Home » Posts tagged with » Netrikkan (Page 55)

கல்வி கருணாநிதிமயம் ஆவதா? தமிழிசை கேள்வி!

Comments Off on கல்வி கருணாநிதிமயம் ஆவதா? தமிழிசை கேள்வி!

தமிழசை சவுந்தரராஜன் தமி­ழகத்தில் கல்வி கருணாநிதிமயம் ஆகி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். நேற்று குடியாத்தம் அத்தி யோகா இயற்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குமரி அனந்தனை பார்க்க மகள் தமி­ழிசை வந்தார். காட்பாடி ரயில் நிலை­யத்தில் செய்தியாளர்களிடம் தமிழிசை, “வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பயண நேரமும் மிச்சமாகிறது. நடந்து முடிந்த 4 கட்ட தேர்தலிலேயே பாஜ ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகள் கிடைத்து விடும். இருந்தாலும், மக்களை சந்திக்க வேண்டும் […]

Continue reading …

டீசல் பரோட்டாவா? மன்னிப்பு கேட்ட யூடியூபர்!

Comments Off on டீசல் பரோட்டாவா? மன்னிப்பு கேட்ட யூடியூபர்!

மக்கள் பெரும்பாலும் பலவிதமான உணவு வகைகளை தேடி சென்று சாப்பிட தொடங்கியுள்ளனர். சண்டிகரில் ஒரு உணவகத்தில் டீசலை பயன்படுத்தி பரோட்டா செய்ததாக வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. தெருவோரங்களில் உள்ள உணவுக்கடை முதல் ஸ்டார் உணவகங்கள் வரை உணவு சார்ந்த விஷயங்களை பற்றி யூடியூப் சேனல்கள், இன்ஸ்டாக்ராம் பக்கங்களில் வீடியோ எடுத்து பதிவிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இதுபோன்ற வீடியோக்கள் மூலமாக வைரலாவதற்காக சில உணவகத்தை சேர்ந்தவர்களும் டான்ஸ் ஆடிக்கொண்டே சமைப்பது போன்ற சர்க்கஸ் வேலைகளில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், சாக்லேட்டில் […]

Continue reading …

நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு!

Comments Off on நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு!

நாளை தொடங்கவிருந்த நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து சேவை தற்போது வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 14ம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து பிரதமர் மோடி டில்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பயணக் கட்டணமாக 7,670 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால், தொடங்கிய இரண்டாவது நாளே கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டு வாரத்துக்கு மூன்று நாட்கள் என […]

Continue reading …

நிதி நிறுவனங்களில் ரூ.170 கோடி சொத்துக்கள் பறிமுதல்!

Comments Off on நிதி நிறுவனங்களில் ரூ.170 கோடி சொத்துக்கள் பறிமுதல்!

வருமான வரித்துறை அதிகாரிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிதி நிறுவனங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கணக்கில் வராத சுமார் ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்தனர். வருமான வரித்துறை மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள நிதிநிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாக அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள பண்டாரி பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் அலுவலகம் மற்றும் ஆதிநாத் அர்பன் கூட்டுறவு வங்கி உள்ளிட்டவற்றில் அதிரடி சோதனை […]

Continue reading …

சீதைக்கும் ஒரு கோவில்; அமித்ஷா வாக்குறுதி!

Comments Off on சீதைக்கும் ஒரு கோவில்; அமித்ஷா வாக்குறுதி!

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டியதை போல் சீதைக்கும் ஒரு தனியாக கோயில் கட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் வாக்குறுதி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியில் கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற போது ராமர் கோவில் கட்டுவோம் என பாஜக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டு அயோத்தியில் கடந்த சில மாதங்களுக்கு முன் ராமர் கோவில் திறக்கப்பட்டது. 2024ம் ஆண்டு பொதுத் தேர்தல் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. பல வாக்குறுதிகள் பாஜக […]

Continue reading …

ரூ.22 கோடி கொக்கைன் பறிமுதல்!

Comments Off on ரூ.22 கோடி கொக்கைன் பறிமுதல்!

22 கோடி மதிப்புள்ள கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதை பொருள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். நான்கு வெளிநாட்டவர் உள்ளிட்ட 5 பேரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் போதைப் பொருள் ஆங்காங்கே பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஜாபர் சாதிக் என்ற திரை உலக பிரபலம் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர் ரூ.2000 கோடி அளவுக்கு போதை […]

Continue reading …

இந்திய கடற்படையினரின் அதிரடி!

Comments Off on இந்திய கடற்படையினரின் அதிரடி!

அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் என்ற செய்தி தான் வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போது இலங்கை மீனவர்கள் 14 பேர் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்ததாக 14 இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களுக்கு சொந்தமான ஐந்து படகுகளை இந்திய கடற்படை பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 14 பேர் அவர்களது படகுகளை நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைக்கவுள்ளனர். எல்லை […]

Continue reading …

இளையராஜா இசைக் கச்சேரி டிக்கெட் அறிமுகம்!

Comments Off on இளையராஜா இசைக் கச்சேரி டிக்கெட் அறிமுகம்!

வரும் 2024 ஜுலை 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இசைஞானி இளையராஜாவின் நேரடி இன்னிசைக் கச்சேரி சென்னையில் நடைபெறுகிறது. இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ஒருங்கிணைக்கின்றனர். இசை விழா இதுவரை தமிழகம் கண்டிராத அளவில், சகல பாதுகாப்புகளுடன், அனைத்து வசதிகளுடனும் பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளது. இந்த இசை விழாவிற்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் வெளியீட்டு விழா, மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்களின் சார்பில் அமைப்பாளர்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் […]

Continue reading …

யூடியூப் சேனல்கள் குறித்து ஜிவி பிரகாஷ் வருத்தம்!

Comments Off on யூடியூப் சேனல்கள் குறித்து ஜிவி பிரகாஷ் வருத்தம்!

சமீபத்தில் சமூக வலைதளத்தில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை பிரிய இருப்பதாக அறிவித்தார். அதேபோல் சைந்தவியும் தனது கணவரை பிரிவதாக அறிவித்தார். இருவருமே தங்களுடைய அறிவிப்பில் பரஸ்பரம் இருவரும் பிரிய முடிவு செய்திருப்பதாகவும் எங்களுடைய தனி உரிமையை காப்பாற்றும் வகையில் ஊடகங்கள் நண்பர்கள் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாகவும் கேட்டுக் கொண்டனர். தங்கள் கற்பனை கதைகளை ஒரு சில இணையதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் இஷ்டத்துக்கு ஓடவிட்டுள்ளனர். ஜிவி பிரகாஷ் மற்றும் […]

Continue reading …

அமைச்சர் அன்பில் மகேஷ் – இளையராஜா சந்திப்பு!

Comments Off on அமைச்சர் அன்பில் மகேஷ் – இளையராஜா சந்திப்பு!

இசைஞானி இளையராஜாவை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்ததாக அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இப்பதிவில் அவர், “தமிழர்களின் பெருமை அய்யா இசைஞானி இளையராஜா அவர்களை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம். பெண் கல்வியையும், பெண் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையால் ‘பெண்-கல்வி, உரிமைகள், விடுதலை’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டது. அப்பாடல் உருவாக்கத்தில் சகோதரி பவதாரிணி அவர்களின் இசை பங்களிப்புக் குறித்து நன்றியோடு எடுத்துரைத்தோம். அன்போடு வரவேற்று […]

Continue reading …