Home » Posts tagged with » Netrikkan (Page 488)

அடுத்த 3 நாட்களுக்கு மழை!

Comments Off on அடுத்த 3 நாட்களுக்கு மழை!

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், கோவை, திருப்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கலில் இன்று கனமழைக்கு […]

Continue reading …

விஜயபாஸ்கர் மீது வழக்கு!

Comments Off on விஜயபாஸ்கர் மீது வழக்கு!

தமிழக அரசுக்கு குட்கா ஊழல் தொடர்பான அதிமுக முன்னாள் அமைச்சர்கள், டிஜிபிக்கள் உட்பட 12 பேரை விசாரிக்க சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தமிழ்நாட்டில் விற்பனை செய்ய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து வழக்கு தொடரப்பட்டு பல திடுக்கிடும் திருப்பங்கள் நிகழ்ந்தது. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே. […]

Continue reading …

வருமான வரித்துறை சோதனை!

Comments Off on வருமான வரித்துறை சோதனை!

வருமான வரித்துறை தமிழகத்தில் இன்று திடீரென்று 20 அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் சோதனை செய்தனர். வருமானவரித் துறையினர் கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது தமிழகத்திலுள்ள பிரபலங்களின் வீடுகளில் மட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகம் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். 20 அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை செய்து வருகின்றனர். மதுரை, […]

Continue reading …

மத்திய அரசு கடிதம்!

Comments Off on மத்திய அரசு கடிதம்!

மத்திய அரசு 9 மாநிலங்களுக்கும் கொரோனா பற்றிய தகவலை குறித்து கடிதம் அனுப்பியுள்ளது. கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக இந்தியாவில் குறைந்திருந்தது. ஆனால் தற்போது தினசரி அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் குறைந்தது. சமீபத்தில் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயர தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,557 பேர் பாதித்துள்ளனர். […]

Continue reading …

அதிமுக அலுவலகம் எடப்பாடியின் வசம்!

Comments Off on அதிமுக அலுவலகம் எடப்பாடியின் வசம்!

எடப்பாடி பழனிசாமியிடம் சென்னை ராயப்பேட்டை உள்ள அதிமுக அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. அதிமுக அலுவலகத்தை கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்ற பொழுது ஓபிஎஸ் கைப்பற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகிய தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து காவல்துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இதனையடுத்து அதிமுக அலுவலகத்தில் வைத்த சீலை அகற்ற வேண்டும் என பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இரு தரப்பிலிருந்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. […]

Continue reading …

சினிமா பாடல்கள் பஸ்சில் போடக்கூடாது!

Comments Off on சினிமா பாடல்கள் பஸ்சில் போடக்கூடாது!

பஸ்சில் அதிக சத்தத்துடன் கூடிய சினிமா பாடல்கள் ஒலிபரப்பட்டு வருகின்றன. இந்த ஒலியால் பயணிகள் மற்றும் கண்டக்டருக்குமிடையேயான தகவல் தொடர்பு பாதிக்கப்படுகிறது. இரட்டை அர்த்தமுள்ள பாடல்களும் இசைக்கப்படுவது, பயணிகளுக்கு இடையூறாக உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் பாண்டியன் சென்னை மாநகரப் போக்குவரத்துத்துறையில் புகார் கூறியுள்ளார். இதையடுத்து, சென்னை மாநகரப் பேருந்துகளில் சினிமாப் பாடல்கள் இசைப்பதற்கு மாநகரப்போக்குவரத்து அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனரின் மன அழுத்தத்தைப் போக்கவே பாடல்கள் இசைக்கப்படுவதாக ஓட்டுநர்கள் தரப்பில் […]

Continue reading …

‘லத்தி’ பட டீசர்!

Comments Off on ‘லத்தி’ பட டீசர்!

‘லத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தொழில்நுட்ப பணிகள் நடைபெறுகிறது. நடிகர் விஷால் நடிப்பில், வினோத் குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள படம் “லத்தி”. இப்படத்தில் விஷாலின் ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி உள்ளது. ஒரு நிமிடத்திற்கு மேல் இந்த டீசரில் விஷால் போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளார். படத்தின் டீசர் ஆரம்பிக்கும் முன்பு சிவாஜிகணேசன், எம்ஜிஆர், கமல், ரஜினி, விஜயகாந்த், விக்ரம், அஜித், விஜய் உட்பட பல […]

Continue reading …

ரூ.500 கோடி கொள்ளை!

Comments Off on ரூ.500 கோடி கொள்ளை!

500 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் நகைகள் ரொக்கம் ராஜபாளையத்தில் மர்மமான முறையில் தம்பதிகள் கொலை செய்து கொள்ளை போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராஜகோபால் குருபாக்கியம் தம்பதியினர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரத்தில் வசித்து வந்தனர். இவர்களின் இரு மகன்களும் வெளியூரில் பணிபுரிவதால் தம்பதிகள் தனியாக வசித்து வருகின்றனர். ராஜகோபால் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராஜபாளையம் பகுதியில் உள்ள பல நிறுவனங்களுக்கும் கடைகளுக்கும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து […]

Continue reading …

இன்ஸ்டாகிராமில் புது அறிமுகம்!

Comments Off on இன்ஸ்டாகிராமில் புது அறிமுகம்!

பணம் அனுப்புவதற்காக பல முறைகள் கையாளப்பட்டு வருகிறது. வங்கிகளின் மூலமாக மட்டுமல்லாமல் கூகுள், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல முறைகளில் தற்போது பணம் அனுப்பலாம். இனி வரும் காலங்களில் விரைவில் இன்ஸ்டாகிராம் மூலமும் பணம் அனுப்பலாம் என்ற முறையை அறிமுகப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கிகளின் மூலமாக மட்டுமே பண மாற்றம் செய்ய முடியும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்த நிலையில் தற்போது தனியார் செயலிகள் மூலம் பணம் அனுப்பலாம் என்ற நிலை வந்துவிட்டது. அவ்வகையில் […]

Continue reading …

மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம்!

Comments Off on மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம்!

12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாணவியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர், அந்த பகுதி மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளியின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இந்நிலையில் இவ்விவகாரத்தில் சரியாக நடவடிக்கை எடுக்காததால் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜெடாவத் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதோடு மட்டுமல்லாமல் மாவட்ட […]

Continue reading …