
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடிகர் அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று நடிகர் அஜீத் குமார் தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அஜீத்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். மேலும் நடிகர் அஜீத்தின் “தீனா” உள்ளிட்ட பல படங்கள் தியேட்டர்களில் ரீ ரிலிஸ் செய்யப்பட்டுள்ளன. அந்த படங்களை பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். நடிகர் அஜீத்குமாருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், […]
Continue reading …
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தன்னை மூத்த அமைச்சர் என சொல்லி கொள்ளும் துரைமுருகன் மேகதாது விவகாரதில் என்ன நிர்வாகம் செய்கிறார் என்று கேள்வி எழுப்பி உள்ளார். தேமுதிக தலைமை அலுவலகத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு, உதவித்தொகை மற்றும் சீருடைகள் வழங்கிய பின் செய்தியாளர்களிடம், “இதுவரை எத்தனையோ தேர்தலை பார்த்திருக்கிறோம், ஆனால் இம்முறை வாக்கு சதவீதம் அறிவிப்பதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. கடைசியில் 69 […]
Continue reading …
சல்மான் கான் வீடருகே கடந்த சில நாட்களுக்கு முன் துப்பாக்கி சூடு நடந்தது. இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இத்தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏப்ரல் மாதம் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீட்டின் அருகே திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இது குறித்து அனுஜ்தாபன் கைது செய்யப்பட்டார். மும்பை சிறப்பு பிரிவு போலீஸ் காவலிலிருந்தவர் இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர் எதற்காக தற்கொலை […]
Continue reading …
இரண்டு பேர் ஓட்டலில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட சில நிமிடங்களில் அவர்கள் உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஓட்டலில் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்ற சாப்பிட்ட இரண்டு நபர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் திடீரென உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவரின் பரிசோதனையில் அவர்கள் சாப்பிட்ட […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 10-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கருணாநிதி குறித்து இடம்பெற்றுள்ள பாடத்தை நீக்குவோம் என தெரிவித்துள்ளார். சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம், “மே தினம் தொழிலாளர் வர்க்கத்தினரின் தியாகத்தால் உருவானது எனவும் தொழிலாளர்கள் நலனைக் காத்தவர் எம்ஜிஆர். திமுக அரசு தொழிலாளர்களின் மீது விரோத போக்கை கடைபிடித்துக் கொண்டு வருவதாகவும் திமுக ஆட்சியில் தொழிலாளர்கள் பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நடிகர் அஜீத்குமாருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். நடிகர்களில் தைரியமாக செயல்படக்கூடியவர் அஜீத்குமார். […]
Continue reading …
பிரதமர் மோடி பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சமூக வலைதளங்களில் கர்நாடகாவின் ஹாசன் எம்பியான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் பரவி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “கர்நாடகாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூரமான குற்றங்கள் குறித்து நரேந்திர மோடி பேசாமல் எப்போதும் போல் மவுனம் காத்து வருகிறார். இது குறித்து […]
Continue reading …
நடிகர் விஜய்குமார், ‘உறியடி’, ‘உறியடி 2’, ‘ஃபைட் கிளப்’ என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை வழங்கியவர். இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ‘எலக்சன்’ திரைப்படம், மே 17ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். ‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ‘அயோத்தி’ புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் […]
Continue reading …
நேற்று ஓய்வு எடுப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றுள்ளார். அதற்கு முந்தைய நாள் கோட்டைக்கு சென்று சில முக்கிய ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. அதிகாரிகளுடன் தமிழகத்தில் போதுமான தண்ணீர் இருப்பு இருக்கிறதா? அதேபோல் மின்தடை ஏற்படாமல் கோடையை சமாளிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு சில அறிவுரைகளையும் கூறிவிட்டு முதல்வர் கொடைக்கானல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அன்றைய தினம் சித்ரா பௌர்ணமி என்பதால் கோட்டைக்கு […]
Continue reading …
பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளதாக பெருமிதம் கொண்டுள்ளார். பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலம் மத் நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், “காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சிக்கும், கடந்த 10 ஆண்டுகால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் பார்க்கிறார்கள். கடந்த 60 ஆண்டுகளாக அவர்கள் சாதிக்காததை 10 ஆண்டுகளில் பாஜக சாதித்துள்ளது. ரயில்வே, சாலைவசதி மற்றும் விமானநிலையங்களில் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. உள்கட்டமைப்புக்கான பாஜகவின் ஆண்டு பட்ஜெட், […]
Continue reading …
பதஞ்சலி நிறுவனத்தின் 14 பொருட்களின் தயாரிப்புக்கு தவறான விளம்பரங்கள் செய்த புகாரில் தடைவிதித்து உத்தராகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனம், பல்பொடி, சோப்பு, உணவுப் பொருட்கள் என பல்வேறு பொருட்களை யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் இணைந்து தொடங்கிய ஆயுர்வேத முறைப்படி தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆயுர்வேத தயாரிப்பு குறித்து விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனம், கொரோனா மருந்து குறித்து தவறான தகவல்களை தெரிவித்திருந்ததாக […]
Continue reading …