5 நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை. உயிரிழந்த ராதாகிருஷ்ணனும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்த நிலையில், அப்பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார் பெண்ணின் உறவினர்கள் போலீசில் சென்று புகாரளிக்க, நேற்று காவல் நிலைய வாசலில் உள்ள கோயிலில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். தனக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாகக் கூறி, பெண்ணின் உறவினர்கள் 5 பேரின் […]
Continue reading …
திருச்சி கிராமத்தில் செயல்படும் கல்குவாரியில் விதிமீறல்கள் நடைபெற்றது உண்மையா? என ஆய்வு செய்ய உத்தரவு!! திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கிராமத்தில் செயல்படும் கல்குவாரியில் விதிமீறல்கள் நடைபெற்றது உண்மையா? என ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கல் குவாரியில் ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த செண்பகவல்லி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற கிளை இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Continue reading …