
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வியாகாம் 18 மற்றும் ஸ்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுடன் உலக பிரபலமான வால்ட் டிஸ்னி நிறுவனம் தனது இந்திய ஒளிபரப்பு மற்றும் ஓடிடி உள்ளிட்ட சேவைகளில் ஒன்றிணைகிறது. முகேஷ் அம்பானியின் நிறுவனங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் பல வகையான தொழில்களை மேற்கொண்டு வருகிறது. நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான Viacom 18 இந்தியா முழுவதிற்கும் செய்தி சேனல்கள், எண்டெர்டியின்மெண்ட், ஸ்போர்ட்ஸ் சேனல்களை வழங்கி […]
Continue reading …
பரந்தூர் பகுதி விவசாய பெருமக்கள் ஓராண்டுக்கும் மேலாக பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம் எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டதையடுத்து அது குறித்து அரசு ஆணையும் வெளியிட்டுள்ளது. இது திமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது தமிழக அரசு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்கள் மற்றும் அதன் விளைநிலங்களையும் சேர்த்து சுமார் 4,563 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவெடுத்திருக்கிறது. சமீபத்தில் […]
Continue reading …
நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கியதோடு மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தில் போட்டியிடப் போகும் தொகுதி குறித்தும் அறிவித்துள்ளார். விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தேசிய, மாநில கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. பலரும் புதிய கட்சிகளும் தொடங்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக நாம் தமிழர் கட்சியில் வேட்பாளராக அரசியலில் களம் கண்ட நடிகர் மன்சூர் அலிகான் தற்போது தனியாக இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கியுள்ளதோடு, நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தார். தற்போது […]
Continue reading …
நேற்று அமைச்சர் ஐ பெரியசாமி குறித்த வழக்கின் தீர்ப்பு அதிரடியாக வெளியானது. அடுத்த கட்டமாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து எடுத்துக் கொண்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது அமைச்சர் தங்கம் தென்னரசு மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே தனது வாதத்தை முன்வைத்துவிட்டார். இன்று இவ்வழக்கில் அரசு தரப்பு வாதம் தொடர உள்ளதாகவும் […]
Continue reading …
ஊடகங்கள் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் தீவிரமாக இருப்பது குறித்து கருத்துக்கணிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுக தான் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தை பிடிப்பது யார் என்பதில் தான் தற்போது பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த கால ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் தான் மாறி மாறி முதல் இரண்டு இடங்களை பிடித்து வந்தது. தற்போது இரண்டாவது இடத்தை அதிமுக பறி கொடுக்கும் என்ற […]
Continue reading …
சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. செந்தில் பாலாஜி மீதான வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது ஜாமின் மனு மீதான விசாரணை கடந்த 21-ம் தேதி நீதிபதி என்.ஆனந்த் […]
Continue reading …
பிரதமர் மோடி திமுகவை இனி தமிழகத்தில் பார்க்க முடியாது என நெல்லையில் ஆவேசமாக பேசியுள்ளார். நேற்று பல்லடம் பகுதியில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த மோடி பேசினார். அதன் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி இன்று தூத்துக்குடியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த பிரமாண்டமான கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய போது “இனி திமுகவை […]
Continue reading …
பிரதமர் மோடி திமுகவை முற்றிலும் அகற்றுவோம் என கூறினார். அதற்கு திமுக எம்பி கனிமொழி திமுக அழியும் என சொன்ன பலர் காணாமல் போய்விட்டார்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார். பிரதமர் மோடி, தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசிய திமுகவை இனி தேடினாலும் கிடைக்காது என்றும் திமுகவை முற்றிலும் அகற்றுவோம் என்றும் கூறியிருந்தார். இக்கூட்டத்தில் தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழியும் பங்கேற்றிருந்தார். தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த கனிமொழி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், “திமுக அழியும் […]
Continue reading …
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பிப்ரவரி 24ம் தேதி முதல் தேதி முதல் காலியானதாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் விளவங்கோடு சட்டசபை தொகுதியில், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், போட்டியிட்டு விஜயதரணி வெற்றி பெற்றார். கடந்த வாரம் அவர், பாஜகவில் இணைந்தோடு தனது எம்.எல்.ஏ., பதவியையும் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை, சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக, சட்டசபை செயலர் சீனிவாசன், தமிழக தலைமை […]
Continue reading …
காங்கிரஸ் கட்சியினர் மீனவர்கள் கைது விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து பழவேற்காடு ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நிளி Go Back Modi என முழக்கமிட்டனர். ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவதை கண்டித்தும், தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் இரண்டு நாள் போராட்டம் அறிவித்திருந்தனர். அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு […]
Continue reading …