இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவரின் பெயர் மருத்துவ பணியில் ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் விதமாக அபுதாபியில் உள்ள ஒரு சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது. கேரளாவில் பிறந்த ஜார்ஜ் மேத்யூ, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். இவருக்கு திருமணமாகி வல்சா என்ற மனைவியும், மர்யம் என்ற மகளும் உள்ளனர். கடந்த 1967-ம் ஆண்டு டாக்டர் மேத்யூ குடும்பத்துடன் அமீரகத்தில் உள்ள அல் அய்ன் பகுதியில் குடியேறினார். அதன்பின், அங்குள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிய முதல் இந்திய டாக்டர் […]
கணவன் தனது மனைவிடம் துர்நாற்றம் வீசுகிறது குளித்து விட்டு வா என்று கூறியுள்ளார். முடியாது எனக் கூறிய மனைவியை கணவன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். இவ்வழக்கில் கணவருக்கு 226 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் ஸ்டீபன் தனது மனைவி வெரோனிகா வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்தபோது துர்நாற்றமாக இருந்ததால் குளிக்கும் படி கூறியுள்ளார். ஆனால் அவரது மனைவி மறுத்துவிட்டார். அதனால் ஆத்திரமடைந்த ஸ்டீவன் துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டுக் கொன்று […]
Continue reading …கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய வேட்பாளர் ஜோ பைடனுக்கு பதில் போட்டியிட திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஜோ பைடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இருவரும் சமீபத்தில் நேருக்கு நேர் விவாதம் செய்த நிலையில் அதில் ஜோபைடன் வாதிட திணறியதாகவும் கூறப்பட்டது. ஜோ பைடனுக்கு வாதிடம் திறன் மோசமாக இருப்பதால் அவர் வெற்றி பெறுவது கடினம் என்றும் எனவே […]
Continue reading …நாக் அஸ்வின் இயக்கும் கல்கி திரைப்படம் கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. படத்தில் கமல்ஹாசன் “வில்லன்” வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. படத்தின் முதல் பாகத்துக்கான ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. கமல்ஹாசன் இந்த படத்தின் முதல் பாகத்திற்கான தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துள்ளார். ஜூன் 27ம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக […]
Continue reading …உலகத்தில் சமூக வலைதளம் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இந்த சமூக வலைதளங்களால் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சிலர் பாதிக்கப்படுகின்றனர். அவ்வகையில் 15 வயதிற்கும் குறைவானவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை என்ற மசோதாவை அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் அமல்படுத்தி உள்ளது. அந்த மாகாணத்தில் உள்ள 15 வயதுக்கு குறைவான சிறுவர்கள் இனி சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாது என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 15 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த […]
Continue reading …இன்டுயடிவ் மெஷின்ஸ் நிறுவனம் அமெரிக்கா கடந்த அரை நூற்றாண்டு காலமாக நிலாவுக்கு செல்லாத குறையை போக்கியுள்ளது. அமெரிக்க நிறுவனம் ஒன்று நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் வணிக நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது. ஹூஸ்டனை தளமாகக் கொண்ட இன்டுயடிவ் மெஷின்ஸ் நிறுவனம் அதன் ஒடிசியஸ் ரோபோவை நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறக்கியுள்ளது. விண்கலம் தற்காலிகமாக செயலிழந்ததை கண்டுபிடிக்க சில நிமிடங்கள் ஆனதாகவும், ஆனால், சிறிது நேரத்தில், அது சரி செய்யப்பட்டு, சமிக்ஞைகள் கொடுக்கத் தொடங்கியதாகவும் அந்நிறுவனம் […]
Continue reading …நைட்ரஜன் வாயுவை கொலை குற்றவாளிக்கு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவத்திற்காக அமெரிக்காவிற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவை சேர்ந்த சார்லஸ் சென்னட் என்பவர், தன் மனைவி எலிசபெத் பெயரில் உள்ள காப்பீட்டு தொகையை பெற, அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக கென்னத் யூஜின் ஸ்மித், ஜான் பார்க்கர் ஆகியோரை ஏற்பாடு செய்துள்ளார். இவர்கள் இருவரும் திட்டமிட்டபடியே எலிசபெத்தை அடித்து கொலை செய்தனர். மனைவி கொலை செய்யப்பட்ட சில மாதங்களிலெயே சார்லச் தற்கொலை செய்து […]
Continue reading …அமெரிக்கா ஹவுதி அமைப்பை மீண்டும் தீவிரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் சர்வதேச கப்பல்கள் சென்று கொண்டிருக்கும்போது, அந்த கப்பல்களுக்கு அச்சம் தரும் வகையில் இருப்பதாக கூறி, சமீபத்தில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா பிரிட்டன் படைகள் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஏமன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கும் இடங்களிலும் போர் விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஹவுதி அமைப்பின் முக்கிய நபர் […]
Continue reading …“ராக்கி” மற்றும் “சாணி காகிதம்” ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்து தனது மூன்றாவது படமான “கேப்டன் மில்லர்” படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இப்போது படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி ரிலீசாகவுள்ளது. நேற்று இத்திரைப்படத்தின் […]
Continue reading …14 வயது சிறுவன் ஓட்ட பந்தயத்தில் திடீரென மாரடைப்பால் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் சமீப காலமாக இளம் வயதில் மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் இது மேலும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற மாரடைப்புகளுக்கு சரியான உணவு பழக்கம் இல்லாமை, அதீத மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் 5 கி.மீ ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. […]
Continue reading …