Home » Posts tagged with » Netrikkan (Page 29)

எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி.! சபாநாயகர் கண்டிப்பு!

Comments Off on எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி.! சபாநாயகர் கண்டிப்பு!

பிரதமர் மோடி தேர்தல்களில் தோல்வியடைவதில் காங்கிரஸ் கட்சி உலக சாதனை படைத்துள்ளதாகவும், காங்கிரஸ் கட்சி ஒரு ஒட்டுண்ணியாக மாறிவிட்டது எனவும் விமர்சித்தார். பிரதமர் மோடி மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பதில் உரையில், “எதிர்க்கட்சிகள் பொய் பரப்பினாலும் அதனை நிராகரித்து மக்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் தேர்வு செய்துள்ளனர். பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியை பார்த்து நாட்டு மக்கள் தங்களுக்கு ஓட்டு போட்டுள்ளனர். ஏழைகளின் நலனுக்காக எந்தளவுவுக்கு […]

Continue reading …

விஷ சாராய மரண சம்பவத்தை விசாரணைக்கு எடுத்த ஐகோர்ட்!

Comments Off on விஷ சாராய மரண சம்பவத்தை விசாரணைக்கு எடுத்த ஐகோர்ட்!

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தற்போது இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்ததால் 60க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண சம்பவத்தை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. […]

Continue reading …

திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்; வானதி சீனிவாசன்!

Comments Off on திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்; வானதி சீனிவாசன்!

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் திராவிட மாடலில் கிக் தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள், நிவாரணம் அறிவிப்பதில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கோவை வ.உ.சி பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார். பின் செய்தியாளர்களிடம் அவர், “சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் பேச முற்படும் போது முழுமையாக பேச விடுவதில்லை. சட்டமன்றத்தில் நாங்கள் பேசிய வீடியோக்களை கேட்டால் வெட்டியும், ஒட்டியும் கொடுக்கிறார்கள் […]

Continue reading …

அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

Comments Off on அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

உலக மருத்துவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. என்பதும் அன்றைய தினம் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்து செய்தியில், “உலகின் ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான் அவர்களின் சேவை போற்றப்பட வேண்டும். தேசிய மருத்துவர்கள் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அன்னைக்கு அடுத்தபடியாக உன்னத சேவை செய்பவர்கள் மருத்துவர்கள் தான். உலகின் ஆக்கும் சக்தி […]

Continue reading …

டிடிஎப் வாசனோடு கிஷோர் நடிக்கும் போஸ்டர் ரிலீஸ்!

Comments Off on டிடிஎப் வாசனோடு கிஷோர் நடிக்கும் போஸ்டர் ரிலீஸ்!

மோட்டார் பைக் ஒட்டி அதை வீடியோவாக எடுத்து யூடியூபில் போட்டு பிரபலமானவர் டிடிஎப் வாசன். அதிலும் அவர் வீடியோக்களில் வேகமாக பைக் ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக அடிக்கடி இவர் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார்கள் குவிந்து சில முறை அவர் கைது செய்யப்பட்டார். ஆனாலும் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய அளவில் பிரபலம் கிடைத்துள்ளது. சமீபத்தில் அவர் நடிக்கும் “மஞ்சள் வீரன்” படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை பெற்றது. இந்த […]

Continue reading …

சென்னையில் இருந்து இயக்கப்படும் 12 விமானங்கள் ரத்து!

Comments Off on சென்னையில் இருந்து இயக்கப்படும் 12 விமானங்கள் ரத்து!

சென்னையிலிருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்படும் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விமான பயணிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். சென்னையில் இருந்து சீரடி மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்லும் நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதேபோல் டெல்லி, சீரடி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், நிர்வாக காரணங்களுக்காக இந்த ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் விமான […]

Continue reading …

பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பா?

Comments Off on பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பா?

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நாளை அண்ணா பல்கலைக்கழக நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த சில வருடங்களாகவே தமிழக அரசுக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. நாளை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொள்ள மாட்டார் என்றும் அவர் இந்த விழாவை புறக்கணிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாளை பல்கலைக்கழக வேந்தர் […]

Continue reading …

முதலமைச்சரிடம் மாநில கல்வி கொள்கை பரிந்துரை!

Comments Off on முதலமைச்சரிடம் மாநில கல்வி கொள்கை பரிந்துரை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீட் தேர்வு வேண்டாம் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை கொண்ட மாநில கல்விக் கொள்கை அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவித்து. மேலும் மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தெரிவித்தது. அதன்படி கடந்த 2022ம் ஆண்டு மாநில கல்விக் கொள்கை குறித்த பரிந்துரைகளை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 […]

Continue reading …

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் 11 பேருக்கு சிபிசிஐடி காவல்!

Comments Off on கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் 11 பேருக்கு சிபிசிஐடி காவல்!

நீதிமன்றம் கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைதான 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசு இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது. ஆனால் இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி […]

Continue reading …

ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி!

Comments Off on ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி!

அதிரடியாக தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. ககன்தீப் சிங் பேடி மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு ஊரக வளர்ச்சி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்ரியா சாஹு வனத்துறை செயலாளர் பொறுப்பிலிருந்து மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வி துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத் துறை செயலாளராக இருந்த மணிவாசன் நீர் வளத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நீர்வளத்துறை […]

Continue reading …