அண்ணாமலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தைகள் பேசியதை கண்டித்து அதிமுகவினர் அவருடைய உருவ படத்தை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி சாமி தவழ்ந்து சென்று பதவியை வாங்கினார்” என்று கூறினார். அவருடைய உருவ பொம்மை பொம்மையை கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே அதிமுகவினர் எரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி குறித்து அண்ணாமலை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வருவதாக அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அதிமுக […]
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டில்லிக்கு காவடி எடுத்து தப்பிவிடலாம் என்று நினைத்தால் புத்திசாலிகளான தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று திமுக அரசுக்கு எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர், “பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவும் வர வேண்டும் தோழா என்று நம்மை எல்லாம் ஆளாக்கிய மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் கூறியிருக்கிறார். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின், பணிவு என்றால் கிராம் என்ன விலை என்று […]
Continue reading …அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மீனவர்கள் 32-பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில், “வங்கக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள், 4 நாட்டுப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து அராஜக முறையில் சிறைபிடிக்கப்பட்டு வருகிறார்கள். மத்திய பாஜக அரசு இதற்கான நிரந்தரத் தீர்வினை எட்ட போதிய முயற்சிகள் எடுக்காமல் […]
Continue reading …அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போதைப்பொருள் விற்பனையை தடுக்கத் தவறிய விடியா திமுக முதலமைச்சருக்கு கடும் கண்டனம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “சென்னை, நங்கநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒரு மாணவனின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த ஆசிரியர் அம்மாணவனது புத்தகப் பையை சோதனையிட்டபோது, அப்பையில் கஞ்சா பொட்டலங்ககள் இருப்பதை கண்டறிந்து காவல்துறைக்கு புகார் செய்ததாகவும், மாணவன் அந்த கஞ்சா பொட்டலங்களை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பழவந்தாங்கல் ரயில்வே நிலையத்தில் வாங்கியதாகவும் இன்றைய நாளிதழ்களில் வந்த செய்திகள் […]
Continue reading …அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி, “கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்து குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை, சட்டசபையில் மக்கள் பிரச்னை பற்றி பேச அனுமதி மறுக்கப்படுகிறது. நெஞ்சை பதற வைக்கும் மரணம் குறித்து பேசாவிட்டால் எம்எல்ஏ-ஆக தேர்வு செய்யப்பட்டதற்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும். சட்டசபையில் […]
Continue reading …அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியிலும் கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதி குறைவாக மத்திய அரசு ஒதுக்கியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு […]
Continue reading …சசிகலா மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி போட்ட தப்புக்கணக்கு அவருக்கு புரியும் என்று பேட்டியளித்துள்ளார். இன்று காலை 7 மணி முதல் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாக்களித்து வருகிறார்கள். சசிகலா தனது வாக்கை பதிவு செய்த பின் செய்தியாளர்களிடம், “மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு எங்களில் ஒருவர் திருத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் போட்ட தப்புக்கணக்கு அவர்களுக்கே புரியும்” எடப்பாடி பழனிச்சாமியை […]
Continue reading …தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகிய இருவருக்கும் எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக பாஜக அண்ணாமலை ஆகியோர் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் விவகாரம் குறித்து முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரை இணைத்து சில கருத்துக்களை பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியது. போதைப்பொருள் கடத்தல் […]
Continue reading …எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக், முதலமைச்சர் குடும்பத்தோடு நெருக்கமாக இருந்துள்ளார். ஜாபர் சாதிக் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும். போதை பொருள் தொடர்புடைய 2138 வழக்குகளில் 148 பேர் தான் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்ற வழக்குகளின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு […]
Continue reading …கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முயற்சி செய்து வருகிறது. இதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தஞ்சாவூரில் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, தமிழகம் போதை பொருட்கள் நிறைந்த மாநிலமாக மாற தி.மு.க அரசே காரணம் என குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து அவர், “தமிழகத்தில் தான் அதிக அளவில் கஞ்சா விற்கிறது. தி.மு.கவை சேர்ந்த மாநில பொறுப்பாளர் ரூ. 2,000 கோடி […]
Continue reading …