
திருவண்ணாமலைக்கு இன்று முதல் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் இயக்கப்பட இருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. இந்த ரயில் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. சென்னை கடற்கரை – வேலூர் கண்டோன்மென்ட் இடையே இயக்கப்பட்டு வரும் ரயிலை திருவண்ணாமலை வரை நீடிக்க வேண்டும் என்று நீண்டநாளாக பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இன்று முதல் சென்னை கடற்கரை முதல் திருவண்ணாமலை வரை ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மே 2ம் தேதி […]
Continue reading …
நீலகிரி மாவட்டத்தில் கோடை வெயில் காரணமாக கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் மசினகுடி பகுதியில் கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 50 பசுமாடுகள் உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் கால்நடை வளர்ப்போர் மத்தியில் கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. வரலாறு காணாத அளவிற்கு தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. வெப்ப அலை வீசுவதால் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக […]
Continue reading …
நடிகர் ராகவா லாரன்ஸ், தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் பிரபலாமாகி வருகிறார். தனிப்பட்ட முறையில் இதுவரையில் பல மக்களுக்கு உதவிகள் செய்து வந்தவர், சேவையே கடவுள் எனும் பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார் இந்த அறக்கட்டளை சார்பில் மாற்றத்தை தரும் மாற்றம் செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து செயல்படவுள்ளார். இவர்களுடன் கலக்கப்போவது பாலா, செஃப் வினோத், அறந்தாங்கி நிஷா ஆகியோர் உட்பட இணைந்துள்ளனர். இந்த அறக்கட்டளை மூலம், தமிழக […]
Continue reading …
சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் ரூ.306.32 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாச ஸ்தலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்பபெறக்கூடிய திட்டம் அதாவது, அதன் விலை மீது மேலும் 10 ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்துவிட்டு, பாட்டில்களை திரும்பத்தரக்கூடிய வாடிக்கையாளருக்கு 10 ரூபாயை திருப்பி அளிக்கக்கூடிய திட்டமானது அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் […]
Continue reading …
கங்கை நதியில் பாம்பு கடிபட்ட இளைஞரை மூடநம்பிக்கையால் மிதக்கவிட்டதால் அவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து விதமான நோய்களுக்கும் இன்றைய காலக்கட்டத்தில் நவீன மருத்துவமுறைகள் இருந்தாலும், சில மூடநம்பிக்கைகள் காரணமாக மோசமான விளைவுகளை தேடிக் கொள்ளும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. அப்படியான ஒரு சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் புலன்சாகர் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிராபாத் பகுதியைச் சேர்ந்த வருமாவரித்துறை ஊழியரான விஜய் சிங்கின் இளைய மகன் மோஹித் அனுப்சாகர் கல்லூரியில் […]
Continue reading …
டில்லி மாநில ஆளுநர் வி.கே.சக்சேனா மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் விதிகளை மீறி நியமிக்கப்பட்டதாக கூறி அவர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். ஆளுநர் அலுவலகத்திலிருந்து டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்த ஸ்வாதி மாலிவால், விதிகளுக்கு மாறாக நிறைய ஊழியர்களை நியமனம் செய்ததாகவும், ஒப்பந்த அடிப்படையில், சரியான அணுகுமுறை இல்லாமல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நியமனங்கள் விதிகளுக்கு மீறியிருப்பதால் டில்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா […]
Continue reading …
நடிகர் பிரபு தேவா நடனத்தில் சிறந்ததோடு மட்டுமல்லாமல் அவர் பல படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து உள்ளார். பிரபு தேவா நடன இயக்குனராக பணிபுரிந்த பாடல்களுக்கு நடனமாடும் நிகழ்ச்சிக்கு மாணவ மாணவிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். பிரபுதேவாவின் பாடல்களுக்கு 100 நிமிடங்கள் தொடர்ந்து நடனம் ஆடி உலக சாதனை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு பிரபுதேவா வரவிருப்பதாக கூறியிருந்த நிலையில் வருகை தராமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவ மாணவிகளை நீண்ட நேரம் நிற்க வைத்ததால் பெற்றோர்கள் […]
Continue reading …
மத்திய உள்துறை அமைச்சகம் டில்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் புரளியே என்று விளக்கமளித்துள்ளது. இன்று மின்னஞ்சல் மூலம் டில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள சுமார் 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து பள்ளிகளிலிருந்து மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும்படியான எதுவும் கிடைக்காததால் பெற்றோர்கள் பீதியடைய வேண்டாம் என டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய […]
Continue reading …
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள கல்வேலிபட்டியை சேர்ந்த நாகராஜ் (49) மைக்செட், கல்யாண, அரசியல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மேடை அலங்காரம் செய்வது உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார். இவர் நத்தம் மீனாட்சிபுரத்தில் தனியார் இடத்தில் தகர செட்டு அமைத்து அந்த பொருட்களை அங்கு வைத்து வருகிறார். விழா காலங்களில் பயன்படுத்தப்படும் கலைநயம் மிக்க அலங்கார பொருட்கள், மைக் செட்டுகள், கூம்பு வடிவ குழாய்கள் மைக் செட் பாக்ஸ்கள் டியூப் லைட்டுகள், சீரியல் லைட்டுகள் மற்றும் தளவாடப் பொருள்கள் […]
Continue reading …
பொதுமக்கள் கேரளாவில் அறிவிக்கப்படாத மின்தடை அடிக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் ஒருவர் “முன்பெல்லாம் வீட்டுக்கு ஒரு ஏசி இருந்தது ஆனால் இப்போது வீட்டுக்கு நான்கு ஏசி உள்ளது அதனால் தான் மின்தடை ஏற்பட்டது” என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி மின்தடை குறித்து கூறும்போது, “மின்சாரம் பயன்படுத்துவதில் பொதுமக்கள் கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் ஒரு வீட்டில் ஒரு ஏசி இருந்த […]
Continue reading …