
பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தேர்தல் விதிகளை மீறியதாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 19ம் தேதி தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. தேர்தல் விதிகளை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தருமபுரி மக்களவை தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். மேட்டூர் அருகே உள்ள மேச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் […]
Continue reading …
வரும் ஏப்ரல் 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் சமீபத்தில் முடிவடைந்தது. வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் வாபஸ் பெற்றுக்கொள்ள இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ஒவ்வொரு தொகுதிகளிலும் வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைந்தது. 39 தொகுதிகளில் 1749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் பரிசீலனை […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை காளப்பட்டியில் இந்து முன்னணி சார்பில் நடந்த 100% வாக்களிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்றார். அவர் பின் செய்தியாளர்களிடம், “வேட்பு மனு தாக்கல் குறித்த கேள்விக்கு அரசியல் கட்சிகள் நேரடியாக களத்தில் எதிர்க்க முடியாமல் எப்பொழுதும் வழக்கமான டிராமா வேற்று மொழி கொண்டு வந்துள்ளார்கள் இரண்டு வேட்பு மனுக்கள் சப்மிட் செய்வோம் அரசியல் கட்சிகளுக்கும் முறையாக வைத்துள்ளோம் சீரியல் நம்பர் 15, 27 வேட்பு மனுக்கள் சப்மிட் செய்யப்பட்டுள்ளது, […]
Continue reading …
நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல். முருகன் தேர்தல் நடத்தை விதிகள் மீறியதாக மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, […]
Continue reading …
தமிழகம் முழுவதும் திமுக எம்பி கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் அவர் பரவலாக பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று கரூர் தொகுதியில் ஜோதிமணிக்காக பிரச்சாரம் செய்த கனிமொழி இன்று கோவையில் பிரச்சாரம் செய்கிறார். அவர் இந்த பிரச்சாரத்தில், “பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை. ஏழை விவசாயிகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்கிறது. மக்களவைத் தேர்தலில் நிச்சயமாக பாஜக ஆட்சிக்கு வராது. திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி சிக்கல்கள், குளறுபடிகள் […]
Continue reading …
பிரதமர் மோடி தமிழக பாஜக நிர்வாகிகளுடன் இன்று மாலை 5 மணிக்கு காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், அவர், “இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி மூலம் பாஜகவின் கடின உழைப்பாளிகளுடன் உரையாடல் நடத்த உள்ளேன். தமிழ்நாட்டில் உள்ள நமது நிர்வாகிகள் எப்படி மக்கள் மத்தியில் பணியாற்றுவதும், நமது கட்சியின் நல்லாட்சி நிகழ்ச்சி நிரல் மாநிலம் முழுவதும் திறம்பட தெரிவிக்கப்படுவதை உறுதி செய்வதும் பாராட்டுக்குரியது. தி.மு.க.வின் தவறான ஆட்சியால் தமிழகம் […]
Continue reading …
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் மோடி வரக்கூடாது என கூற பழனிச்சாமிக்கு தைரியம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் உதயநிதி திருவள்ளூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து பொன்னேரியில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் அவர், “பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் ஏராளமான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். பாஜக ஆட்சியில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதா? மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பிரதமர் நேரில் வந்து பார்க்கவில்லை. […]
Continue reading …
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். பிரேமலதா கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “நமது வெற்றி வேட்பாளராக ராமச்சந்திரனுக்கு நீங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்திலே வாய்ப்பு கொடுத்து அமோக வெற்றியை இந்த தேர்தலில் தர வேண்டும். திமுகவினரும் சரி அவங்க பினாமிகளும் சரி இங்கு இருக்கின்ற […]
Continue reading …
பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளரும் நகர்ப்புற துறை அமைச்சர் அமைச்சர் கே.என் நேரு அவரது மகன் அருண் நேருவுக்கு குளித்தலை சட்டமன்ற தொகுதி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அச்சமயத்தில் கரூர் அருகே உள்ள தோகைமலை கொசூரில் “எனக்கு மயக்கமாக இருக்கிறது. என்று ஒரு வரி மட்டும் பேசிவிட்டு கிளம்புறேன். “எனது துறையின் கீழ் வரும் குடிநீர் வாரிய பிரச்சினைகளை இப்பகுதியில் கண்டிப்பாக தீர்த்து வைப்பேன்” எனத் தெரிவித்துவிட்டு பிரச்சார வாகனத்திலிருந்து கீழே இறங்கி தனது காரில் ஏறி மருத்துவமனைக்குச் […]
Continue reading …
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் 18வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று அறிவித்தார். நாடு முழுவதும் அதன்படி தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது. பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கன. வேழவேந்தனுக்கு ரூ. […]
Continue reading …