
பாஜகவில் டிஆர் பாலுவின் மூன்றாவது மனைவியின் மகள் மனோன்மணியை இணைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. கலைஞர் கருணாநிதி காலத்தில் இருந்தே திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கிறார் டி.ஆர்.பாலு. இவர் திமுகவின் தலைமைக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்டு வருகிறார். டி.ஆர்.பாலு தற்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரது மகன் டி.ஆர்.பி.ராஜா ஏற்கனவே அமைச்சராகவுள்ளார். டி.ஆர்.பாலுவின் மூன்றாவது மனைவியின் மகள் மனோன்மணியை பாஜகவுக்கு இழுக்க தீவிர முயற்சி செய்யப்பட்டு வருவதாகவும் டி.ஆர்.பாலுவுக்கும் மனோன்மணிக்கும் […]
Continue reading …
அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் உள்பட 300 பேர் மீது கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதி இன்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனுமதி இன்றி கூட்டம், பிரச்சாரம் செய்பவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு […]
Continue reading …
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராமதாசுக்கு சீட் பேரம் தான் முக்கியம் என்று விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ஜெயலலிதா இல்லை என்றால் பாமக வெளியே தெரிந்திருக்காது. எங்கள் முதுகில் ஏறி சவாரி செய்தவர்கள் பாமகவினர், பாமக தொண்டர்களே அதிமுகவுடன் கூட்டணி வைக்க தான் விரும்பினார்கள். பேரம் அதிகமாகும் இடத்தில் தான் ராமதாஸ் உடன்படுவாறே தவிர கொள்கையாவது, கூட்டணியாவது, வெங்காயமாவது, எதுவுமே அவருக்கு கிடையாது. பாமகவுக்கு அங்கீகாரம் கொடுத்தது, அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது அதிமுக தான். […]
Continue reading …
முதுகுளத்தூர் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ மலேசியாபாண்டியன் அதிமுகவில் சேர்ந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலச் செயலாளர், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர், மலேசியா.பாண்டியன், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
Continue reading …
Continue reading …

உங்களில் ஒருவனாக இருந்து மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன் பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு பிரச்சாரம். கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோகைமலை மேற்கு ஒன்றியத்தில் பெரம்பலூர் பாராளுமன்றதொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு கிராமம் கிராமமாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். தனது பிரச்சாரத்தை கள்ளையில் துவைக்கினார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்தும், நிர்வாகிகள் தொண்டர்கள் சால்வை அனைத்தும் அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர். பொதுமக்கள் மத்தியில் திமுக வேட்பாளர் அருண் நேரு […]
Continue reading …
அவர்களிடம் இருப்பது பணபலம், நம் கூட்டணியில் இருப்பது மக்கள் பலம் :மண்ணின் மைந்தன் சந்திரமோகனை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள். பெரம்பலூர் பிரச்சாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு. பெரம்பலூர் சங்கு பிரிவு அருகே பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: எடப்பாடியார் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி மக்கள் கூட்டணி, தொண்டர்கள் விரும்பிய கூட்டணி, விஜயகாந்த், […]
Continue reading …
பிரதமர் மோடி மற்றும் பாஜக பிரபலங்கள் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசி வருகின்றனர். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டது குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்று வெளியிட்டார். அதை தொடர்ந்து பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் என பலரும், கச்சத்தீவை இலங்கைக்கு அளித்தது குறித்து காங்கிரஸ் & திமுகவை விமர்சித்து வருகின்றனர். மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கச்சத்தீவு […]
Continue reading …
உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வழக்கில் அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. செந்தில்பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அவர் வேலை வாங்கி தருவதாக பெற்ற பணத்தை, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 14ல் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக கடந்தாண்டு ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் […]
Continue reading …
பேட்டி ஒன்றில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுகவுக்கு உயிர் கொடுத்தது நாங்கள் தான் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இணைய பாமக பேச்சுவார்த்தை நடத்தியது. திடீரென பாஜக கூட்டணியில் இணைந்தது. இதனால் கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் பாமக தலைவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர். பேட்டி ஒன்றில் அன்புமணி ராமதாஸ், “அதிமுகவுக்கு பலமுறை நாங்கள் தான் உயிர் கொடுத்தோம். 1996ல் ஜெயலலிதா […]
Continue reading …