Home » Posts tagged with » Netrikkan (Page 482)

பத்திரிக்கை ஆண்டுவிழாவில் முதலமைச்சர் பேச்சு!

Comments Off on பத்திரிக்கை ஆண்டுவிழாவில் முதலமைச்சர் பேச்சு!
பத்திரிக்கை ஆண்டுவிழாவில் முதலமைச்சர் பேச்சு!

முதலமைச்சர் மலையாள மனோரமா பத்திரிகையின் 75 வது ஆண்டுவிழாவில் நியூஸ் கருத்தரங்கில் மாநில அரசுகளை தன்னிறைவாக வைத்திருந்தால் இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது, “75ம் ஆண்டு கொண்டாட்டம் என்பது வெறும் கொண்டாட்டமாக இல்லாமல், அடுத்த வளர்ச்சிக்கான திட்டமிடலாக இருக்கவேண்டும். மாநில அரசுகள் தன்னிறைவாகக இருந்தால்தான் இந்தியா வலிமையுடன் இருக்கும். ஒரு மாநிலம் தன்னிறைவு பெறுகிறது என்றால் அம்மாநிலம் வளார்ச்சியடைகிறது என்று அர்த்தம். இது மாநிலங்களின் வளர்ச்சி நாட்டை வளப்படுத்தும், பலப்படுத்தும். […]

Continue reading …

“பொன்னியின் செல்வன்” பாடல் ரிலீஸ்!

Comments Off on “பொன்னியின் செல்வன்” பாடல் ரிலீஸ்!

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை ஏ.ஆர்.ரகுமானே பாடியுள்ளார். இப்பாடலை இளங்கோ லட்சுமணன் என்பவர் எழுதியுள்ளார். “பொன்னி நதி” என்று தொடங்கும் பாடல் இணையதளத்தில் மிகப்பெரிய வைரலாகி வருகிறது. சுபாஷ்கரன் தயாரிப்பில், மணிரத்தினம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இத்திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்திய […]

Continue reading …

5ஜி அலைக்கற்றை ஏலத்தை கைப்பற்றிய ஜியோ!

Comments Off on 5ஜி அலைக்கற்றை ஏலத்தை கைப்பற்றிய ஜியோ!

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நிறைவடைந்துள்ளது. அதன்படி ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் நிறைவடைந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் 4ஜி சேவைகள் பிரபலமானதால் இதன் அதிவேக இணைய வசதிக்கு ஏற்ப சந்தையில் குறைந்த விலையிலிருந்து அதிக விலை வரையிலான 4ஜி ஸ்மார்ட்போன்களும் விற்பனையாகிறது. இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த நெட்வொர்க் நிறுவனங்கள் தீவிரமாக காத்திருக்கின்றன. அவ்வகையில் 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் (72 ஜிகா ஹெர்ட்ஸ்) அலைக்கற்றைக்கான ஏலத்தை ஜூலைக்குள் முடிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி 5 […]

Continue reading …

ரெட் அலர்ட்!

Comments Off on ரெட் அலர்ட்!

3 நாட்களுக்கு அதிகமான கனமழைக்கான வாய்ப்பிருப்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை தமிழகத்திற்கு விடுக்கப்பட்டள்ளது. தற்போது மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த சுழற்சி உருவாகியுள்ளது. அதன் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பத்தனம்திட்டா, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் 40-50 கி.மீ வேகத்தில் இருக்கும். ஆகையால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க போக […]

Continue reading …

சென்னையில் 2வது விமான நிலையம்!

Comments Off on சென்னையில் 2வது விமான நிலையம்!

சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய விமான போக்குவரத்து இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். சென்னை மக்கள் பல ஆண்டுகளாக இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்திருந்தது. இந்த நான்கு இடங்களில் பரந்தூர் மற்றும் பன்னூர் ஆகிய இரண்டு இடங்களில் மத்திய அரசு பரிசீலனை செய்தது. இவற்றில் ஒன்றில் சென்னையின் இரண்டாவது […]

Continue reading …

ஒலிம்பியாட்டில் பறந்த தாலிபன் கொடி!

Comments Off on ஒலிம்பியாட்டில் பறந்த தாலிபன் கொடி!

சென்னையில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுகளுக்கு ஆப்கானிஸ்தான் உட்பட 199 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வந்துள்ளனர். ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் வீரர்கள், தலிபான் வெள்ளைக் கொடியை ஏந்தியபடி, அதிகாரப்பூர்வமான முன்னாள் ஆப்கானிஸ்தான் குடியரசின் முன்னாள் மூவர்ணக் கொடியின் கீழ் சர்வதேச விளையாட்டு போட்டியில் விளையாடுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சியின் இயக்குநர் ஜெனரலும், உளவுத்துறையின் செயல் இயக்குநரும், ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் கலாச்சார ஆணையத்தின் துணைத் தலைவருமான அகமதுல்லா வாசிக், குழு உறுப்பினர்களில் […]

Continue reading …

அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

Comments Off on அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

சென்னை, ஜூலை 29- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சூளையில், சொக்கவேல் சுப்பிரமணியர் திருக்கோயில் அமைந்துள்ளது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்களை, குத்தகைக்கு எடுத்த தனிநபர்கள், நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து புகார் அளித்து, சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த […]

Continue reading …

மீண்டும் இணையும் கமலஹாசன் – உதயநிதி!

Comments Off on மீண்டும் இணையும் கமலஹாசன் – உதயநிதி!

சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் “விக்ரம்“ திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது. படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது கமல்ஹாசன் மற்றும் உதயநிதி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ராஜ்கமல் பிலிம்ஸின் 54வது தயாரிப்பு இத்திரைப்படம். இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப […]

Continue reading …

72 துண்டுகளாக மனைவியை வெட்டிய கணவனுக்கு ஜாமீன்!

Comments Off on 72 துண்டுகளாக மனைவியை வெட்டிய கணவனுக்கு ஜாமீன்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மனைவியை 72 துண்டுகளாக வெட்டிய கணவனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது நீதிமன்றம். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2010ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் என்ற பகுதியில் மனைவியைக் கொன்று அவரது உடலை 72 துண்டுகளாக குலாட்டி என்பவர் வெட்டியுள்ளார். இவருக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியிருக்கிறது. இதையடுத்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் தண்டனை பெற்று வரும் குலாட்டிக்கு […]

Continue reading …

ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் சேர்க்கைக்கு நாளை கடைசி நாள்!

Comments Off on ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் சேர்க்கைக்கு நாளை கடைசி நாள்!

கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு நாளையுடன் கடைசி நாள் என்பதால் அரசு கல்லூரிகளில் சேர்வதற்காக மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பிளஸ் டூ, சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து கல்லூரிகளில் விண்ணப்பம் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. ஏற்கனவே 5 நாள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நாளையுடன் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பொறியியல் கல்லூரியில் 2 லட்சத்து 5 ஆயிரம் பேர்களும், […]

Continue reading …