தமிழ்நாடு அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளருமான க. மீனாட்சி சுந்தரம் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியைத் தொடங்கிய மீனாட்சி சுந்தரம், இளம் வயதிலேயே ஆசிரியர் சங்க நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆசிரியர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். பின்னர் ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகவும் பணியாற்றினார். அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு பல்வேறு உரிமைகளை பெற்றுக் […]