
தமிழ் சினிமாவில் 80களின் இறுதியிலும் 90களின் தொடக்கத்திலும் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியவர்களுக்கு இணையாக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். சைக்கிளில் வந்து அவர் வீட்டில் கால்ஷீட் வாங்கி படம் தயாரித்து கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள் உண்டு. அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின் நடிகராக வலம் வந்த அவர் ஒரு கட்டத்தில் தனது படங்கள் தோல்வி அடைந்ததால் மார்க்கெட்டை இழந்தார். அதன் பின் அதிமுகவில் தீவிரமாக இயங்கிய அவர் அதன்பின் அரசியலில் இருந்தும் விலகினார். இப்போது ஓய்வில் இருக்கும் […]
Continue reading …
வெறும் 20 கோடியில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் 200 கோடி வசூல் செய்திருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய திரைப்படம் “காந்தாரா.” இப்படம் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் தற்போது 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. வெறும் […]
Continue reading …
அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் “துணிவு” படத்தின் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அஜீத் நடித்துவரும் “துணிவு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. படத்தின் அடுத்தகட்ட பணியான டப்பிங் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னையிலுள்ள முக்கிய டப்பிங் தியேட்டரில் சமீபத்தில் “துணிவு” படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கத்திற்கான பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதையடுத்து இப்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகளும் தற்போது தொடங்கியுள்ளதாம். படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் […]
Continue reading …
நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் “வாரிசு” திரைப்படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமையைக் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கைப்பற்றியுள்ளார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாவது படக்குழு உறுதி செய்துள்ளது. “வாரிசு” திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிக்கின்றனர். படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் “வார்சாடு” என்ற பெயரில் உருவாகி வரும் இத்திரைப்படம் […]
Continue reading …
வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றது தொடர்பாக விக்னேஷ் சிவன் & நயன்தாரா தம்பதியருக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் மருத்துவமனையிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. திருமணமாகி 4 மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக அவர்கள் பதிவிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர்கள் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதில் விதிமீறல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைத்த விசாரணை குழு […]
Continue reading …
அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பலரது தரப்பிலும் விமர்சித்து வரும் நிலையில் ஆடு வேடத்தில் திரியும் குள்ளநரி நீங்க..! என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கோவை மாநகரின் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியான ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று அதிகாலை கார் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்ற நபர் உடல் சிதறி பலியானார். இந்த கார் வெடிப்பு […]
Continue reading …
செரீனா வில்லியம்ஸ் டென்னிஸ் விளையாட்டிலிருந்து தான் ஓய்வு பெறவில்லை என்றும், தன்னால் இன்னும் டென்னிஸ் விளையாட முடியும் என்றும் தெரிவித்துள்ளார். டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான வில்லியம்ஸ் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தை தரவரிசையில் பெற்றிருந்தார். ஆனால் அதே நேரத்தில் குழந்தை பிறந்த பிறகு செரினா வில்லியம்ஸ் சரியாக விளையாடவில்லை, அதனால் பல தோல்விகளை அடைந்தார் என்று கூறப்பட்டது. குறிப்பாக சமீபத்தில் நடந்த நியூயார்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் 3-வது சுற்றிலேயே அவர் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து செரீனா […]
Continue reading …
கோவை மாநகரில் கார் வெடித்த சம்பவத்தில் சதி முயற்சி செய்ததாக இறந்த முபின் உடலை அடக்கம் செய்வதற்கு அனைத்து ஜமாத்துகளும் மறுப்பு தெரிவித்துள்ளனர். கோவை மாநகரின் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியான ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று முன்தினம் அதிகாலை கார் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்ற நபர் உடல் சிதறி பலியானார். இந்த விபத்து குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவைக்கு நேரடியாக சென்று […]
Continue reading …
பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தீபாவளி பண்டிகையொட்டி 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியன்று அரசு விடுமுறை தினமாக உள்ளது. தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “தீபாவளி பண்டிகையொட்டி 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். மதுவிற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது நல்ல அரசாங்கமாக இருக்க முடியாது; தமிழக அரசு தொடர்ந்து […]
Continue reading …
தமிழக அரசு 10 வது முறையாக நளினிக்கு பரோல் நீட்டிப்பதாக உத்தரவிட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு ஏற்கனவே 9 முறை பரோல் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 10வது முறையும் பரோல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய 6 தமிழர்களில் ஒருவர் நளினி. இவர் வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு […]
Continue reading …