ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி சோனியா காந்தி ஆகியோர் அமேதி தொகுதியில் போட்டியிட்டனர் என்பதால் இந்த தொகுதியில் காங்கிரஸ் பலமாக இருந்தது. கடந்த 2002ம் ஆண்டு முதல் ராகுல் காந்தி இந்த தொகுதியில் தான் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக இருந்தார். ஆனால் 2019ம் ஆண்டு ஸ்மிருதி இரானியிடம் அவர் தோல்வியடைந்தார். […]