
“மஞ்சும்மள் பாய்ஸ்” திரைப்படம் கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியானது. மலையாள திரைப்படமான திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருந்தனர். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இத்திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற […]
Continue reading …
ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேல் நடந்த முடிந்து கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றன. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்த KKR மற்றும் SRH அணிகள் முதல் குவாலிஃபையர் போட்டியில் கடந்த 21ம் தேதி நடந்தது. இப்போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியைக் காணவந்த […]
Continue reading …
கட்சி தலைவர் ஒருவர் சென்னையில் தனது மனைவியை அபகரித்ததுடன் சொத்திலும் பங்கு கேட்டதால் காங்கிரஸ் பிரமுகர் ஆள் வைத்து கொலை செய்துள்ளார். சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த காங். பிரமுகரான கோபால். 55 வயதான கோபாலின் மனைவி கவுரி. இவர் சில ஆண்டுகள் முன்னதாக கோபாலை பிரிந்துள்ளார். மாங்காடு பகுதியை சேர்ந்த இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி என்ற கட்சியின் மாநில தலைவரான ராஜாஜி என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். ராஜாஜி, கவுரியை தனது மனைவி என்று சொல்லி இருவரும் […]
Continue reading …
புதிதாக ரேசன் அட்டைகள் விண்ணப்பித்தவர்களுக்கு மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு வழங்கப்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் புதிதாக ரேசன் அட்டை பெற 2 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருப்பதாகவும், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெற ரேசன் அட்டை அத்தியாவசிய சான்றாக உள்ளது என்பதால் மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் ரேசன் அட்டைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜுலை […]
Continue reading …
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காதது அவர் ஆளும் தரப்பின் நட்பு வட்டத்தில் உள்ளவர் என்பதாலேயே என்று குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் பிரபல யூடிபரான இர்ஃபான் துபாய் சென்று தனது கர்ப்பிணி மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என ஸ்கேன் செய்து பார்த்ததுடன் அதை வீடியோவாக தனது சேனலிலும் பதிவிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரத்தில் இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வீடியோ பதிவை நீக்கிய இர்ஃபான், […]
Continue reading …
திமுகவின் முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு தலைமையில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349 சங்கம் விழாவையொட்டி திருச்சி ஒத்தக்கடை அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு, எம்.எல்.ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின் குமார், சௌந்திர பாண்டியன்,எம்.பி. பழனியாண்டி, நிர்வாகிகள் மாவட்ட துணைச் செயலாளர் முத்துச் […]
Continue reading …
மத்திய அரசுக்கு முல்லை பெரியாறு அணைக்கு குறுக்கே புதிய அணை கட்ட உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளதை கேரள அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கேரள அரசு சமீபத்தில் முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு சிலந்தி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்டப்போவதாக தீர்க்கமாக அறிவித்துள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கட்சி தலைவர்களும் கேரள அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முல்லை […]
Continue reading …
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அரியானா மாநிலத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற டெம்போ வேனில் பயணம் செய்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஐந்து கட்ட தேர்தல் முடிந்துள்ளது. அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னால் எடப்பாடி பழனிச்சாமி கை காட்டுபவர் தான் பிரதமராக வருவார் என பேசியுள்ளார். பாராளுமன்ற தேர்தல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அதனை அடுத்து பாஜக மற்றும் அதிமுக கூட்டணி ஓரளவு வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டு வருகிறது. அதிமுக கூட்டணி அதிகபட்சமாக 5 தொகுதிகளில் தான் வெற்றி […]
Continue reading …
சமூக வலைதளத்தில் ஹரிஷ் கல்யாண் தான் நடித்த திரைப்படம் ஆஸ்கர் நூலகத்தில் இடம்பெற கோரிக்கை விடப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் “பார்க்கிங்” திரைப்படம் வெளியானது. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண், இந்துஜா மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படம் ஐந்து மொழிகளில் உருவாக இருப்பதாக அதில் ஒரு வெளிநாட்டு மொழி […]
Continue reading …