Home » Archives by category » தமிழகம் (Page 63)

திருச்சி பாராளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர் துரை வைகோ வேட்புமனு தாக்கல்.

Comments Off on திருச்சி பாராளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர் துரை வைகோ வேட்புமனு தாக்கல்.

திருச்சி பாராளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர் துரை வைகோ வேட்புமனு தாக்கல். திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான பிரதீப் குமாரிடம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் திமுக மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மதிவாணன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக. செயலாளர் கே.கே.செல்லப் பாண்டியன், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் உள்ளனர்.

Continue reading …

இத்தேர்தலோடு திமுக காற்றோடு கரைய வேண்டும். திருச்சி அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக பிரச்சாரக் கூட்டத்தில் பழனிச்சாமி பேச்சு.

Comments Off on இத்தேர்தலோடு திமுக காற்றோடு கரைய வேண்டும். திருச்சி அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக பிரச்சாரக் கூட்டத்தில் பழனிச்சாமி பேச்சு.

இத்தேர்தலோடு திமுக காற்றோடு கரைய வேண்டும். திருச்சி அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக பிரச்சாரக் கூட்டத்தில் பழனிச்சாமி பேச்சு. அதிமுக கூட்டணி சார்பில், நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுக பிரச்சாரப் பொதுக்கூட்டம் திருச்சி மாவட்டம் நவலூர்குட்டப்பட்டில் நேற்று நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி, அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளை சேர்ந்த 40 வேடபாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது. வரும் தேர்தலில் அதிமுக, திமுக, […]

Continue reading …

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரசாரம்.

Comments Off on பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரசாரம்.

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரசாரம். திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பு. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேரு ஆகியோர் தங்களது குலதெய்வ கோயில் புத்தனாம்பட்டியில் உள்ள ஸ்ரீ மாவடி கருப்பண்ண சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை செய்து தனது முதல் கட்ட பிரச்சார பயணத்தைதொடங்கினர். துறையூர் தொகுதி போட்டாத்தூரில் நகராட்சி […]

Continue reading …

விஜயபாஸ்கருக்கு நெருக்கடி..!

Comments Off on விஜயபாஸ்கருக்கு நெருக்கடி..!

அமலாக்கத்துறை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொத்து விவரங்களை தரக்கோரி புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. விராலிமலை எம்.எல்.ஏ ஆவாக இருக்கும் சி.விஜயபாஸ்கர், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஆர்.கே.நகர் தேர்தல் பண பட்டுவாடா புகார் தொடர்பாகவும், குட்கா முறைகேடு உள்ளிட்ட காரணங்களால் அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டனர். வருமானவரித்துறை சோதனையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், விஜயபாஸ்கர் […]

Continue reading …

மூட்டையில் வைத்து கடத்திய 29 கிலோ தங்கம்!

Comments Off on மூட்டையில் வைத்து கடத்திய 29 கிலோ தங்கம்!

ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்படுகிறது. தேர்தல் நேரத்தில் கோடிக்கணக்கான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஒரு மூட்டையில் கடத்தப்பட்ட 29 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நேரத்தில் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் ரொக்கப்பணம் மற்றும் தங்கம் போன்ற ஆபரணங்களை கொண்டு செல்லக்கூடாது என ஏற்கனவே தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக வாகன சோதனையில் […]

Continue reading …

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!

Comments Off on சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!

ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு அமலுக்கு வருகிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும், மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 100 முதல் […]

Continue reading …

பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்!

Comments Off on பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்!

பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து 50-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான பக்தர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பங்குனி உற்சவ திருவிழாவை முன்னிட்டு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் பாதயாத்திரை ஆகவும் பேருந்து மற்றும் வாகனங்கள் மற்றும் ரயிலில் பழனி முருகனை தரிசனம் செய்ய வருகை தருவார்கள். இன்று பழனி ரயில் நிலையத்தில் திடீரென்று 50க்கும் மேற்பட்ட ரயில்வே போலீஸ் மற்றும் பழனி நகர போலீசார் மற்றும் வெடிகுண்டு […]

Continue reading …

கோவையில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி; எஸ்.பி. வேலுமணி!

Comments Off on கோவையில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி; எஸ்.பி. வேலுமணி!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையை பொருத்தவரை அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டி என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. கோவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி பி. ராஜ்குமாரும், பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் அண்ணாமலையும் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் அக்கட்சியின் ஐ.டி விங் நிர்வாகி சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். கோவையில் இன்று நடைபெற்ற அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் […]

Continue reading …

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு; எடப்பாடி கண்டனம்!

Comments Off on சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு; எடப்பாடி கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும், மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 100 […]

Continue reading …

திமுக வேட்பாளர் குறித்து ஜவாஹிருல்லா அதிருப்தி!

Comments Off on திமுக வேட்பாளர் குறித்து ஜவாஹிருல்லா அதிருப்தி!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா திமுக அறிவித்துள்ள 21 வேட்பாளர்களில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இல்லை என தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு இதையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் “திமுக வேட்பாளர் தேர்வு தனக்கு மகிழ்ச்சி தரவில்லை. காங்கிரஸ் கட்சியாவது முஸ்லிம்களுக்கு உரிய வகையில் பிரதிநிதித்துவம் தரும் வகையில் வேட்பாளர் […]

Continue reading …