
தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் அந்த பதவியை ராஜினாமா செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழிசை சௌந்தர்ராஜன் தற்போது தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். சமீபத்தில் மக்களவை தேர்தலுக்கான பணிகளை பாஜக தொடங்கியது முதலே தமிழிசை தான் எம்.பியாக போட்டியிட விரும்புவது குறித்து தொடர்ந்து பாஜக மேலிடத்திடம் பேசி வந்தார். அவர் புதுச்சேரியில் போட்டியிட விருப்பப்பட்ட நிலையில் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி […]
Continue reading …
ஊதிய திருத்தம் அறிவித்த பிரதமர் நிதியமைச்சருக்கு நன்றி வங்கி ஊழியர் தேசிய கூட்டமைப்பு பொதுசெயலாளர் பேட்டி. வங்கி ஊழியர்கள் தேசிய கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. வங்கி ஊழியர் தேசிய கூட்டமைப்பு பொது செயலாளர் பண்ட்லீஸ் தலைமையிலும், சீனியர் துணை தலைவர் கிருபாகரன் முன்னிலையில் பொதுக்குழு கூட்டம்நடந்தது. இதில் மும்பையில் கையெழுத்தான வரலாற்று சிறப்பு மிக்கி இரு தரப்பு ஊதிய ஒப்பந்தத்தின் சிறப்புகள், வங்கி வாடிக்கையாளர் நலம், வங்கியின் வளர்ச்சி, எட்டு லட்சம் ஊழியர்கள் […]
Continue reading …
திருச்சி தென்னூரில் புதிய மாணவர்கள் சேர்க்கை தொடக்க விழா. வட்டார கல்வி அதிகாரிகள் பங்கேற்பு. திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியின் 91-வது பள்ளி ஆண்டு விழா, பணி நிறைவு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா, புதிய மாணவர்கள் சேர்க்கை தொடக்க விழா என முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி செயலர் ரகுநாதன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் ஜோசப் அந்தோணி,அர்ஜுன் ஆகியோர் முன்னிலை […]
Continue reading …
நீர்த்தேக்க தொட்டியின்றி குடிநீர் வினியோகம் செய்யும் கருவி. திருச்சி என்.ஐ.டி மாணவர்கள் கண்டுபிடிப்பு. திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து நீர்த்தேக்க தொட்டியின்றி குடிநீர் வினியோகிக்கும் (டேங்க்லெஸ் வாட்டர் கண்ட்ரோலர்) கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவி பயன்பாட்டுக்கு வந்தால் கிராமப்புற பகுதிகளுக்கு குடிநீரை வினியோகம் செய்ய நீர்த்தேக்க தொட்டி தேவைப்படாது. தற்போது பல கிராமங்களில் குடிநீர் வினியோகம் செய்ய முறையான மற்றும் செலவு குறைந்த நீர் வழங்கல் முறை இல்லை. போர்வெல், […]
Continue reading …
கம்பம் வாரச் சந்தைக் கடைகள் ஏலம்: நகர்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் தீா்மானம். தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி வாரச் சந்தைக் கடைகள் ஏலம் விடப்பட்டன. இதுதொடா்பாக நகா்மன்றக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒப்புதல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கம்பம் நகராட்சியில் வாரச்சந்தை, தினசரி சந்தை, நுழைவு வாயிலில் உள்ள கடைகள் உள்ளிட்டவைகளுக்கு கூடுதல் வைப்புத் தொகையை நிா்ணயித்து ஏலம் விடப்பட்டன. சுமாா் 14 முறை ஏலம் விடப்பட்டது. ஒரு சில கடைகள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், வாரச்சந்தை, தினசரி […]
Continue reading …
*காஜாமலை விஜியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.* *மேயர் தன்னுடைய தொகுதிக்கு நிதி ஒதுக்கவில்லை அதற்காக தீ குளிக்கிறேன் என்று சொல்லும் அளவிற்கு காஜாமலை விஜி ஒன்றும் நல்லவர் இல்லை – பாஜக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா பேட்டி* பாரதிய ஜனதா கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களின் குறைதீர்க்கும் முகாம் ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா தலைமையில் திருச்சி […]
Continue reading …
திருச்சியில் பள்ளி மாணவி உள்பட 4 பேர் மாயம். போலீசார் விசாரணை. திருச்சி உறையூர் கலையான் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் துர்கா தேவி(வயது 15) இவர் தில்லை நகரில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து சென்ற துர்கா தேவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். […]
Continue reading …
தி.மு.க. கூட்டணிக்கு பெண்கள் ஆதரவு தர வேண்டும்: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். திருச்சி விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு. அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் ஐம்பெரும் விழா திருச்சியில் நிறுவன தலைவர் வக்கீல் பொன்.முருகேசன் தலைமையில் நடந்தது. மக்கள் தேசம் கட்சியின் தலைவர் ஆசைத்தம்பி, தமிழ் தேசிய முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் ஸ்ரீதர் வரவேற்றார். விழாவை அமைச்சர் அன்பில் […]
Continue reading …
சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் திருஏடு வாசிப்பு திருவிழா தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் ஆண்டுதோறும் தமிழ் ஆண்டு பங்குனி மாதம் முதல் வெள்ளிக்கிழமை திருவிழா தொடங்கி 17 நாட்கள் திருவிழா நடைபெறும் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. விழாவுக்கு பால. பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கி திருஏடு வாசிப்பினை தொடங்கி வைத்தார். பேராசிரியர் ஆர். தர்ம ரஜினி முன்னிலை வகித்தார் திருஏட்டினை ஜெயராஜா பழம், தங்கேஸ்வரி மற்றும் சரஸ்வதி […]
Continue reading …
தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி நுழைய முடியாது என்றும் வடநாட்டில் மட்டுமே ஜெயிக்க முடியும் என்றும் கூறப்பட்டு வந்தது. சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பில் தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா வலுவாக கால் ஊன்ற வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி நேற்று வெளியான கருத்துக்கணிப்பில் கர்நாடக மாநிலத்தில் அபார வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 28 தொகுதிகள் இருக்கும் நிலையில் அதில் பாரதிய ஜனதா கட்சி 25 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் ஆளும் காங்கிரஸ் […]
Continue reading …