Home » Posts tagged with » Netrikkan (Page 14)

தீவாக மாறிய ஒகேனக்கல்!

Comments Off on தீவாக மாறிய ஒகேனக்கல்!

காவிரியில் நீர்வரத்து 5 ஆண்டுகளுக்கு பின், 2 லட்சம் கனஅடியை தாண்டியுள்ளது. இதனால் ஒகேனக்கல் பகுதியில் தீவாக மாறியுள்ளது. இதனால் ஒகேனக்கல் பகுதியில் எங்கு பார்த்தாலும் தண்ணீராக காட்சியளிப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர்வரத்து வந்தது. 5 ஆண்டுகள் கழித்து தற்போது 2 லட்சம் கன அடியை தாண்டியுள்ளது. திரும்பும் திசை எல்லாம் கடல் போல் ஒகேனக்கல் காட்சி அளிப்பதாகவும், கரையோர வீடுகளை காவிரி நீர் சூழ்ந்துள்ளதாகவும் செய்திகள் […]

Continue reading …

சூர்யா, ஜோதிகா, கார்த்தி வழங்கிய நிவாரணம்?

Comments Off on சூர்யா, ஜோதிகா, கார்த்தி வழங்கிய நிவாரணம்?

நடிகர் சூர்யா வயநாடு நிலச்சரிவால் பாதிப்படைந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார். தற்போது சூர்யா, ஜோதிகா, கார்த்தி தரப்பில் ஒரு மிகப்பெரிய தொகையை நிவாரண நிதியாக வழங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு பகுதியில் உள்ள 3 கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் மண்ணில் உயிரோடு புதைந்திருப்பதாகவும் இதுவரை கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் விதமாக நடிகர்கள் […]

Continue reading …

வயநாடு நிலச்சரிவு குறித்து நடிகர் சூரி வருத்தம்!

Comments Off on வயநாடு நிலச்சரிவு குறித்து நடிகர் சூரி வருத்தம்!

நடிகர் சூரி தனது எக்ஸ் தளத்தில் வயநாடு பகுதியில் நிலச்சரிவு செய்திகள் கேட்க கேட்க மனசு பதறுது என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். வயநாடு பகுதியில் உள்ள 3 கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. கேரளாவில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. சுமார் 200க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். இன்னும் நூற்றுக்கணக்கானோர் காணவில்லை, அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த துயர சம்பவத்திற்கு திரை உலகை சேர்ந்த […]

Continue reading …

துருக்கி வீரரின் கலக்கல் குட்ஷாட்!

Comments Off on துருக்கி வீரரின் கலக்கல் குட்ஷாட்!

பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் 33-வது ஒலிம்பிக் திருவிழா நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நேற்று ஏழு மாத கர்ப்பிணி பெண் வாள்வீச்சு போட்டியில் விளையாடி உலகின் கவனத்தை ஈர்த்தார். துருக்கி நாட்டு வீரர் டிகேக் இப்போது துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதற்குக் காரணம் அவர் துப்பாக்கிச் சுடுதலின் போது எவ்தமான உதவி உபகரணங்களையும் பயன்படுத்தவில்லை. பொதுவாக […]

Continue reading …

இந்தியா பெற்றது 3வது தங்கம்!

Comments Off on இந்தியா பெற்றது 3வது தங்கம்!

இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் 33-வது ஒலிம்பிக் திருவிழா நடைபெற்று வருகிறது. 26-ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிச் சுற்றில், இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். அவர் 451.4 புள்ளிகள் பெற்று 3-ம் இடம் […]

Continue reading …

நடிகர் சல்மான்கானை கொலை செய்ய கூலிப்படையா?

Comments Off on நடிகர் சல்மான்கானை கொலை செய்ய கூலிப்படையா?

ரூ.20 லட்சம் நடிகர் சல்மான்கானை கொலை செய்ய கூலிப்படைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. சல்மான்கானுக்கு லாரன்ஸ் என்ற மாபியா தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தன்னுடைய அடியாட்களை அனுப்பி கொலை முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சல்மான் கானை கொலை செய்ய லாரன்ஸ் குழு தீட்டிய சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஆறு பேர் சதி திட்டத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. சல்மான் கான் நடமாட்டத்தை கண்காணிப்பது மற்றும் ரகசிய தகவல் தருவது ஆகியவற்றில் லாரன்ஸ் என்ற மாபியாவின் […]

Continue reading …

தனுஷூடன் இணையும் சுனைனா!

Comments Off on தனுஷூடன் இணையும் சுனைனா!

நடிகை சுனைனா தனது சமூக வலைதள பக்கத்தில் தனுஷின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுதை அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்த “ராயன்” திரைப்படம் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றுள்ளது. தற்போது அவர் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தனுஷ் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் “குபேரா” படத்தில் நடித்து […]

Continue reading …

வெளியுறவு அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

Comments Off on வெளியுறவு அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

தமிழக மீனவர் ஒருவர் ராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற படகு மீது இலங்கை கடற்படையின் கப்பல் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது, “இலங்கை கடற்படையால் ஆழ்கடலில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். நேற்று 359 மீன்பிடிக் கப்பல்கள் அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்குள் சென்றன. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் […]

Continue reading …

குமரி அனந்தனுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள விருது!

Comments Off on குமரி அனந்தனுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள விருது!

தமிழக அரசு தகைசால் தமிழர் விருதை குமரி அனந்தனுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. கடந்த 2021-ல் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் ஆணையிட்டிருந்தார். இந்த விருதினை கடந்த 3 ஆண்டுகளில் சங்கரைய்யா, ஆர். நல்லகண்ணு மற்றும் கி.வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதுக்கான நடப்பாண்டு விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட […]

Continue reading …

வேலூரில் குழந்தை கடத்தல்!

Comments Off on வேலூரில் குழந்தை கடத்தல்!

பெண் ஒருவர் பச்சிளம் குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவர் வேலூர் அரசு மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆன குழந்தையை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பார்ப்பது போல் வந்த பெண் ஒருவர் குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்திச் சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. கட்டைப்பையில் குழந்தையை எடுத்துச் செல்லும் பெண்ணுடன் ஒரு […]

Continue reading …