Home » Posts tagged with » Netrikkan (Page 15)

கர்நாடக முதலமைச்சரின் பதவி தப்புமா?

Comments Off on கர்நாடக முதலமைச்சரின் பதவி தப்புமா?

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மனைவி பார்வதிக்கு, மைசூருவில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்து புகாரில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கர்நாடக மாநிலம் மைசூரிலுள்ள மூடா எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் 4,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. கர்நாடக முதலமைச்சரின் மனைவி பார்வதிக்கு மைசூரு விஜயநகர் பகுதியில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில், […]

Continue reading …

தமிழக மீனவர்கள் 3 பேருக்கு 18 மாதம் சிறை!

Comments Off on தமிழக மீனவர்கள் 3 பேருக்கு 18 மாதம் சிறை!

தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். மேலும் மூன்று மீனவர்களுக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்து வருவது தொடர்கதை ஆகி வருகிறது. மேலும் மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு, சமூகத் தீர்வு காண வேண்டும் […]

Continue reading …

மோசடி நபரை கைது செய்த சைபர் கிரைம்!

Comments Off on மோசடி நபரை கைது செய்த சைபர் கிரைம்!

சைபர் கிரைம் காவல்துறை டில்லியைச் சேர்ந்த மோசடி நபரை அதிரடியாக கைது செய்துள்ளது. தேனி, கெங்குவார்பட்டியை சேர்ந்த பானுமதி (74) சென்னை ஐஐடி மற்றும் அமெரிக்காவில் உள்ள நார்த் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரிடம் மும்பை காவல் நிலையத்திலிருந்து பேசுவதாக கூறி அவரின் ஆதார் எண் மூலம் சிம் கார்ட் வாங்கப்பட்டிருப்பதாகவும், அந்த சிம் வாட்ஸ் அப் மூலம் pornographic images பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறதாகவும், மும்பை கனரா வங்கிகணக்குடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும் அதன் […]

Continue reading …

தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த அதிமுக பிரமுகர்!

Comments Off on தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த அதிமுக பிரமுகர்!

அதிமுக பிரமுகர் தாம்பரம் பகுதியில் நடந்த கோவில் தீமிதி திருவிழாவில் அவரது மனைவியுடன் தவறி தீயில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஊர்களிலும் ஆடி மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் கோலாகலமாக நடந்து வருகின்றது. அவ்வாறாக தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் உள்ள நாகவல்லி அம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நடந்து வருகிறது. இதில் நேற்று தீமிதி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. திருவிழாவிற்கு அப்பகுதியின் முன்னாள் கவுன்சிலரும், அதிமுக தாம்பரம் மாநகர பொருளாளருமான மாணிக்கம், […]

Continue reading …

கேரளாவுக்கு ரூ.5 கோடி நிதி! ஸ்டாலின் அறிவிப்பு!

Comments Off on கேரளாவுக்கு ரூ.5 கோடி நிதி! ஸ்டாலின் அறிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.5 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளும், பொதுச் சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ளது. இன்று கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். இந்த இயற்கை […]

Continue reading …

ராகுல் காந்தி பட்ஜெட் குறித்து குற்றச்சாட்டு!

Comments Off on ராகுல் காந்தி பட்ஜெட் குறித்து குற்றச்சாட்டு!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மினிமம் பேலன்ஸ் இல்லை எனக் கூறி கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏழை மக்களிடம் இருந்து ரூ.8,500 கோடி அபராதமாக வசூலித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்திரி 2024 நிதியாண்டில் தனி நபர் வங்கிக் கணக்குகளில் மாதாந்திர குறைந்த பட்ச வைப்புத் தொகை [மினிமம் பேலன்ஸ்] இல்லாததால் வசூலிக்கப்பட்ட அபராதம் மட்டுமே ரூ. 2331 கோடி என்று மக்களவையில் தெரிவித்தார். இது குறித்து ராகுல் காந்தி தனது […]

Continue reading …

வயநாட்டில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த கமல் கோரிக்கை!

Comments Off on வயநாட்டில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த கமல் கோரிக்கை!

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கேரளாவில் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், வால்பாறையிலும் நிலச்சரிவினால் ஏற்பட்ட பேரழிவுகள் என் நெஞ்சைப் பதற வைக்கின்றன. தங்களது அன்புக்குரியவர்களையும், வீடு வாசல், உடைமைகளையும் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள், பருவநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கைப் பேரிடர்கள் வழக்கமான நிகழ்வாகிவிட்டன. இதன் தாக்கத்தைப் புரிந்துகொண்டு […]

Continue reading …

திமுக குறித்து அண்ணாமலை கருத்து!

Comments Off on திமுக குறித்து அண்ணாமலை கருத்து!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புதிய ஊழல் பாதையை அமைத்துக் கொடுப்பதில், திமுக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது என கூறியுள்ளார். இதுகுறித்து அவர், “ஊழலுக்கான புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, தனது இந்தி கூட்டணிக் கட்சிகளுக்குப் புதிய ஊழல் பாதையை அமைத்துக் கொடுப்பதில், திமுக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. கடந்த காலங்களில், மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கான மாணவர்களின் தகுதிப் பட்டியலைக் கொடுத்து, கட்சிக்கு நன்கொடை வாங்கும் வழியை அறிமுகப்படுத்திய திமுக, இப்போது நன்கொடை வசூலிப்பதில் புதிய உயரத்துக்குச் சென்றுவிட்டனர். […]

Continue reading …

கர்நாடகாவிலும் நிலச்சரிவா?

Comments Off on கர்நாடகாவிலும் நிலச்சரிவா?

  கேரளாவை அடுத்து கர்நாடக மாநிலத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று கர்நாடக மாநிலத்திலுள்ள ஹாசன் மாவட்டத்தில் மங்களூரு – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூரு பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சீரடி காட் சக்லேஷ்பூர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவை அடுத்து தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து போக்குவரத்தையும் கர்நாடக மாநில அரசு தடை செய்துள்ளது. ஏற்கனவே கேரளாவில் நிகழ்ந்த நிலச்சரிவு காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக […]

Continue reading …

வயநாட்டில் நிலச்சரிவால் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது!

Comments Off on வயநாட்டில் நிலச்சரிவால் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது!

இன்று அதிகாலை வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலையில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டி உள்ளது. நிலச்சரிவால் வயநாட்டின் சூரல்மலா பகுதியில் மட்டும் […]

Continue reading …