
தமிழகத்தின் எதிர்கட்சியான அதிமுகவில் ஒற்றைத்தலைமைக்கான பிரச்னை உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கூறியிருப்பதாக ஈபிஎஸ் தனது மனுவில் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பாக அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து மனு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஈபிஎஸ் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை கோரியிருப்பதாக ஈபிஎஸ் தமது மனுவில் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த அலுவலகத்தில் அனைத்து அரசு சார்ந்த அலுவலகங்களும் உள்ளன. இக்கட்டிடம் ரூ.110 கோடியில் 7 அடுக்கு மாடித் தளமாக அமைக்கப்பட்டுள்ளது.
Continue reading …
சமீபத்தில் திரையரங்குகளில் வெளிவந்து சுமார் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள திரைப்படம் “விக்ரம்”. உலகம் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இத்திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை ஹாட் ஸ்டார் நிறுவனம் பெற்றிருந்தது. இப்படம் வரும் ஜூலை மாதம் 8ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்றையும் ஹாட்ஸ்டார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கமல் ஹாசன் விஜய் சேதுபதி நடிப்பில் அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான “விக்ரம்” […]
Continue reading …
நேற்று நுரையீரல் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார். அவரது உடலுக்கு ரஜினிகாந்த் மரியாதை செலுத்தியுள்ளார். கடந்த சில நாட்களாகவே நுரையீரல் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர். அவருக்கு மாற்று நுரையீரல் பொருத்த மருத்துவர்கள் முயற்சித்துள்ளனர். நுரையீரல் தானம் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் அறுவை சிகிச்சை செய்ய தாமதமாகி உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அவதிப்பட்ட வித்யாசாகர் […]
Continue reading …
சொகுசு பஸ் ஒன்று தூத்துக்குடியிலிருந்து கோயம்புத்தூருக்கு செல்லும் வழியில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொகுசு பஸ் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியிலிருந்து கோயம்புத்தூருக்கு நேற்று இரவு புறப்பட்டு ஒட்டாப்பிடாரம் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென பஸ்ஸின் முன்புறத்திலிருந்து புகை அதிக அளவில் வெளிவரத் தொடங்கி உள்ளது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனே பஸ்ஸை நிறுத்தி பயணிகளை இறங்குமாறு கூறியுள்ளார். பீதியடைந்த பயணிகள் அலறியடித்து இறங்கி ஓடியுள்ளனர். உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு […]
Continue reading …
தமிழகம் முழுதும் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க இனி முழு நேரமும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அலுவலகங்களில் பணிக்கு வருபவர்கள் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டிருந்தது. கடந்த சில காலமாக மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. நீண்ட நாட்களுக்கு பின் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு […]
Continue reading …
மேயர் பிரியா ராஜனிடம் திமுக கவுன்சிலர் நேற்று நடைபெற்ற மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் 2 மணி நேரத்திலேயே முடிவடைந்தது. இக்கூட்டத்தில் 200 கவுன்சிலர்களில் 17 பேருக்கு மட்டும் கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டது. பலருக்கும் கேள்வி கேட்க அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு திமுக கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேள்வி நேரம் முடிந்த பின்னர் ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம் பேசினார். கொரோனா தொற்று காரணமாக விரைவாக கூட்டத்தை நடத்தி […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக 11.32 கோடி சொத்து குவித்ததாக தொடர்ந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கே.பி.அன்பழகன் கடந்த அதிமுக ஆட்சியின் போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர். இவர், உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த காலக்கட்டமான 2016 முதல் 2021ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனடிப்படையில் தர்மபுரி லஞ்ச ஒழிப்பு […]
Continue reading …
காஷ்மீர் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இந்தியாவில் உண்மையான இந்துக்களால் வாழமுடியாத சூழல் உருவாகி வருகிறது என கண்டனம் தெரிவித்துள்ளார். சர்மாவிற்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்டவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் ஞானவாபி மசூதி குறித்த பாஜகவைச் சேர்ந்த செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்கள் இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுபோன்ற ஒரு கருத்தைப் பகிர்ந்த டில்லியைச் சேர்ந்த பாஜக தலைவர் […]
Continue reading …
பிரபல நடிகையான மீனாவின் கணவர் வித்யாசாகரின் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது ஒட்டு மொத்த திரைத்துறையையும் பயங்கர அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமாகி இன்று தமிழில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் நடித்துக் கொண்டிருப்பவர் மீனா. இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மீனா பெங்களூருவை சேர்ந்த மென் பொறியாளர் வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வித்யாசாகர் கொரோனா நோய் தொற்றால் […]
Continue reading …