Home » Posts tagged with » Netrikkan (Page 5)

எலியட்ஸ் கடற்கரையில் மரப்பாதை!

Comments Off on எலியட்ஸ் கடற்கரையில் மரப்பாதை!

மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக மரப்பாதை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் ரூ.1 கோடியே 61 லட்சத்தில் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக மரப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளும் கடல் அலையை ரசிக்க வேண்டும் என்பதற்காக மாநகராட்சி நிர்வாகம், மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் சிறப்பு சுற்றுச்சூழல் அனுமதி பெற்று சென்னை மெரினா கடற்கரையில் 380 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் மரப்பாதை அமைத்து கொடுத்துள்ளது. இது மாற்றுத் திறனாளிகள் மற்றும் […]

Continue reading …

வாழை படத்தைப் பார்த்து அழுத பாலா!

Comments Off on வாழை படத்தைப் பார்த்து அழுத பாலா!

‘வாழை’ என்ற படத்தை தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார். படம் ஆகஸ்ட் 23ம் தேதி ரிலீசாகிறது. சமீபத்தில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயிலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பலர் இப்படத்தைப் […]

Continue reading …

ராயனுக்கு காசோலைகள் கொடுத்த கலாநிதி மாறன்!

Comments Off on ராயனுக்கு காசோலைகள் கொடுத்த கலாநிதி மாறன்!

ஜூலை 26ம் தேதி நடிகர் தனுஷ் நடித்து, இயக்கிய அவரின் 50வது படமான “ராயன்” வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. படத்தில் தனுஷோடு சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார். திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் கலக்கியது. தனுஷின் 50வது படம் என்ற பிராண்டாடோடு வெளியான இந்த படத்தை ரசிகர்கள் லாஜிக் […]

Continue reading …

பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வார்னிங்!

Comments Off on பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வார்னிங்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டத்தை விட கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், மாநில பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ், “கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் தொல்லை விவகாரத்தில், […]

Continue reading …

ஆளுநருடன் தலைமைச் செயலாளர் சந்திப்பு!

Comments Off on ஆளுநருடன் தலைமைச் செயலாளர் சந்திப்பு!

ஆளுநர் ஆர்.என். ரவியை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்தித்து பேசியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்தித்துள்ளார். தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற பின் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து முருகானந்தம் வாழ்த்துப் பெற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 3 மூத்த அமைச்சர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதியவர்களுக்கு […]

Continue reading …

ஜீவனாம்சம் கேட்ட பெண்ணின் வழக்கறிஞரை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி!

Comments Off on ஜீவனாம்சம் கேட்ட பெண்ணின் வழக்கறிஞரை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி!

நீதிபதி ஒருவர் மாதம் 6 லட்சத்துக்கு மேல் ஜீவனாம்சம் கேட்ட பெண்ணின் வழக்கறிஞரை லெப்ட் ரைட் வாங்கியுள்ளார். இது சம்பந்தப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண் ஒருவர் தனது முன்னாள் கணவரிடம் இருந்து தன்னுடைய பராமரிப்பு தொகையாக மாதம் 6 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது பெண்ணின் வழக்கறிஞர் தனது கட்சிக்காரரின் பிசியோதெரபி செலவு, யோகா செலவு, மருத்துவ செலவு, காலணிகள் […]

Continue reading …

கணவர் பதவிக்கு மனைவி நியமனம்!

Comments Off on கணவர் பதவிக்கு மனைவி நியமனம்!

கேரள மாநில தலைமைச் செயலாளர் பணியில் இருந்து ஓய்வு பெறும் அதே நாளில் அந்த பதவிக்கு அவருடைய மனைவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தின் தலைமைச் செயலாளராக இருக்கும் டாக்டர் வேணு என்பவர் ஆகஸ்ட் 31ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவருடைய மனைவி சாரதா முரளிதரன் அடுத்த தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். கணவர் ஓய்வு பெறும் அதே தலைமைச் செயலாளர் பதவியில் மனைவி உட்கார இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கணவர் வகித்த […]

Continue reading …

கொடியை அறிமுகம் செய்த விஜய்!

Comments Off on கொடியை அறிமுகம் செய்த விஜய்!

இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தது. இது குறித்த செய்திகள் பரபரப்பாக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. விஜய்யுடன் கூட்டணி வைக்க சில அரசியல் கட்சி தலைவர்கள் விருப்பப்படுவதாகவும் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வம் காட்டுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. நாம் தமிழர் கட்சியின் சீமான் விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்புவதாகவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனித்து கட்சி நடத்திய அவரால் ஒரு இடத்தில் கூட வெல்ல […]

Continue reading …

பிரதமருக்கு மம்தா கடிதம்!

Comments Off on பிரதமருக்கு மம்தா கடிதம்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ள கடிதத்தில், “நாடு முழுவதும் நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்த வழக்குகள் கவலையளிப்பதாக உள்ளன. கிடைக்கக்கூடிய தரவுகளின்படி […]

Continue reading …

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு அதிரடி உத்தரவு!

Comments Off on சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு அதிரடி உத்தரவு!

  சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 6 கால பூஜை தவிர மற்ற நேரங்களில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்கக் கூடாது என பொது தீட்சிதர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மூன்றாம் தேதி சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆணி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்பந்தமூர்த்தி ராமன் என்பவரால் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அதில், ஆணி திருமஞ்சன திருவிழாவின் போது பக்தர்கள் கனக சபையில் ஏறி […]

Continue reading …