
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து, திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகள் முன் நின்று புகைப்படங்கள் எடுத்து செல்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பதாகைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி வைத்தார்.
Continue reading …
சங்கீத மகத்துவம் நிகழ்ச்சிஅரசு இசைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு. ஸ்ரீரங்கம் ராகவேந்திரா மடத்தில் பாரதிய வித்யா பவன் திருச்சி கிளை மற்றும் இன்போசிஸ் பவுண்டேஷன் சார்பில் சங்கீத மகத்துவ நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் 4-ம் நாள் நிகழ்ச்சியாக.கல்லூரி இசைத்துறை மாணவர்கள் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் அரசு இசைப்பள்ளி ஆசிரியர்கள் ராமபிரசாத் வயலின், சுவாமிநாதன் மிருதங்கம் வாசித்தனர். இதில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Continue reading …
நடிகர் ஆரி அர்ஜுனன், தனது அம்மாவின் நினைவை போற்றும் வகையில் மறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலமாக, எளிய வர்க்கத்தின் பின்னணியிலிருந்து பணியாற்றும் பெண்கள் 10 பேரை சந்தித்து வாழ்த்துக்கூறியதுடன், அவர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்டாக தங்க நாணயம் பரிசளித்தார். நடிகர் ஆரி அர்ஜுனன் இயற்கை சார்ந்த விவசாயம், இயற்கை உணவுகள், சமூகத்திற்கான உதவிகள் என தொடர்ந்து, சமூக அக்கறையுடன் பணியாற்றி வருகிறார். தன் அன்னையின் நினைவாக மகளிரை கொண்டாடும் வகையில் அவர்களுக்கு பரிசளித்திருப்பதை, மக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். […]
Continue reading …
தேசிய பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புலியகுளம் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தொடங்கி வைத்தார். செய்தியாளர்களிடம் அவர், “ஒரு அரசாங்க நிகழ்ச்சிக்கு மரியாதை கொடுத்து பொதுமக்களின் நிகழ்ச்சி என்று நாங்கள் செல்லும் பொழுது அவர் இன்று பொள்ளாச்சியில் அரசு மேடையை அரசியல் மேடையாக மாற்றி அநாகரீகமாக பேசி இருக்கிறார். அரசாங்கத்தின் விழாவில் பாரத பிரதமரை பற்றி குறை கூறியது பாரதிய ஜனதா […]
Continue reading …
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோடை காலம் தொடங்க உள்ளதையடுத்து தமிழக கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச நீர் மோர் கொடுக்கும் திட்டம் நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். அமைச்சர் சேகர்பாபு “நாளை முதல் தமிழ்நாட்டிலுள்ள 48 முதல் நிலை கோவில்களில் பக்தர்களுக்கு இலவசமாக நீர் மோர் வழங்கப்படும். இந்த நீர்மோர் வழங்கும் திட்டத்தை சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் நாளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்கவுள்ளார். கோவிலில் உள்ள கருங்கல் பதிக்கப்பட்ட தரை உள்ள இடங்களில் தரை […]
Continue reading …
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகிய இருவருக்கும் எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக பாஜக அண்ணாமலை ஆகியோர் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் விவகாரம் குறித்து முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரை இணைத்து சில கருத்துக்களை பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியது. போதைப்பொருள் கடத்தல் […]
Continue reading …
தமிழ்நாடு வணிகர் சங்ககளின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா வணிகர்கள் மீது ரவுடிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் அதற்கான சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்- என்று கூறியுள்ளார். வணிகர் சங்க பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம் சிவகங்கை தனியார் மண்டபத்தில் மாவட்டத் தலைவர் பால குருசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா கலந்து கொண்டு செய்தியாளர்களிடம், “ரவுடிகள் வணிகர்களை மிரட்டி தாக்குதல் நடத்துவது அதிகரித்து […]
Continue reading …
சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் மற்றும் மதிமுகவிற்கான தொகுதிகள், திமுக வேட்பாளர்கள் பட்டியல் போன்றவற்றை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குமக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவை உள்ளன. திமுக, தன்னுடைய கூட்டணி கட்சிக்கு 19 தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு கூட்டணி […]
Continue reading …
ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை. சென்னை பல்லாவரத்தில் உள்ள எஸ்.டி. கொரியர் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை. ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் எஸ்.டி. கொரியர் நிறுவனத்தில் சோதனை. சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள். தியாகராய நகர், திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர் பகுதிகளிலும் அமலாக்கத்துறை சோதனை
Continue reading …
திருச்சி நகர வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல். புதிய நிர்வாகிகள் தேர்வு. திருச்சி நகர வழக்கறிஞர் சங்கத்தின் 2024 – 2025 நிர்வாகிகள் தேர்தல் சாஸ்திரி ரோட்டில் உள்ள ரெங்கா ஹாலில் நடைபெற்றது. தேர்தலை திருச்சி தாய் சங்கத்தின் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன் , செயலாளர் கே. கண்ணன் ஆகியோர் நடத்தினர். முன்னாள் நகர வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் ஏ.புஷ்பராஜ் கலந்து கொண்டு பேசினார். இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.தலைவராக என்.அன்பழகன், செயலாளராக ஜெ.தாஸ் பிரகாஷ்,துணைத் […]
Continue reading …