சென்னை, ஏப்ரல் 24 கோவிட்-19 முடக்கநிலை சூழ்நிலையில் ஏற்றுமதி, இறக்குமதி (எக்ஸிம்) சரக்குகளைக் கையாள வசதியாக சென்னை சுங்கத் துறை எல்லா நாட்களும், 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சென்னை சுங்கத் துறையின் துறைமுகம், விமான நிலையம், விமான சரக்குப் பிரிவு, வெளிநாட்டு தபால் அலுவலகம், கூரியர் முனையம் மற்றும் யூ.பி. ஆகிய இடங்களில் வாரத்தில் அனைத்து வேலை நாட்களிலும், தினமும் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறைவான அலுவலர்களைக் கொண்டு சுங்கத் துறை அலுவலகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. முன்னுரிமை அடிப்படையில் அனைத்து அனுமதிகளும் அளிக்கப்படுகின்றன. A. சென்னை […]