Home » Posts tagged with » Netrikkan (Page 200)

ஜி20 உச்சி மாநாட்டில் முக்கிய தலைவர்கள் வரவில்லையா?

Comments Off on ஜி20 உச்சி மாநாட்டில் முக்கிய தலைவர்கள் வரவில்லையா?

ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் எந்த வகையிலும் கலந்து கொள்ள மாட்டார் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு ஒவ்வொரு நாட்டில் நடைபெறும். இவ்வாண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 9, 10) டில்லியில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பல நாட்டு தலைவர்களும் வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாநாட்டிற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வரமாட்டார் என சீனா […]

Continue reading …

அமெரிக்க பொருட்கள் மீதான வரி நீக்கம்!

Comments Off on அமெரிக்க பொருட்கள் மீதான வரி நீக்கம்!

அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. உலகளவில் முக்கியமான ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டில்லியில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் டில்லிக்கு வருகை புரிந்து வருகின்றனர். உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த மாநாட்டிற்கு மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. பிரதமர் மோடி அமெரிக்க […]

Continue reading …

செந்தில் பாலாஜி ஜாமின் மனுவிற்கு நீதிபதி அனுமதி!

Comments Off on செந்தில் பாலாஜி ஜாமின் மனுவிற்கு நீதிபதி அனுமதி!

நீதிபதி அல்லி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கோரி மனுதாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த சில வாரங்களுக்கு முன் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சென்னை முதன்மை நீதிமன்றமும், சென்னை முதன்மை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றமும் தெரிவித்தது. சென்னை முதன்மை நீதிமன்றம் […]

Continue reading …

சாண்டி உம்மன் கேரள இடைத்தேர்தலில் வெற்றி

Comments Off on சாண்டி உம்மன் கேரள இடைத்தேர்தலில் வெற்றி

மறைந்த முன்னாள் முதல்வர் உம்மன் சான்டியின் மகன் கேரளாவில் புதுப்பள்ளி தொகுதிக்கு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் 78,098 வாக்குகள் பெற்று, 36,454 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான சிபிஎம் ஆட்சி கேரள மாநிலத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார். அவரது மறைவையடுத்து, புதுப்பள்ளி தொகுதிக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கேரளா மட்டுமின்றி திரிபுராவில் 2 தொகுதிகள், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், உபி., ஆகிய மாநிலங்களிலும் […]

Continue reading …

இயக்குனர் வெற்றிமாறன் உதயநிதிக்கு ஆதரவு!

Comments Off on இயக்குனர் வெற்றிமாறன் உதயநிதிக்கு ஆதரவு!

சனாதன கருத்துக்கள் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கருத்துகள் தேசியளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பக்கம் நிற்பதாக இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய […]

Continue reading …

ரூ.600 கோடி செலவில் திருப்பதியில் தங்கும் விடுதி

Comments Off on ரூ.600 கோடி செலவில் திருப்பதியில் தங்கும் விடுதி

20 ஆயிரம் பேர் தங்கும் வகையில் திருப்பதியில் 600 கோடி செலவில் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பல பக்தர்கள் தங்கும் வகையில் திருப்பதியில் மையம் உள்ளது.- தற்போது புதிதாக இரண்டு சத்திரங்களை இடித்துவிட்டு 600 கோடி செலவில் 20,000 பேர் தங்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய தங்கம் நிலையங்கள் அமைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இவ்வாண்டு இரண்டு பிரமோற்சவங்கள் நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு […]

Continue reading …

ஜவான் படம் எப்படி இருக்கு?

Comments Off on ஜவான் படம் எப்படி இருக்கு?

அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள “ஜவான்” திரைப்படம் ரசிகர்களிடையே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ் இயக்குனரான அட்லீ இந்தியில் இயக்கும் முதல் திரைப்படம் இது. அனிருத்திற்கும் இந்தியில் முதல் படம் இது. அதுமட்டுமல்லாமல் நிறைய தமிழ் சினிமா நட்சத்திரங்களும் நடித்துள்ளதால் இந்த படத்திற்கு கோலிவுட்டிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துள்ளதாகவே […]

Continue reading …

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சாடல்!

Comments Off on தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சாடல்!

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி “தமிழ்க்குடிமகன்” உட்பட சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “900 திரையரங்குகள் இருந்தும் சிறிய படங்களுக்கான திரைகள் கிடைப்பதில்லை. படம் சுமாராக இருந்தால் பரவாயில்லை. திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனாலும் விமர்சன ரீதியாக நல்ல படம் என அனைவரும் உரக்கச் சொல்லியிருக்கும் படங்களுக்கும் இந்நிலைதான். ஸ்டார் படங்கள் வரும்போது அந்த அலையில் நல்ல சிறு படங்கள் அடித்துப் போவது வாடிக்கையாகிவிட்டது. […]

Continue reading …

ஆளுனரிடம் பாஜக மனு!

Comments Off on ஆளுனரிடம் பாஜக மனு!

பாஜகவினர் சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில், வெறுப்புப் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிடக் கோரி மனு அளித்துள்ளனர். அம்மனுவில், “அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது செய்த பதவிப் பிரமாணத்தை மீறி, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர் பி.கே.சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்த வேண்டும்.” பாஜகவின் மூத்த தலைவர்கள், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்து கோரிக்கை […]

Continue reading …

உதயநிதிக்கு ஆதரவாக முதலமைச்சர் அறிக்கை!

Comments Off on உதயநிதிக்கு ஆதரவாக முதலமைச்சர் அறிக்கை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்த விளக்கத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசிய கருத்துகள் தேசியளவில் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளன. தொடர்ந்து உதயநிதிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் பேசி வருகின்றனர். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதயநிதிக்கு ஆதரவாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “சனாதனக் கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்றுதான் அமைச்சர் உதயநிதி பேசினாரே தவிர எந்த மதத்தையும் மத நம்பிக்கையையும் புண்படுத்தும் […]

Continue reading …