தமிழக அரசு பருப்பு, மற்றும் பாமாயில் ஜூலை மாதத்தில் வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இது குறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 30-க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25-க்கும் மானிய விலையில் வழங்கி […]
Continue reading …24,177 மாணவர்களுக்கு பொறியியல் முதல் சுற்று கலந்தாய்வில் தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 10ம் தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 29ம் தேதி பொறியியல் படிப்புக்கு பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. இந்த கலந்தாய்வில் சுமார் 30000 மாணவர்கள் கலந்து கொண்டனர். விருப்பமான கல்லூரி, பாடப்பிரிவு தேர்வு செய்வதற்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. அந்த காலக்கெடு முடிவடைந்து தற்போது தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டை இன்று […]
Continue reading …6 மாதத்தில் ரூபாய் 6.5 கோடியில் கொள்ளிடம் ஆற்றின் இடையில் கட்டப்பட்ட தடுப்பணை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வடிவேலுவின் கிணற்றை காணவில்லை என்ற மீம்ஸை வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். பொதுமக்கள் கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை ஆறு மாதத்தில் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்சி அருகே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் மண்ணரிப்பால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புதிய […]
Continue reading …உச்ச நீதிமன்றம் இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வினாத்தாள் கசிவை தொடர்ந்து இளநிலை நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் பலரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு பரவலாகவும் திட்டமிட்ட ரீதியிலும் நடைபெறவில்லை […]
Continue reading …ஏலியன் குறித்த நம்பிக்கைகள் மற்றும் கதைகளை பற்றி அவ்வப்போது மக்களிடையே பேச்சுகள் இருந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் சேலத்தை சேர்ந்த நபர் ஒருபடி மேலே சென்று ஏலியனுக்கு கோவில் ஒன்றை கட்டியுள்ளார். விஞ்ஞானிகள் இப்பிரபஞ்சத்தில் பூமி போன்றே உயிரினங்கள் வாழக் கூடிய கிரகங்கள் வேறு பலவும் இருக்கலாம் என்பது நம்பிக்கை கொள்கின்றனர். அதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் சரித்திர காலம் தொட்டே வேறு கிரக ஜீவராசிகள் குறித்தும், அவை பூமிக்கு வருவது குறித்ததுமான […]
Continue reading …சார்பு ஆய்வாளர் ஒருவர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வனத்துறை மற்றும் காவல்துறையினர் செய்துள்ளனர். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு திருப்பூர் மாவட்ட சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் வருகை தந்திருந்தார். சாமி தரிசனம் செய்ய மலையேறி கொண்டிருந்தபோது பசுகிடை என்ற பகுதிக்கு வந்த போது […]
Continue reading …9ம் வகுப்பு மாணவர் நெல்லை மாவட்டம் விஜய நாராயணம் அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிவாளால் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்ட மாணவருக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் இடையே தண்ணீரை சிந்தியதில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்து சிறிய ரக அரிவாளை எடுத்துச் சென்று சக மாணவரை 9ம் […]
Continue reading …சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் […]
Continue reading …ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் மலைச்சாமி இலங்கை கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்தார். இவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார். இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், “இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மூக்கையா (வயது 54), முத்துமுனியாண்டி (வயது 57), மலைச்சாமி (வயது 59) மற்றும் இராமச்சந்திரன் (வயது 64) ஆகிய நால்வரும் இன்று அதிகாலை இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்குவந்த இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு […]
Continue reading …ஒன்பது கல்வெட்டுகள் திருப்பூர் அருகே கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 1100 ஆண்டுகள் பழமையானதாம். பல்லடத்தை அடுத்த கோயில் பாளையத்தில் பழமையான தலைக்கீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் குறித்து அழகுமலை ஊராட்சி தலைவர் தூய மணி வெள்ளைச்சாமி கோயில் தர்மகத்தா ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கொடுத்த தகவலின் பெயரில் திருப்பூர் வீரராஜசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த பொறியாளர் சுகுமார் பொன்னுச்சாமி ஆகியோர் கடந்த ஜூலை 5ம் தேதி ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் ஒரு வட்ட […]
Continue reading …