16 வயது சிறுமி பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர் உள்ளிட்டோரால் கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11ம் தேதி பஞ்சாப் மாநிலம் மொராதாபாத் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி மொரதாபாத்தில் இருந்து உத்தரகாண்ட்க்கு பேருந்தில் சென்றுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் டெராடூனில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அதிகாலை 2.30 மணிக்கு சிறுமி வந்தடைந்துள்ளார். சிறுமி பேருந்தில் தனியாக இருப்பதை கவனித்த அந்த அரசு பேருந்தின் டிரைவரும், நடத்துனரும் மேலும் சில டிரைவர்களும் சேர்ந்து […]
இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுங்கள் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “புதுக்கோட்டை மாவட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 13 பேரை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்திருப்பதோடு, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்திருக்கும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. கடந்த இரு வாரங்களில் மட்டும் […]
Continue reading …கள்ளச்சாராய மரண விவகார வழக்கில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம், முருகேசன் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் சின்னதுரையிடம் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் கண்ணுக்குட்டி, சின்னதுரை, கதிரவன், கண்ணன் உள்ளிட்ட ட 11 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். 11 பேரையும் […]
Continue reading …அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ஸ்வாதி மாலிவால் அளித்த புகாரின் பேரில் டில்லி போலீசார் கைது செய்தனர். கடந்த ஏப்ரல் மாதம் மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டில்லி மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து வீடு திரும்பிய முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்திப்பதற்காக அக்கட்சியின் எம்பியான […]
Continue reading …இளைஞர் ஒருவர் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக குளத்தில் தீ வைத்து அதில் குதித்து சாகசம் செய்த வீடியோ வைரலானது. அவரையும், அவரது நண்பர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் இளைஞர்களிடையே தலைவிரித்தாடுகிறது. தங்கள் ரீல்ஸை அதிக லைக்ஸ் பெற வைப்பதற்காகவும், ஃபாலோவர்களை அதிகரிப்பதற்காகவும் ஆபத்தான பல சாகசங்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியான சம்பவம் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் புத்தந்தருவை குளத்தில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்துள்ளார்கள் இளைஞர்கள் சிலர். […]
Continue reading …தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டனர். அவர்களை 22 பேரை மார்ச் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்திரவிட்டதை தொடர்ந்து, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மீனவர்கள் அடைக்கப்பட்டனர். இலங்கை கடற்படையினர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்வதோடு படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றன. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவிக்க […]
Continue reading …நடிகையும், பாஜக துணைத்தலைவியுமான ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார். நடிகையும், பாஜக துணைத் தலைவியுமான ஜெயலட்சுமியை சினேகன் அறக்கட்டளை தொடர்பாக பாடலாசிரியர் சினேகன் அளித்த புகாரில் போலீசார் கைது செய்துள்ளனர். அறக்கட்டளையின் உரிமை தொடர்பாக சினேகனுக்கும், ஜெயலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்தது. நடிகை ஜெயலட்சுமி மீது பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் போலீசில் புகாரளித்திருந்தார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் நடிகை ஜெயலட்சுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியாக சினேகன் செயல்பட்டு வருகிறார்.
Continue reading …இன்று இணையத்தில் பிரபலமான அஸ்வினியை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். அஸ்வினி சென்னையடுத்துள்ள மகாகபலிபுரத்தில் உள்ள பூஞ்சேரியில் வசித்து வருபவர். இவர் தலசயன பெருமாள் கோயிலில் தங்கள் சமூகத்தினருடன் அன்னதானம் சாப்பிட சென்றபோது கோயில் நிர்வாகிகளால் அவமதிக்கப்பட்டதாக வீடியோவில் புகாரளித்திருந்தார். இதையடுத்து அமைச்சர் சேகர் பாபு அப்பெண்ணுடனுடனும் அவர்கள் சமூகத்தைச் சேர்ந்தோருடன் அமர்ந்து சாப்பிட்டார். கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போது, அஸ்வினியின் வீட்டிற்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நலத்திட்டம் வழங்கி அவர் வீட்டில் சாப்பிட்டார். அதன்பின், இவர் […]
Continue reading …அதிமுக நிர்வாகி ஒருவர் முதலமைச்சரை பற்றி அவதூறான வீடியோ பரப்பிய குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பல்வேறு மீம்ஸ், வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிடுகின்றனர். சிலர் அவதூறு வீடியோக்கள் பதிவிட்டதாகக் கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு பதிவிட்டதற்காக நள்ளிரவில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஈரோடு […]
Continue reading …வந்தே பாரத் இந்திய நகரங்களுக்கு இடையே செல்லும் அதிவிரைவு ரயில்கள் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் சென்னை ஐசிஎஃபி-ல் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி இந்த வந்தே பாரத் விரைவு ரயில் (டில்லியிலிருந்து வாரணாசி வரையிலான) சோதனை ஓட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். இந்த வந்தே பாரத் ரயில்கள் மீது பயணிகள் கல்வீசித் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகின்றன. வந்தே பாரத் ரயில்கள் மீது கற்கள் வீசித் […]
Continue reading …